8
அவர் வந்து பாவம், நிதீ, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.
9
பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது: ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.
10
நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது: நான் தந்தையிடம் செல்கிறேன்: நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள்.
11
தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது: ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றவிட்டான்.
12
“நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது.
13
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்: தாம் கேட்பதையே பேசுவார்: வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.
14
அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.
15
தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் “அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்” என்றேன்.