சங்கீதம் 51:1-5 - WCV
1
கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்: உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்: என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்:
3
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்: என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.
4
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்: உம் பார்வையில் தீயது செய்தேன்: எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்: உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
5
இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்: பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.