அப்போஸ்தலர் 8:9-11 - WCV
9
அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மாயவித்தைகளால் சமாரியாவின் மக்கள் எல்லாரையும் மலைப்புக்குள்ளாக்கித் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிவந்தான்.
10
சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும், “மாபெரும் வல்லமையாம் கடவுளின் வல்லமை இவரிடம் உள்ளது” என்று கூறி அவனுக்குச் செவிசாய்த்தனர்.
11
அவன் தன் மாய வித்தைகளால் நெடுங்காலமாக அவர்களை மலைப்புக்குள்ளாக்கியதால் அவர்கள் அவனுக்குச் செவிசாய்த்தார்கள்.