| 1 | வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? | 1சாமு 24:2 சங் 104:18 |
| 2 | அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? | எரே 2:24 |
| 3 | அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும். |
| 4 | அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும். |
| 5 | காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? | யோபு 6:5 யோபு 11:12 யோபு 24:5 ஆதி 16:12 சங் 104:11 ஏசா 32:14 எரே 2:24 எரே 14:6 தானி 5:21 ஓசி 8:9 |
| 6 | அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன். | உபா 29:23 சங் 107:34 எரே 17:6 எசே 47:11 |
| 7 | அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை. | யோபு 39:18 யோபு 3:18 ஏசா 31:4 |
| 8 | அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும். | யோபு 40:15 யோபு 40:20-22 ஆதி 1:29 ஆதி 1:30 சங் 104:27 சங் 104:28 சங் 145:15 சங் 145:16 |
| 9 | காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ? | எண் 23:22 உபா 33:17 சங் 22:21 சங் 92:10 |
| 10 | படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலே பூட்டுவாயோ? அது உனக்கு இசைந்து பரம்படிக்குமோ? | யோபு 39:5 யோபு 39:7 யோபு 1:14 யோபு 41:5 சங் 129:3 ஓசி 10:10 ஓசி 10:11 மீகா 1:13 |
| 11 | அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ? | சங் 20:7 சங் 33:16 சங் 33:17 சங் 147:10 ஏசா 30:16 ஏசா 31:1-3 |
| 12 | உன் தானியத்தை அது உன்வீட்டில் கொண்டுவந்து, உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ? | நெகே 13:15 ஆமோ 2:13 |
| 13 | தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ? | 1இரா 10:22 2நாளா 9:21 |
| 14 | அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய், |
| 15 | காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை. |
| 16 | அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக்காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம். | புலம் 4:3 |
| 17 | தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார். | யோபு 17:4 யோபு 35:11 உபா 2:30 2நாளா 32:31 ஏசா 19:11-14 ஏசா 57:17 யாக் 1:17 |
| 18 | அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம்பண்ணும். | யோபு 39:7 யோபு 39:22 யோபு 5:22 யோபு 41:29 2இரா 19:21 |
| 19 | குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ? | யாத் 15:1 சங் 147:10 |
| 20 | ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கிறது. | யோபு 41:20 யோபு 41:21 எரே 8:16 |
| 21 | அது தரையிலே தாளடித்து, தன் பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும். | நியா 5:22 |
| 22 | அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும். | யோபு 39:16 யோபு 39:18 யோபு 41:33 |
| 23 | அம்பறாத்தூணியும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது, | யோபு 41:26-29 |
| 24 | கர்வமும் மூர்க்கமுங்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும். | யோபு 37:20 ஆபகூ 1:8 ஆபகூ 1:9 |
| 25 | எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம்பிடிக்கும். | சங் 70:3 எசே 26:2 எசே 36:2 |
| 26 | உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ? | லேவி 16:11 உபா 14:15 |
| 27 | உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ? | யாத் 19:4 லேவி 11:13 சங் 103:5 நீதி 23:5 ஏசா 40:31 ஓசி 8:1 |
| 28 | அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும். றல். | 1சாமு 14:4 |
| 29 | அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும். | யோபு 9:26 |
| 30 | அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார். | எசே 39:17-19 மத் 24:28 லூக் 17:37 |