இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 40

                   
புத்தகங்களைக் காட்டு
1பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக:யோபு 40:6 யோபு 38:1
2சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார்.யோபு 9:3 யோபு 33:13 பிரச 6:10 ஏசா 45:9-11 ஏசா 50:8 1கொரி 10:22
3அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
4இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.யோபு 42:6 ஆதி 18:27 ஆதி 32:10 2சாமு 24:10 1இரா 19:4 எஸ்றா 9:6 எஸ்றா 9:15 நெகே 9:33 சங் 51:4 சங் 51:5 ஏசா 6:5 ஏசா 53:6 ஏசா 64:6 தானி 9:5 தானி 9:7 லூக் 5:8 லூக் 15:18 லூக் 15:19 லூக் 18:13 1தீமோ 1:15
5நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.யோபு 34:31 யோபு 34:32 ரோம 3:19
6அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.யோபு 38:1 சங் 50:3 சங் 50:4 எபிரெ 12:18-20 2பேது 3:10-12
7இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.யோபு 13:22 யோபு 23:3 யோபு 23:4 யோபு 38:3
8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?சங் 51:4 ரோம 3:4
9தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?யோபு 9:4 யோபு 23:6 யோபு 33:12 யோபு 33:13 யாத் 15:6 சங் 89:10 சங் 89:13 ஏசா 45:9 1கொரி 10:22
10இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,யோபு 39:19 சங் 93:1 சங் 104:1 சங் 104:2 ஏசா 59:17
11நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,யோபு 20:23 யோபு 27:22 உபா 32:22 சங் 78:49 சங் 78:50 சங் 144:6 ரோம 2:8 ரோம 2:9
12பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.சங் 60:12 நீதி 15:25 ஏசா 10:6 சகரி 10:5 மல்கி 4:3 ரோம 16:20
13நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.யோபு 14:13 சங் 49:14 ஏசா 2:10
14அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன்.சங் 44:3 சங் 44:6 ஏசா 40:29 ரோம 5:6 எபே 2:4-9
15இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத்தின்னும்.ஆதி 1:24-26
16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
17அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.யோபு 41:23
18அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.யோபு 7:12 ஏசா 48:4
19அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.யோபு 26:13 சங் 104:24
20காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.யோபு 40:15 சங் 147:8 சங் 147:9
21அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.ஏசா 19:6 ஏசா 19:7 ஏசா 35:7
22தழைகளின் நிழல் அதைக்கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.லேவி 23:40 ஏசா 15:7 எசே 17:5
23இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.ஏசா 37:25
24அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?யோபு 41:1 யோபு 41:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.