| 1 | பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக: | யோபு 40:6 யோபு 38:1 |
| 2 | சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன் பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார். | யோபு 9:3 யோபு 33:13 பிரச 6:10 ஏசா 45:9-11 ஏசா 50:8 1கொரி 10:22 |
| 3 | அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: |
| 4 | இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். | யோபு 42:6 ஆதி 18:27 ஆதி 32:10 2சாமு 24:10 1இரா 19:4 எஸ்றா 9:6 எஸ்றா 9:15 நெகே 9:33 சங் 51:4 சங் 51:5 ஏசா 6:5 ஏசா 53:6 ஏசா 64:6 தானி 9:5 தானி 9:7 லூக் 5:8 லூக் 15:18 லூக் 15:19 லூக் 18:13 1தீமோ 1:15 |
| 5 | நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். | யோபு 34:31 யோபு 34:32 ரோம 3:19 |
| 6 | அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார். | யோபு 38:1 சங் 50:3 சங் 50:4 எபிரெ 12:18-20 2பேது 3:10-12 |
| 7 | இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு. | யோபு 13:22 யோபு 23:3 யோபு 23:4 யோபு 38:3 |
| 8 | நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? | சங் 51:4 ரோம 3:4 |
| 9 | தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ? | யோபு 9:4 யோபு 23:6 யோபு 33:12 யோபு 33:13 யாத் 15:6 சங் 89:10 சங் 89:13 ஏசா 45:9 1கொரி 10:22 |
| 10 | இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு, | யோபு 39:19 சங் 93:1 சங் 104:1 சங் 104:2 ஏசா 59:17 |
| 11 | நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு, | யோபு 20:23 யோபு 27:22 உபா 32:22 சங் 78:49 சங் 78:50 சங் 144:6 ரோம 2:8 ரோம 2:9 |
| 12 | பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு. | சங் 60:12 நீதி 15:25 ஏசா 10:6 சகரி 10:5 மல்கி 4:3 ரோம 16:20 |
| 13 | நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு. | யோபு 14:13 சங் 49:14 ஏசா 2:10 |
| 14 | அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன். | சங் 44:3 சங் 44:6 ஏசா 40:29 ரோம 5:6 எபே 2:4-9 |
| 15 | இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத்தின்னும். | ஆதி 1:24-26 |
| 16 | இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. |
| 17 | அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. | யோபு 41:23 |
| 18 | அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது. | யோபு 7:12 ஏசா 48:4 |
| 19 | அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். | யோபு 26:13 சங் 104:24 |
| 20 | காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். | யோபு 40:15 சங் 147:8 சங் 147:9 |
| 21 | அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும். | ஏசா 19:6 ஏசா 19:7 ஏசா 35:7 |
| 22 | தழைகளின் நிழல் அதைக்கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும். | லேவி 23:40 ஏசா 15:7 எசே 17:5 |
| 23 | இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும். | ஏசா 37:25 |
| 24 | அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்? | யோபு 41:1 யோபு 41:2 |