| 1 | பின்னும் எலிகூ மாறுத்தரமாக: |
| 2 | ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். | நீதி 1:5 1கொரி 10:15 1கொரி 14:20 |
| 3 | வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும். | யோபு 6:30 யோபு 12:11 1கொரி 2:15 எபிரெ 5:14 |
| 4 | நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக. | யோபு 34:36 நியா 19:30 நியா 20:7 1கொரி 6:2-5 கலா 2:11-14 1தெச 5:21 |
| 5 | யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், | யோபு 10:7 யோபு 11:4 யோபு 16:17 யோபு 29:14 யோபு 32:1 யோபு 33:9 |
| 6 | நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே. | யோபு 27:4-6 |
| 7 | யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து, | யோபு 15:16 உபா 29:19 நீதி 1:22 நீதி 4:17 |
| 8 | அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்? | யோபு 2:10 யோபு 11:3 யோபு 15:5 சங் 1:1 சங் 26:4 சங் 50:18 சங் 73:12-15 நீதி 1:15 நீதி 2:12 நீதி 4:14 நீதி 13:20 1கொரி 15:33 |
| 9 | எப்பயடியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே. | யோபு 9:22 யோபு 9:23 யோபு 9:30 யோபு 9:31 யோபு 21:14-16 யோபு 21:30-16 யோபு 22:17 யோபு 35:3 மல்கி 3:14 |
| 10 | ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. | யோபு 34:2 யோபு 34:3 யோபு 34:34 நீதி 6:32 நீதி 15:32 |
| 11 | மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார். | யோபு 33:26 சங் 62:12 நீதி 24:12 எரே 32:19 எசே 33:17-20 மத் 16:27 ரோம 2:6 2கொரி 5:10 1பேது 1:17 வெளிப் 22:12 |
| 12 | தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே. | சங் 11:7 சங் 145:17 ஆபகூ 1:12 ஆபகூ 1:13 |
| 13 | பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்? | யோபு 36:23 யோபு 38:4-41 யோபு 40:8-11 1நாளா 29:11 நீதி 8:23-30 ஏசா 40:13 ஏசா 40:14 தானி 4:35 ரோம 11:34-36 |
| 14 | அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார். | யோபு 7:17 யோபு 9:4 |
| 15 | அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான். | யோபு 30:23 ஆதி 3:19 சங் 90:3-10 பிரச 12:7 ஏசா 27:4 ஏசா 57:16 |
| 16 | உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும். | யோபு 12:3 யோபு 13:2-6 |
| 17 | நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ? | ஆதி 18:25 2சாமு 23:3 ரோம 3:5-7 |
| 18 | ஒரு ராஜைவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்லத்தகுமோ? | யாத் 22:28 நீதி 17:26 அப் 23:3 அப் 23:5 ரோம 13:7 1பேது 2:17 2பேது 2:10 யூதா 1:8 |
| 19 | இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே. | யோபு 13:8 உபா 10:17 2நாளா 19:7 அப் 10:34 ரோம 2:11 கலா 2:6 எபே 6:9 கொலோ 3:25 1பேது 1:17 எபிரெ 12:28 |
| 20 | இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள். | சங் 73:19 ஏசா 30:13 ஏசா 37:38 தானி 5:30 லூக் 12:20 அப் 12:23 1தெச 5:2 2பேது 2:3 |
| 21 | அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். | யோபு 31:4 ஆதி 16:13 2நாளா 16:9 சங் 34:15 சங் 139:23 நீதி 5:21 நீதி 15:3 எரே 16:17 எரே 17:10 எரே 32:19 ஆமோ 9:8 |
| 22 | அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரணஇருளுமில்லை. | சங் 139:11 சங் 139:12 ஏசா 29:15 எரே 23:24 ஆமோ 9:2 ஆமோ 9:3 1கொரி 4:5 எபிரெ 4:13 வெளிப் 6:15 வெளிப் 6:16 |
| 23 | மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார். | யோபு 34:10-12 யோபு 11:6 எஸ்றா 9:13 சங் 119:137 ஏசா 42:3 தானி 9:7-9 |
| 24 | ஆராய்ந்து முடியாத நியாயமாய் அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறே மனுஷரை அவர்கள் ஸ்தானத்திலே நிறுத்துகிறார். | யோபு 19:2 சங் 2:9 சங் 72:4 சங் 94:5 எரே 51:20-23 தானி 2:21 தானி 2:34 தானி 2:35 தானி 2:44 தானி 2:45 |
| 25 | அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துப்போடுகிறார். | சங் 33:15 ஏசா 66:18 ஓசி 7:2 ஆமோ 8:7 வெளிப் 20:12 |
| 26 | அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும், | யாத் 14:30 உபா 13:9-11 உபா 21:21 2சாமு 12:11 2சாமு 12:12 சங் 58:10 சங் 58:11 ஏசா 66:24 1தீமோ 5:20 1தீமோ 5:24 வெளிப் 18:9 வெளிப் 18:10 வெளிப் 18:20 |
| 27 | எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக் கேட்கிற அவர், | 1சாமு 15:11 சங் 125:5 செப் 1:6 லூக் 17:31 லூக் 17:32 அப் 15:38 2தீமோ 4:10 எபிரெ 10:39 |
| 28 | எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார். | யோபு 22:9 யோபு 22:10 யோபு 24:12 யோபு 29:12 யோபு 29:13 யோபு 31:19 யோபு 31:20 யோபு 35:9 யாத் 2:23 யாத் 2:24 யாத் 3:7 யாத் 3:9 சங் 12:5 ஏசா 5:7 யாக் 5:4 |
| 29 | மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும், | யோபு 29:1-3 2சாமு 7:1 ஏசா 14:3-8 ஏசா 26:3 ஏசா 32:17 யோவா 14:27 ரோம 8:31-34 பிலிப் 4:7 |
| 30 | ஒரு ஜனத்துக்கானாலும் ஒரு மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்? | யோபு 34:21 1இரா 12:28-30 2இரா 21:9 சங் 12:8 பிரச 9:18 ஓசி 5:11 ஓசி 13:11 மீகா 6:16 2தெச 2:4-11 வெளிப் 13:3 வெளிப் 13:4 வெளிப் 13:11-14 |
| 31 | நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன். | யோபு 33:27 யோபு 40:3-5 யோபு 42:6 லேவி 26:41 எஸ்றா 9:13 எஸ்றா 9:14 நெகே 9:33-38 எரே 31:18 எரே 31:19 தானி 9:7-14 மீகா 7:9 |
| 32 | நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம்பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே. | யோபு 10:2 சங் 19:12 சங் 25:4 சங் 25:5 சங் 32:8 சங் 139:23 சங் 139:24 சங் 143:8-10 |
| 33 | நீர் அப்படிச் செய்யமாட்டோமென்கிறபடியினால், உம்மோடிருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும். | யோபு 9:12 யோபு 18:4 ஏசா 45:9 ரோம 9:20 ரோம 11:35 |
| 34 | யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று, | யோபு 34:2 யோபு 34:4 யோபு 34:10 யோபு 34:16 1கொரி 10:15 |
| 35 | புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான். | யோபு 13:2 யோபு 15:2 யோபு 35:16 யோபு 38:2 யோபு 42:3 |
| 36 | அக்கிரமக்காரர் சொன்ன மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றமுடிய சோதிக்கப்படவேண்டியதே என் அபேட்சை. | யோபு 23:16 சங் 17:3 சங் 26:2 யாக் 5:11 |
| 37 | தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான். | 1சாமு 15:23 ஏசா 1:19 ஏசா 1:20 |