இணை வசன வேதாகமம்

Click to Subscribe

யோபு 33

                   
புத்தகங்களைக் காட்டு
1யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.யோபு 13:6 யோபு 34:2 சங் 49:1-3 மாற் 4:9
2இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.யோபு 3:1 சங் 78:2 மத் 5:2
3என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.யோபு 27:4 நீதி 8:7 நீதி 8:8 1தெச 2:3 1தெச 2:4
4தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.யோபு 10:12 யோபு 32:8 ஆதி 2:7 சங் 33:6 ரோம 8:2 1கொரி 15:45
5உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.யோபு 33:32 யோபு 33:33 யோபு 32:1 யோபு 32:12
6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.யோபு 9:32-35 யோபு 13:3 யோபு 20:22 யோபு 23:3 யோபு 23:4 யோபு 31:35
7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.யோபு 9:34 யோபு 13:21 சங் 88:16
8நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:உபா 13:14 எரே 29:23
9நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.யோபு 9:17 யோபு 10:7 யோபு 11:4 யோபு 16:17 யோபு 23:11 யோபு 23:12 யோபு 27:5 யோபு 27:6 யோபு 29:14
10இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப்பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.யோபு 9:30 யோபு 9:31 யோபு 10:15-17 யோபு 13:25 யோபு 14:16 யோபு 34:5
11அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.யோபு 13:27 சங் 105:18 எரே 20:2 அப் 16:24
12இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.யோபு 1:22 யோபு 34:10-12 யோபு 34:17-19 யோபு 34:23-19 யோபு 35:2 யோபு 36:22 யோபு 36:23 எசே 18:25 ரோம 9:19-21
13அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்?யோபு 9:14 யோபு 15:25 யோபு 15:26 ஏசா 45:9 எரே 50:24 எசே 22:14 அப் 5:39 அப் 9:4 அப் 9:5 1கொரி 10:22
14தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.யோபு 40:5 சங் 62:11
15கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,யோபு 4:13 ஆதி 20:3 ஆதி 31:24 எண் 12:6 எரே 23:28 தானி 4:5 எபிரெ 1:1
16அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,யோபு 36:10 யோபு 36:15 2சாமு 7:27 சங் 40:6 ஏசா 6:10 ஏசா 48:8 ஏசா 50:5 லூக் 24:45 அப் 16:14
17மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.யோபு 17:11 ஆதி 20:6 ஏசா 23:9 ஓசி 2:6 மத் 27:19 அப் 9:2-6
18இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.அப் 16:27-33 ரோம 2:4 2பேது 3:9 2பேது 3:15
19அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.யோபு 5:17 யோபு 5:18 உபா 8:5 சங் 94:12 சங் 119:67 சங் 119:71 ஏசா 27:9 1கொரி 11:32 வெளிப் 3:19
20அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்.சங் 107:17 சங் 107:18
21அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.யோபு 7:5 யோபு 13:28 யோபு 14:20 யோபு 14:22 யோபு 19:20 சங் 32:3 சங் 32:4 சங் 39:11 சங் 102:3-5 நீதி 5:11
22அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.யோபு 7:7 யோபு 17:1 யோபு 17:13-16 1சாமு 2:6 சங் 30:3 சங் 88:3-5 ஏசா 38:10
23ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,நியா 2:1 2நாளா 36:15 2நாளா 36:16 ஆகா 1:13 மல்கி 2:7 மல்கி 3:1 2கொரி 5:20
24அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.யோபு 33:18 யோபு 22:21 யாத் 33:19 யாத் 34:6 யாத் 34:7 சங் 86:5 சங் 86:15 ஓசி 14:2 ஓசி 14:4 மீகா 7:18-20 ரோம 5:20 ரோம 5:21
25அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.2இரா 5:14
26அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.2இரா 20:2-5 2நாளா 33:12 2நாளா 33:13 2நாளா 33:19 சங் 6:1-9 சங் 28:1 சங் 28:2 சங் 28:6 சங் 30:7-11 சங் 41:8-11 சங் 50:15 சங் 91:15 சங் 116:1-6 ஏசா 30:19 எரே 33:3 யோனா 2:2-7 அப் 9:11
27அவன் மனுஷரை நோக்கிப் பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.ஆதி 16:13 2நாளா 16:9 சங் 11:4 சங் 14:2 சங் 139:1-4 நீதி 5:21 நீதி 15:3 எரே 23:24
28என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.யோபு 33:18 யோபு 33:24 யோபு 17:16 சங் 55:23 சங் 69:15 ஏசா 38:17 ஏசா 38:18 வெளிப் 20:1-3
29இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,யோபு 33:14-17 1கொரி 12:6 2கொரி 5:5 எபே 1:11 பிலிப் 2:13 கொலோ 1:29 எபிரெ 13:21
30அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.யோபு 33:24 யோபு 33:28 சங் 40:1 சங் 40:2 சங் 118:17 சங் 118:18
31யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.யோபு 13:6 யோபு 18:2 யோபு 21:2 யோபு 32:11
32சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.யோபு 15:4 யோபு 15:5 யோபு 21:27 யோபு 22:5-9 யோபு 27:5
33ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.சங் 34:11 நீதி 4:1 நீதி 4:2 நீதி 5:1 நீதி 5:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.