| 1 | இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன். | யோபு 19:13-19 யோபு 29:8-10 2இரா 2:23 ஏசா 3:5 |
| 2 | விருத்தாப்பியத்தினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது. |
| 3 | குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய், | யோபு 24:13-16 |
| 4 | செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுப்பூண்டுகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது. | 2இரா 4:38 2இரா 4:39 ஆமோ 7:14 லூக் 15:16 |
| 5 | அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத் துரத்துகிறதுபோல்: கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள். | ஆதி 4:12-14 சங் 109:10 தானி 4:25 தானி 4:32 தானி 4:33 |
| 6 | அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள். | நியா 6:2 1சாமு 22:1 1சாமு 22:2 ஏசா 2:19 வெளிப் 6:15 |
| 7 | செடிகளுக்குள்ளிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்கினார்கள். | யோபு 6:5 யோபு 11:12 ஆதி 16:12 |
| 8 | அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள். | 2இரா 8:18 2இரா 8:27 2நாளா 22:3 சங் 49:10-13 எரே 7:18 மாற் 6:24 |
| 9 | ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன். | யோபு 17:6 சங் 35:15 சங் 35:16 சங் 44:14 சங் 69:12 புலம் 3:14 புலம் 3:63 |
| 10 | என்னை அருவருத்து, எனக்குத்தூரமாகி, என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள். | யோபு 19:19 யோபு 42:6 சங் 88:8 சகரி 11:8 |
| 11 | நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள். | யோபு 12:18 யோபு 12:21 2சாமு 16:5-8 |
| 12 | வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள். | யோபு 19:18 ஏசா 3:5 |
| 13 | என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை. | சங் 69:26 சகரி 1:15 |
| 14 | பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள். | யோபு 22:16 சங் 18:4 சங் 69:14 சங் 69:15 ஏசா 8:7 ஏசா 8:8 |
| 15 | பயங்கரங்கள் என்மேல் திரும்பி வருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று. | யோபு 6:4 யோபு 7:14 யோபு 9:27 யோபு 9:28 யோபு 10:16 சங் 88:15 |
| 16 | ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப்பிடித்துக்கொண்டது. | சங் 22:14 சங் 42:4 ஏசா 53:12 |
| 17 | இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. | யோபு 33:19-21 சங் 6:2-6 சங் 38:2-8 |
| 18 | நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது. | யோபு 2:7 யோபு 7:5 யோபு 19:20 சங் 38:5 ஏசா 1:5 ஏசா 1:6 |
| 19 | சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன். | யோபு 9:31 சங் 69:1 சங் 69:2 எரே 38:6 |
| 20 | உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பராமுகமாயிருக்கிறீர். | யோபு 19:7 யோபு 27:9 சங் 22:2 சங் 80:4 சங் 80:5 புலம் 3:8 புலம் 3:44 மத் 15:23 |
| 21 | என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர். | யோபு 7:20 யோபு 7:21 யோபு 10:14-17 யோபு 13:25-28 யோபு 16:9-14 யோபு 19:6-9 சங் 77:7-9 எரே 30:14 |
| 22 | நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர். | யோபு 21:18 சங் 1:4 ஏசா 17:13 எரே 4:11 எரே 4:12 எசே 5:2 ஓசி 4:19 ஓசி 13:3 |
| 23 | சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன். | யோபு 14:5 யோபு 21:33 ஆதி 3:19 2சாமு 14:14 பிரச 8:8 பிரச 9:5 பிரச 12:5-7 எபிரெ 9:27 |
| 24 | ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும், | நியா 5:31 சங் 35:25 மத் 27:39-44 |
| 25 | துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக. | சங் 35:13 சங் 35:14 எரே 13:17 எரே 18:20 லூக் 19:41 யோவா 11:35 ரோம 12:15 |
| 26 | நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது. | யோபு 3:25 யோபு 3:26 யோபு 29:18 எரே 8:15 எரே 14:19 எரே 15:18 மீகா 1:12 |
| 27 | என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது. | சங் 22:4 எரே 4:19 எரே 31:20 புலம் 1:20 புலம் 2:11 |
| 28 | வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன். | சங் 38:6 சங் 42:9 சங் 43:2 ஏசா 53:3 ஏசா 53:4 புலம் 3:1-3 |
| 29 | நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன். | யோபு 17:14 சங் 102:6 ஏசா 13:21 ஏசா 13:22 ஏசா 38:14 மீகா 1:8 மல்கி 1:3 |
| 30 | என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று. | சங் 119:83 புலம் 3:4 புலம் 4:8 புலம் 5:10 |
| 31 | என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின. | சங் 137:1-4 பிரச 3:4 ஏசா 21:4 ஏசா 22:12 ஏசா 24:7-9 புலம் 5:15 தானி 6:18 |