| 1 | பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: | யோபு 27:1 |
| 2 | சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும். | யோபு 1:1-5 யோபு 7:3 |
| 3 | அப்பொழுது அவர் தீபம் என்தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். | யோபு 18:6 யோபு 21:17 சங் 18:28 நீதி 13:9 நீதி 20:20 நீதி 24:20 |
| 4 | தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது. | யோபு 1:10 யோபு 15:8 சங் 25:14 சங் 27:5 சங் 91:1 நீதி 3:32 கொலோ 3:3 |
| 5 | அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள். | யோபு 23:3 யோபு 23:8-10 உபா 33:27-29 யோசு 1:9 நியா 6:12 நியா 6:13 சங் 30:7 சங் 43:2 சங் 44:8 சங் 44:9 உன்ன 2:4 உன்ன 3:1 உன்ன 3:2 எரே 14:8 மத் 9:15 |
| 6 | என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும். | யோபு 20:17 ஆதி 49:11 உபா 32:13 உபா 33:24 சங் 81:16 |
| 7 | நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது, | உபா 16:18 உபா 21:19 ரூத் 4:1 ரூத் 4:2 ரூத் 4:11 சகரி 8:16 |
| 8 | வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள். | லேவி 19:32 நீதி 16:31 நீதி 20:8 ரோம 13:3 ரோம 13:4 தீத் 3:1 1பேது 5:5 |
| 9 | பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். | யோபு 4:2 யோபு 7:11 நீதி 10:19 யாக் 1:19 |
| 10 | பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும். | சங் 137:6 எசே 3:26 |
| 11 | என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது. | யோபு 31:20 நீதி 29:2 லூக் 4:22 லூக் 11:27 |
| 12 | முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன். | யோபு 22:5-9 நெகே 5:2-13 சங் 72:12 சங் 82:2-4 நீதி 21:13 நீதி 24:11 நீதி 24:12 எரே 22:16 |
| 13 | கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன். | உபா 24:13 அப் 9:39-41 2கொரி 9:12-14 2தீமோ 1:16-18 |
| 14 | நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது. | உபா 24:13 சங் 132:9 ஏசா 59:17 ஏசா 61:10 ரோம 13:14 2கொரி 6:7 எபே 6:14 1தெச 5:8 வெளிப் 19:8 |
| 15 | நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன். | எண் 10:31 மத் 11:5 1கொரி 12:12-31 |
| 16 | நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன். | யோபு 31:18 எஸ்தர் 2:7 சங் 68:5 எபே 5:1 யாக் 1:27 |
| 17 | நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன். | சங் 3:7 சங் 58:8 நீதி 30:14 |
| 18 | என் கூட்டிலே நான் ஜீவித்துப் போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன். | சங் 30:6 சங் 30:7 எரே 22:23 எரே 49:16 ஒபதி 1:4 ஆபகூ 2:9 |
| 19 | என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுவதும் தங்கியிருந்தது. | யோபு 18:16 சங் 1:3 எரே 17:8 ஓசி 14:5-7 |
| 20 | என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது. | யோபு 29:14 யோபு 19:9 ஆதி 45:13 சங் 3:3 |
| 21 | எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள். | யோபு 29:9 யோபு 29:10 யோபு 32:11 யோபு 32:12 |
| 22 | என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது. | யோபு 32:15 யோபு 32:16 யோபு 33:31-33 ஏசா 52:15 மத் 22:46 |
| 23 | மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள். | சங் 72:6 |
| 24 | நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை. | ஆதி 45:26 சங் 126:1 லூக் 24:41 |
| 25 | அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன். | ஆதி 41:40 நியா 11:8 2சாமு 5:2 1நாளா 13:1-4 |