| 1 | ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது நான் மிகவும் மகிழ்ந்தேன். |
| 2 | இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம். |
| 3 | இது புதிய எருசலேம். ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. |
| 4 | இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவ துண்டு. கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள். அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும். |
| 5 | அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந் தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள். தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள். |
| 6 | எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள். “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன். உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன். உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.” |
| 7 | உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன். உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.” |
| 8 | என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக, இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன். |
| 9 | நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக, இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன். |