| 1 | கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை நான் நேசிக்கிறேன். |
| 2 | நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை நான் நேசிக்கிறேன். |
| 3 | நான் மரித்தவன் போலானேன்! மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று. நான் அஞ்சிக் கலங்கினேன். |
| 4 | அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன். நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன். |
| 5 | கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார். தேவன் தயவுள்ளவர். |
| 6 | கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார். நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார். |
| 7 | என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு! கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார். |
| 8 | தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர். நீர் என் கண்ணீரை நிறுத்தினீர். நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர். |
| 9 | நான் உயிருள்ளோரின் தேசத்தில் தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன். |
| 10 | “நான் அழிந்துபோனேன்!” என்று கூறியபோதும் நான் தொடர்ந்து நம்பிக்கை வைத்தேன். |
| 11 | நான் பயப்பட்டபோதும் “மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!” என்றேன். |
| 12 | நான் கர்த்தருக்கு எதைக் கொடுக்க முடியும்? என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கர்த்தரே கொடுத்தார். |
| 13 | அவர் என்னைக் காப்பாற்றினார். எனவே நான் அவருக்கு ஒரு பானங்களின் காணிக்கையை அளிப்பேன். நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன். |
| 14 | நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன். இப்போது அவரது ஜனங்கள் எல்லோருக்கும் முன்பாக நான் போவேன். |
| 15 | கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது! கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்! |
| 16 | நான் உமது பணியாள். உமது பணிப் பெண் ஒருத்தியின் பிள்ளைகளுள் ஒருவன் நான். கர்த்தாவே, நீரே என்னுடைய முதல் போதகர். |
| 17 | நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன். நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன். |
| 18 | நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன். நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன். |
| 19 | நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன். கர்த்தரைத் துதிப்போம்! |