“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்." (மத்தேயு 5:6).

முதல் மூன்று பாக்கியவான்கள் பரிசுத்த ஆவியின் ஏவுதலின்படி இதயத்தின் நோக்கங்களில் கவனம் செலுத்துகின்றன. முதலில் நாம் தேவை உள்ளவர்கள், வெறுமையானவர்கள் போன்ற உணர்வை அடைகிறோம். இரண்டாவதாக, நான் என்னை நானே நியாயந்தீர்க்கிறேன், என் தவறுகளை அடையாளம் கண்டு, என் பாவங்களுக்காக வருத்தப்படுகிறேன். மூன்றாவதாக, நான் தேவனுக்கு முன்பாக என்னை நியாயப்படுத்துவதை நிறுத்திவிட்டு, நான் பெருமையான பேசும் என் சுயநீதியையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, சாந்தமானவனாக மண்ணிலும் சாம்பலிலும் விழுந்து மனந்திரும்புகிறேன். இப்போது இந்த நான்காவது ஆசீர்வாதத்தில் என் கவனம் எனக்கு வெளியே ஏதோவொன்றின் மீது ஈர்க்கப்படுகிறது. என்னிடம் அது இல்லை என்பதை நான் உணர்கிறேன், ஆனாலும் அது எனக்கு மிகவும் தேவையானது என்பதை அறிந்து அதற்காக ஏங்குகிறேன்.

நமது தியான வசனத்தில் வரும் “நீதி" என்ற வார்த்தையைப் பற்றி காரணமின்றி நிறைய வெறுமையான வாதங்கள் முளைத்துள்ளன. இதன் முக்கியத்துவத்தை உணர, இந்த வார்த்தை பயன்படுத்தப்படும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகளைக் கருத்தில் கொண்டு இந்த தலைப்பை முழுமையாகவும் மற்றும் புதிய ஏற்பாட்டு விளக்கங்களின் வெளிச்சத்திலும் அவற்றைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

“ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக் கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்." (ஏசாயா 45:8). இந்த வசனத்தின் முதல் பாகத்தின் வார்த்தைகள் பூமியின் மீது கிறிஸ்துவின் வருகையை குறித்து விளக்குகிறது. இரண்டாவது பாகம் நமக்காக அவருடைய மரணம் உயிர்தெழுதலை தெரிவிக்கிறது. “நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:25). “முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை. என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை. நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்." (ஏசாயா 46:12-13) “என் நீதி சமீபமாயிருக்கிறது. என் இரட்சிப்பு வெளிப்படும். என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும். தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும். (ஏசாயா 51:5) “கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள். என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.” (ஏசாயா 56:1). “கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன். என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது. மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும், கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்” (ஏசாயா 61:10,11). இந்த வேதபகுதிகள் தேவனுடைய நீதியை தேவன தரும் இரட்சிப்பிற்கு இணையாகச் சொல்வதைத் தெளிவாக்குகிறது.

இந்த வசனங்கள் ரோமர் நிருபத்தில் மேலும் விளக்கி, சுவிசேக்ஷத்தைப் பற்றிய தீர்க்கமான விளக்கங்களை அப்போஸ்தலன் தருகிறார். ரோமர் 1:16,17 -ல் இவிதமாக நாம் வாசிக்கிறோம், “கிறிஸ்துவின் சுவிசேக்ஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேக்ஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது." அதேபோல், ரோமர் 3:22-24 -ல் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது. “அது இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே. விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.” ரோமர் 5:19 -ல் ஆசீர்வாதமான அறிவிப்பு வருகிறது: “அன்றியும் ஒரே மனுக்ஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” இதே வேளையில் நாம் ரோமர் 10:4 ல் இவ்வாறு கற்றுக்கொள்கிறோம்: “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்."

ஒரு பாவியிடம் நீதி என்பது எவ்வளவேனும் இல்லை. “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;" என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால்தான் தேவன் தம்முடைய மக்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவுக்குள் பரிபூரண நீதியை வழங்கியுள்ளார். இந்த நீதி, தேவனுடைய நியாயபிரமாணத்தை நிறைவேற்றம் என்பது, நம் சார்பாக மற்றொருவரால் (இயேசு கிறிஸ்துவால்) சாத்தியமானதாகும். இப்போது இந்த நீதியானது விசுவாசிக்கும் ஒவ்வொரு பாவிக்கும் கிறிஸ்துவால் சாட்டப்படுகிறது. தேவனுடைய மக்களின் பாவங்கள் கிறிஸ்துவின் மீது எவ்விதமாக சுமத்தப்பட்டதோ, கிறிஸ்துவின் நீதி அவர்கள் மீது அவ்விதமாக சுமத்தப்படுகிறது. (பார்க்கவும் 2 கொரிந்தியர் 5:21). இதுவே நமக்குத் தேவையான, ஆசீர்வதிக்கப்பட்ட நீதியைக் குறித்த வேத போதனையின் சுருக்கமான விளக்கமாகும்.

 “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;" பசி என்பது ஒரு நபரின் பற்றாக்குறையை அங்கீகரிப்பதை குறிக்கிறது, முதலில், பரிசுத்த ஆவியானவர் தேவனின் பரிசுத்தமான கட்டளைகளை நம் இதயத்தின் முன் வைக்கிறார். அந்த பரிசுத்த கட்டளைகளின் தரத்தை அவரால் ஒருபோதும் குறைக்க முடியாது. “வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” (மத்தேயு 5:20) என்பதை அவர் நமக்கு நினைவூட்டுகிறார். இரண்டாவதாக அவன் தேவனுடைய எதிர்பார்ப்புக்கு எவ்வளவு பின்தங்கியிருக்கிறான் என்பதை உணர்ந்துக் கொள்கிறான், இது அவனை தேவனுக்கு முன்பாக துக்கப்படுத்துவதற்கு அது வழி நடத்துகிறது. உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறதா?

மூன்றாவதாக பரிசுத்த ஆவியானவர் ஊக்கப்படுத்திய இருதயத்தில் பசிதாகத்தை பிறக்கவைத்து அவன் தனக்கு இல்லாததைக் தேடும்படி அவனைத் தூண்டப்படுகிறான், அப்பொழுது அவனுடைய பார்வை கிறிஸ்துவின் பக்கமாக செய்கிறது. ஏனெனில் அவரே “நமது நீதியாயிருக்கிற கர்த்தர்" (எரேமியா 23:6). என்பதை அவன் அறிகிறான்.

முந்தையதைப் போலவே, இந்த நான்காவது ஆசீர்வாதமும் இரட்சிப்புக்கு முன் தொடங்கி, இரட்சிக்கப்பட்ட பாவியில் பூரணப்படுத்தப்படுகிறது. பசியின் இந்த அனுபவம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஒரு காலத்தில் கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட இந்த மனிதன் இப்போது அவரைப் போல இருக்க ஆசைப்படுகிறான். இந்த செயல்முறையை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க முடிந்தால், அது கடவுளுக்காக ஏங்கும் ஒரு புதுப்பிக்கப்பட்ட இதயம்; (சங்கீதம் 42:1) அவருடன் நெருங்கிய ஐக்கியத்தை விரும்புவர் அவருடைய மகனின் சாயலாக மாற வேண்டும் என்ற ஏங்குகிறார். புதிய இயல்பு அத்தகைய குணங்களை வலுப்படுத்தவும், தூண்டவும், திருப்திப்படுத்தவும் அடிப்படையான தெய்வீக ஆசீர்வாதத்தை நாடுகிறது.

நம் வேதபகுதியின் மூலம் முன்வைக்கப்படும் அத்தகைய அற்புதமான யோசனை மனித நுண்ணறிவிலிருந்து எழுந்திருக்க முடியாது. ஜீவ அப்பமாகிய அவரோடு நாம் ஐக்கியமாகி, சகல பரிபூரணமும் வாசமாக இருக்கும் தேவகுமாரனுடன் இருந்தும், பசிதாகமாய் இருப்பது எப்படி சாத்தியம்? ஆனால் புதுப்பிக்கப்பட்ட இருதய அனுபவம் அப்படித்தான் இருக்கிறது. இங்குள்ள வினைச்சொல்லின் நேரத்தைக் கவனியுங்கள், “உடையவர்கள் பாக்கியவான்கள்” என்று சொல்லாமல் “பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்று வருகிறது. அன்பான வாசகரே, உங்கள் சாதனகைளிலும் உங்கள் தற்போதைய நிலையிலும் திருப்தி அடைகிறீர்களா? பசி தாகத்துடன் இருப்பது ஒவ்வொரு தலைமுறையிலும் தேவனுடைய பரிசுத்தவான்களின் அனுபவம் (காணவும் சங்கீதம் 82:4, பிலிப்பியர் 3:8,14)

“அவர்கள் திருப்தி அடைவார்கள்". தலைப்பு உரையின் முதல் பகுதியின் உட்பொருளைப் போலவே, இது இரட்டிப்பாக பூர்த்தி செய்யப்படுகிறது. ஒன்று இரட்சிப்பின் தொடக்கத்தில் நிகழும் நிறைவு, மற்றொன்று இரட்சிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தொடரும் நிறைவு. கடவுள் ஒருவரின் வாழ்க்கையில் பசியை உண்டாக்குவது அதைத் திருப்திப்படுத்த மட்டுமே. ஒரு தாழ்ந்த பாவி கிறிஸ்துவின் தேவையை உணர வைக்கப்படுகிறான், அதனால் அவன் இழுக்கப்பட்டு தன்னைத் தொடும்படி வழிநடத்தப்படுகிறான். மனந்திரும்பி தகப்பனிடம் திரும்பிய ஊதாரித்தனமான மகனைப் போல, விசுவாசியான பாவி இப்போது கொழுத்த கன்றுக்கு ஒப்பிடப்பட்டவரால் வளர்க்கப்படுகிறார். யெகோவாவில் எனக்கு நீதி இருக்கிறது என்பதை (ஏசாயா 45:24) அவர் அறிவார்.

“அவர்கள் திருப்தியடைவார்கள்" 'அவர்கள் நிரப்பப்படுவார்கள்” துன்மார்க்கத்துக்கு ஏதுவான மதுவால் அல்ல, “ஆவியால் நிரப்பப்படுவார்கள்" (எபேசியர் 5:18). அவர்கள் எல்லா புத்திக்கும் மேலான கடவுளின் சமாதானத்தால் (பிலிப்பியர் 4:7) நிரப்பப்பட்டுள்ளனர். அவர்கள் துக்கமற்ற தெய்வீக ஆசீர்வாதங்களால் நிரப்பப்படுவார்கள். நமக்காக எல்லாவற்றையும் செய்த அவருக்கு ஏறெடுக்கும் துதி ஸ்தோத்திரத்தினால் நிரப்பப்படுவார்கள். இந்த ஏழை உலகம் கொடுக்க முடியாததும் எடுக்க முடியாததுமானவற்;றால் அவர்கள் நிரப்பப்படுவார்கள். அவருடைய நிறைவால் அவர்களுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது. ஆனால் இவை அனைத்தும் கடவுளை நேசிப்பவர்களுக்கு சுவைக்க மட்டுமே கொடுக்கப்படுகின்றன. வரவிருக்கும் மகிமையில் நாம் அவருடைய பரிசுத்தத்தால் நிரப்பப்படுவோம், ஏனென்றால் அவர் தோன்றும்போது நாம் அவரைப் போல இருப்போம். அப்போது நமது பாவ சுபாவம் முற்றிலும் நீங்கும். அதற்குப் பின், பசியும் தாகமும் ஒருபோதும் இருக்காது. (வெளிப்படுத்துதல் 7:16).

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.