இணை வசன வேதாகமம்

யாத்திராகமம் 4

                   
புத்தகங்களைக் காட்டு
1மோசே மறுமொழியாக, “இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்: என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள்.ஏனெனில்ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை”என்று சொல்வார்கள்” என்று கூறினார்.யாத் 4:31 யாத் 2:14 யாத் 3:18 எரே 1:6 எசே 3:14 அப் 7:25
2ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார்.ஒரு கோல்”என்றார் அவர்.யாத் 4:17 யாத் 4:20 ஆதி 30:37 லேவி 27:32 சங் 110:2 ஏசா 11:4 மீகா 7:14
3அதைத்தரையில் விட்டெறி”என ஆணை விடுத்தார் ஆண்டவர்.அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார்.அது ஒரு பாம்பாக மாறியது.அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.யாத் 4:17 யாத் 7:10-15 ஆமோ 5:19
4ஆண்டவர் அவரை நோக்கி, “நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு” என்றார்.-அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார்.அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.-ஆதி 22:1 ஆதி 22:2 சங் 91:13 மாற் 16:18 லூக் 10:19 அப் 28:3-6
5“இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே”.யாத் 4:1 யாத் 3:18 யாத் 4:31 யாத் 19:9 2நாளா 20:20 ஏசா 7:9 யோவா 5:36 யோவா 11:15 யோவா 11:42 யோவா 20:27 யோவா 20:31
6மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையை உன் மடிக்குள் இடு” என்றார்.அவ்வாறே அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார்.அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.எண் 12:10 2இரா 5:27
7பின்னர் ஆண்டவர், “உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு” என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார்.மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.எண் 12:13 எண் 12:14 உபா 32:39 2இரா 5:14 மத் 8:3
8அப்போது ஆண்டவர், “அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!யாத் 4:30 யாத் 4:31 ஏசா 28:10 யோவா 12:37
9அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய்.நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்” என்றார்.யாத் 7:19
10மோசே ஆண்டவரிடம்: “ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்: நாவும் குழறும்” என்றார்.யாத் 4:1 யோபு 12:2 1கொரி 2:1-4 2கொரி 10:10 2கொரி 11:6
11ஆண்டவர் அவரிடம், “மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!ஆதி 18:14 சங் 51:15 சங் 94:9 சங் 146:8 ஏசா 6:7 ஏசா 35:5 ஏசா 35:6 ஏசா 42:7 எரே 1:6 எரே 1:9 எசே 3:26 எசே 3:27 எசே 33:22 ஆமோ 3:6
12ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்: நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” என்றார்.சங் 25:4 சங் 25:5 சங் 32:9 சங் 143:10 ஏசா 49:2 ஏசா 50:4 எரே 1:9 மத் 10:19 மத் 10:20 மாற் 13:11 லூக் 11:1 லூக் 12:11 லூக் 12:12 லூக் 21:14 லூக் 21:15 யோவா 14:26 எபே 6:19
13அதற்கு அவர், “வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!” என்றுரைத்தார்.யாத் 4:1 யாத் 23:20 ஆதி 24:7 ஆதி 48:16 நியா 2:1 1இரா 19:4 எரே 1:6 எரே 20:9 எசே 3:14 எசே 3:15 யோனா 1:3 யோனா 1:6 மத் 13:41 யோவா 6:29
14இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: “லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும்.இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான்.அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான்.2சாமு 6:7 1இரா 11:9 1நாளா 21:7 லூக் 9:59 லூக் 9:60 அப் 15:28 பிலிப் 2:21
15நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய்.நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன்.யாத் 7:1 யாத் 7:2 2சாமு 14:3 ஏசா 51:16 ஏசா 59:21
16உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான்.நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய்.யாத் 7:1 யாத் 7:2 யாத் 18:19 சங் 82:6 யோவா 10:34 யோவா 10:35
17இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய்.இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!”யாத் 4:2 யாத் 7:9 யாத் 7:19 1கொரி 1:27
18மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று, அவரை நோக்கி, “எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்” என்று கூற, இத்திரோ மோசேயைப் பார்த்து, “சமாதானமாய்ப் போய்வா” என்றார்.யாத் 3:1
19மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, “எகிப்திற்குத் திரும்பிப் போ: ஏனெனில் உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்” என்றுரைத்தார்.யாத் 2:15 யாத் 2:23 மத் 2:20
20எனவே மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.யாத் 4:2 யாத் 4:17 யாத் 17:9 எண் 20:8 எண் 20:9
21ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “பார், நீ எகிப்திற்குத் திரும்பிச் சென்றபின், நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லா அருஞ் செயல்களையும் பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு.யாத் 3:20
22நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன்.அவன் மக்களைப் போகவிடமாட்டான்.நீ பார்வோனிடம்,ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:இஸ்ரயேல் என் மகன்: என் தலைப்பிள்ளை.யாத் 19:5 யாத் 19:6 உபா 14:1 எரே 31:9 ஓசி 11:1 ரோம 9:4 2கொரி 6:18 எபிரெ 12:23 யாக் 1:18
23நான் உனக்குக் கூறிவிட்டேன்: என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு! அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை, உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன்”என்று சொல்வாய்”.யாத் 11:5 யாத் 12:29 சங் 78:51 சங் 105:36 சங் 135:8
24ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்.ஆதி 42:27 ஆதி 17:14
25அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நீர் எனக்கு இரத்த மணமகன்” என்றாள்.யோசு 5:2 யோசு 5:3
26பின்பு ஆண்டவர் அவரைவிட்டு விலகினார்.அப்போது அவள்,விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன்”என்றாள்.
27இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி, “மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் பேர்” என்றார்.அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார்.யாத் 4:14-16 பிரச 4:9 அப் 10:5 அப் 10:6 அப் 10:20
28தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப்பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.யாத் 4:8 யாத் 4:9 யாத் 4:15 யாத் 4:16 யோனா 3:2 மத் 21:29
29மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.யாத் 3:16 யாத் 24:1 யாத் 24:11
30ஆண்டவர் மோசேயிடம் கூறியிருந்த எல்லா வார்த்தைகளையும் ஆரோன் எடுத்துக் கூறினார்.அருஞ்செயல்களையும் மக்கள் பார்க்கும் வண்ணம் செய்தார்.மக்களும் நம்பினர்.
31ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும் அவர்களது துயரத்தைக் கண்ணோக்கிவிட்டார் என்றும் மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுதனர்.யாத் 4:8 யாத் 4:9 யாத் 3:18 சங் 106:12 சங் 106:13 லூக் 8:13

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.