10
மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்கச் செயல்பட்டனர்.ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அதுபாம்பாக மாறியது.
11
பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான்.எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் வித்தைகளால் அவ்வாறே செய்தார்கள்.
12
அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட, அவை பாம்புகளாக மாறின.ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது.
13
பார்வோனின் மனமோ கடினப்பட்டது.ஆண்டவர் முன்னுரைத்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
14
ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “பார்வோனின் மனம் இறுகிப்போய்விட்டது.மக்களைப் போகவிட அவன் மறுக்கிறான்.
15
எனவே காலையில் நீ பார்வோனிடம் போ.அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான்.அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்: பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்.