| 1 | ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே. | சங் 24:7-10 உன்ன 3:6 உன்ன 6:10 உன்ன 8:5 மத் 21:10 |
| 2 | உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள் போலவும் இருக்கிறதென்ன? |
| 3 | நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன். | ஏசா 25:10 புலம் 1:15 மல்கி 4:3 வெளிப் 14:19 வெளிப் 14:20 வெளிப் 19:13-15 |
| 4 | நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது. | ஏசா 34:8 ஏசா 35:4 ஏசா 61:2 எரே 51:6 சகரி 3:8 லூக் 21:22 வெளிப் 6:9-17 வெளிப் 11:13 வெளிப் 18:20 |
| 5 | நான் பார்த்தேன், துணை செய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று. | ஏசா 63:3 ஏசா 41:28 ஏசா 50:2 ஏசா 59:16 யோவா 16:32 |
| 6 | நான் என் கோபத்திலே ஜனங்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினேன். | ஏசா 63:2 ஏசா 63:3 ஏசா 49:26 ஏசா 51:21-23 யோபு 21:20 சங் 60:3 சங் 75:8 எரே 25:16 எரே 25:17 எரே 25:26 எரே 25:27 புலம் 3:15 வெளிப் 14:10 வெளிப் 16:6 வெளிப் 16:19 வெளிப் 18:3-6 |
| 7 | கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன். | ஏசா 41:8 ஏசா 41:9 ஏசா 51:2 நெகே 9:7-15 நெகே 9:19-21 நெகே 9:27-21 நெகே 9:31-21 சங் 63:3 சங் 78:11-72 சங் 105:5-45 சங் 107:8 சங் 107:15 சங் 107:21 சங் 107:31 சங் 136:1-26 சங் 147:19 சங் 147:20 எசே 16:6-14 ஓசி 2:19 |
| 8 | அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார். | ஏசா 41:8 ஆதி 17:7 யாத் 3:7 யாத் 4:22 யாத் 4:23 யாத் 6:7 யாத் 19:5 யாத் 19:6 ரோம 11:1 ரோம 11:2 ரோம 11:28 |
| 9 | அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார் அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார். | யாத் 3:7-9 நியா 10:16 சகரி 2:8 மத் 25:40 மத் 25:45 அப் 9:4 எபிரெ 2:18 எபிரெ 4:15 |
| 10 | அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார். | ஏசா 1:2 ஏசா 65:2 யாத் 15:24 யாத் 16:8 யாத் 32:8 எண் 14:9-11 எண் 16:1-35 உபா 9:7 உபா 9:22-24 நெகே 9:16 நெகே 9:17 நெகே 9:26 நெகே 9:29 புலம் 1:18 புலம் 1:20 எசே 2:3 எசே 2:7 எசே 20:8 எசே 20:13 எசே 20:21 |
| 11 | ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே? | லேவி 26:40-45 உபா 4:30 உபா 4:31 சங் 25:6 சங் 77:5-11 சங் 89:47-50 சங் 143:5 லூக் 1:54 லூக் 1:55 |
| 12 | அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து, | யாத் 15:6 யாத் 15:13 யாத் 15:16 சங் 80:1 |
| 13 | ஒரு குதிரை வனாந்தர வெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே? | சங் 106:9 ஆபகூ 3:15 |
| 14 | கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர். | யோசு 22:4 யோசு 23:1 எபிரெ 4:8-11 |
| 15 | தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மனஉருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ? | உபா 26:15 சங் 33:14 சங் 80:14 சங் 102:19 சங் 102:20 புலம் 3:50 |
| 16 | தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம். | ஏசா 64:8 யாத் 4:22 உபா 32:6 1நாளா 29:10 எரே 3:19 எரே 31:9 மல்கி 1:6 மல்கி 2:10 மத் 6:9 |
| 17 | கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும். | சங் 119:10 சங் 119:36 சங் 141:4 எசே 14:7-9 2தெச 2:11 2தெச 2:12 |
| 18 | பரிசுத்தமுள்ள உமது ஜனங்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள். | ஏசா 62:12 யாத் 19:4-6 உபா 7:6 உபா 26:19 தானி 8:24 1பேது 2:9 |
| 19 | நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை. | சங் 79:6 சங் 135:4 எரே 10:25 அப் 14:16 ரோம 9:4 எபே 2:12 |