இணை வசன வேதாகமம்

நீதிமொழிகள் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.நீதி 1:8 நீதி 4:5 நீதி 31:5 உபா 4:23 சங் 119:93 சங் 119:153 சங் 119:176 ஓசி 4:6
2அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.நீதி 3:16 நீதி 4:10 நீதி 9:11 யோபு 5:26 சங் 34:11-14 சங் 91:16 சங் 128:6 எபே 6:1-3 1தீமோ 4:8
3கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.நீதி 16:6 நீதி 20:28 2சாமு 15:20 சங் 25:10 ஓசி 4:1 மீகா 7:18-20 மல்கி 2:6 மத் 23:23 எபே 5:1 எபே 5:2 எபே 5:9
4அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.ஆதி 39:2-4 ஆதி 39:21-4 1சாமு 2:26 சங் 111:10 தானி 1:9 லூக் 2:52 அப் 2:47 ரோம 14:18
5உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,நீதி 22:19 யோபு 13:15 சங் 37:3 சங் 37:5 சங் 37:7 சங் 62:8 சங் 115:9-11 சங் 125:1 சங் 146:3-5 ஏசா 12:2 ஏசா 26:3 ஏசா 26:4 எரே 17:7 எரே 17:8 எபே 1:12
6உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.நீதி 16:3 நீதி 23:17 1சாமு 4:11 1சாமு 4:12 1சாமு 30:8 1நாளா 28:9 எஸ்றா 7:27 எஸ்றா 8:22 எஸ்றா 8:23 நெகே 1:11 நெகே 2:4 1கொரி 10:31 2கொரி 8:16 பிலிப் 4:6 கொலோ 3:17 கொலோ 3:23
7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.நீதி 26:12 ஏசா 5:21 ரோம 11:25 ரோம 12:16
8அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.நீதி 4:22 நீதி 16:24 சங் 147:3 ஏசா 1:6 எரே 30:12 எரே 30:13
9உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.நீதி 14:31 ஆதி 14:18-21 ஆதி 28:22 யாத் 22:29 யாத் 23:19 யாத் 34:26 யாத் 35:20-29 எண் 7:2-89 எண் 31:50-54 உபா 26:2-15 ஆகா 1:4-9 மல்கி 3:8 மல்கி 3:9 மாற் 14:7 மாற் 14:8 மாற் 14:10-21 லூக் 14:13 லூக் 14:14 1கொரி 16:2 2கொரி 8:2 2கொரி 8:3 2கொரி 8:8 2கொரி 8:9 பிலிப் 4:17 பிலிப் 4:18 1யோவா 3:17 1யோவா 3:18
10அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.நீதி 11:24 நீதி 11:25 நீதி 19:17 நீதி 22:9 லேவி 26:2-5 உபா 28:8 பிரச 11:1 பிரச 11:2 ஆகா 2:19 மல்கி 3:10 மல்கி 3:11 மத் 10:42 2கொரி 9:6-11
11என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.யோபு 5:17 சங் 94:12 1கொரி 11:32 எபிரெ 12:5 எபிரெ 12:6 வெளிப் 3:19
12தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.நீதி 29:17 உபா 8:5 சங் 103:13
13ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.நீதி 4:5-9 நீதி 8:32-35 1இரா 10:1-9 1இரா 10:23-9 1இரா 10:24-9 பிரச 9:15-18
14அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.நீதி 2:4 நீதி 8:10 நீதி 8:11 நீதி 8:19 நீதி 16:16 2நாளா 1:11 2நாளா 1:12 யோபு 28:13-19 சங் 119:72 சங் 119:111 சங் 119:162 மத் 16:26 பிலிப் 3:8 பிலிப் 3:9 வெளிப் 3:18
15முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.நீதி 8:11 நீதி 20:15 நீதி 31:10 மத் 13:44-46
16அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.நீதி 3:2 நீதி 4:10 சங் 21:4 சங் 71:9 1தீமோ 4:8
17அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.நீதி 2:10 நீதி 22:18 சங் 19:10 சங் 19:11 சங் 63:3-5 சங் 112:1 சங் 119:14 சங் 119:47 சங் 119:103 சங் 119:174 மத் 11:28-30
18அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.நீதி 11:30 நீதி 13:12 ஆதி 2:9 ஆதி 3:22 வெளிப் 22:2
19கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.நீதி 8:27-29 சங் 104:24 சங் 136:5 எரே 10:12 எரே 51:15 யோவா 1:3
20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.ஆதி 1:9 ஆதி 7:11 யோபு 38:8-11 சங் 104:8 சங் 104:9
21என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.நீதி 3:1-3 உபா 4:9 உபா 6:6-9 யோசு 1:8 யோவா 8:31 யோவா 15:6 யோவா 15:7 எபிரெ 2:1-3 1யோவா 2:24 1யோவா 2:27
22அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.நீதி 4:22 ஏசா 38:16 யோவா 12:49 யோவா 12:50
23அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.நீதி 2:8 நீதி 4:12 நீதி 10:9 சங் 37:23 சங் 37:24 சங் 37:31 சங் 91:11 சங் 121:3 சங் 121:8 சகரி 10:12
24நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.நீதி 6:22 லேவி 26:6 சங் 3:5 சங் 4:8 சங் 121:4-7 எசே 34:15
25சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.யோபு 5:21 யோபு 5:22 யோபு 11:13-15 சங் 27:1 சங் 27:2 சங் 46:1-3 சங் 91:5 சங் 112:7 ஏசா 8:12 ஏசா 8:13 ஏசா 41:10-14 தானி 3:17 தானி 3:18 மத் 8:24-26 மத் 24:6 மாற் 4:40 லூக் 21:9 யோவா 14:1 1பேது 3:14
26கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.நீதி 14:26 சங் 91:3 சங் 91:9 சங் 91:10 ஆபகூ 3:17 ஆபகூ 3:18
27நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.ரோம 13:7 கலா 6:10 தீத் 2:14 யாக் 2:15 யாக் 2:16 யாக் 5:4
28உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.நீதி 27:1 லேவி 19:13 உபா 24:12-15 பிரச 9:10 பிரச 11:6 2கொரி 8:11 2கொரி 9:3 1தீமோ 6:18
29அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினையாதே.நீதி 6:14 நீதி 6:18 நீதி 16:29 நீதி 16:30 சங் 35:20 சங் 55:20 சங் 59:3 எரே 18:18-20 மீகா 2:1 மீகா 2:2
30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.நீதி 17:14 நீதி 18:6 நீதி 25:8 நீதி 25:9 நீதி 29:22 மத் 5:39-41 ரோம 12:18-21 1கொரி 6:6-8 2தீமோ 2:24
31கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.நீதி 23:17 நீதி 24:1 நீதி 24:19 நீதி 24:20 சங் 37:1 சங் 37:7-9 சங் 73:3 கலா 5:21
32மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.நீதி 6:6-19 நீதி 8:13 நீதி 11:20 நீதி 17:15 சங் 18:26 லூக் 16:15
33துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.நீதி 21:12 லேவி 26:14-46 உபா 7:26 உபா 28:15-68 உபா 29:19-29 யோசு 6:18 யோசு 7:13 சங் 37:22 சகரி 5:3 சகரி 5:4 மல்கி 2:2
34இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.நீதி 9:7 நீதி 9:8 நீதி 9:12 நீதி 19:29 நீதி 21:24 சங் 138:6
35ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.நீதி 4:8 1சாமு 2:30 சங் 73:24

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.