1 | தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள். | பிரச 1:12 பிரச 7:27 பிரச 12:8-10 நெகே 6:7 சங் 40:9 ஏசா 61:1 யோனா 3:2 2பேது 2:5 |
2 | மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். | பிரச 2:11 பிரச 2:15 பிரச 2:17 பிரச 2:19 பிரச 2:21 பிரச 2:23 பிரச 2:26 பிரச 3:19 பிரச 4:4 பிரச 4:8 பிரச 4:16 பிரச 5:10 பிரச 6:11 பிரச 11:8 பிரச 11:10 பிரச 12:8 சங் 39:5 சங் 39:6 சங் 62:9 சங் 62:10 சங் 144:4 ரோம 8:20 |
3 | சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? | பிரச 2:22 பிரச 3:9 பிரச 5:16 நீதி 23:4 நீதி 23:5 ஏசா 55:2 ஆபகூ 2:13 ஆபகூ 2:18 மத் 16:26 மாற் 8:36 மாற் 8:37 யோவா 6:27 |
4 | ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. | பிரச 6:12 ஆதி 5:3-31 ஆதி 11:20-32 ஆதி 36:9-19 ஆதி 47:9 யாத் 1:6 யாத் 1:7 யாத் 6:16-27 சங் 89:47 சங் 89:48 சங் 90:9 சங் 90:10 சகரி 1:5 |
5 | சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது. | ஆதி 8:22 சங் 19:4-6 சங் 89:36 சங் 89:37 சங் 104:19-23 எரே 33:20 |
6 | காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும். | யோபு 37:9 யோபு 37:17 சங் 107:25 சங் 107:29 யோனா 1:4 மத் 7:24 மத் 7:27 யோவா 3:8 அப் 27:13-15 |
7 | எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். | யோபு 38:10 யோபு 38:11 சங் 104:6-9 |
8 | எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை. | பிரச 2:11 பிரச 2:26 மத் 11:28 ரோம 8:22 ரோம 8:23 |
9 | முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை. | பிரச 3:15 பிரச 7:10 2பேது 2:1 |
10 | இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே. | மத் 5:12 மத் 23:30-32 லூக் 17:26-30 அப் 7:51 1தெச 2:14-16 2தீமோ 3:8 |
11 | முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது. | பிரச 2:16 சங் 9:6 ஏசா 41:22-26 ஏசா 42:9 |
12 | பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன். | பிரச 1:1 1இரா 4:1-19 |
13 | வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார். | பிரச 1:17 பிரச 7:25 பிரச 8:9 பிரச 8:16 பிரச 8:17 சங் 111:2 நீதி 2:2-4 நீதி 4:7 நீதி 18:1 நீதி 18:15 நீதி 23:26 1தீமோ 4:15 |
14 | சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. | பிரச 1:17 பிரச 1:18 பிரச 2:11 பிரச 2:17 பிரச 2:26 1இரா 4:30-32 சங் 39:5 சங் 39:6 |
15 | கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது. | பிரச 3:14 பிரச 7:12 பிரச 7:13 யோபு 11:6 யோபு 34:29 ஏசா 40:4 புலம் 3:37 தானி 4:35 மத் 6:27 |
16 | இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன். | 2இரா 5:20 சங் 4:4 சங் 77:6 ஏசா 10:7-14 எரே 22:14 எசே 38:10 எசே 38:11 தானி 4:30 |
17 | ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன். | பிரச 1:13 பிரச 2:3 பிரச 2:12 பிரச 7:23-25 1தெச 5:21 |
18 | அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன். | பிரச 2:15 பிரச 7:16 பிரச 12:12 பிரச 12:13 யோபு 28:28 1கொரி 3:18-20 யாக் 3:13-17 |