1 | என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, | நீதி 1:3 நீதி 4:1 நீதி 7:1 யோவா 12:47 யோவா 12:48 1தீமோ 1:15 |
2 | நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, | நீதி 18:1 சங் 119:111 சங் 119:112 ஏசா 55:3 மத் 13:9 |
3 | ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, | நீதி 3:6 நீதி 8:17 1இரா 3:9-12 1நாளா 22:12 சங் 25:4 சங் 25:5 சங் 119:34 சங் 119:73 சங் 119:125 சங் 119:169 லூக் 11:13 எபே 1:17 எபே 1:18 யாக் 1:5 |
4 | அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், | நீதி 3:14 நீதி 3:15 நீதி 8:18 நீதி 8:19 நீதி 16:16 நீதி 23:23 சங் 19:10 சங் 119:14 சங் 119:72 சங் 119:127 மத் 6:19-21 மத் 13:44 மத் 19:21 மத் 19:22 மத் 19:29 |
5 | அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். | 2நாளா 1:10-12 ஓசி 6:3 மத் 7:7 மத் 7:8 லூக் 11:9-13 |
6 | கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். | யாத் 31:3 1இரா 3:9 1இரா 3:12 1இரா 4:29 1நாளா 22:12 யோபு 32:8 ஏசா 54:13 தானி 1:17 தானி 2:21 தானி 2:23 லூக் 21:15 யோவா 6:45 எபே 1:17 எபே 1:18 யாக் 1:5 யாக் 1:17 |
7 | அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். | நீதி 8:14 நீதி 14:8 யோபு 28:8 1கொரி 1:19 1கொரி 1:24 1கொரி 1:30 1கொரி 2:6 1கொரி 2:7 1கொரி 3:18 1கொரி 3:19 கொலோ 2:3 2தீமோ 3:15-17 யாக் 3:15-17 |
8 | அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். | நீதி 8:20 சங் 1:6 சங் 23:3 சங் 121:5-8 ஏசா 35:9 ஏசா 49:9 ஏசா 49:10 யோவா 10:28 யோவா 10:29 |
9 | அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய். | நீதி 1:2-6 சங் 25:8 சங் 25:9 சங் 32:8 சங் 119:99 சங் 119:105 சங் 143:8-10 ஏசா 35:8 ஏசா 48:17 எரே 6:16 மத் 7:13 மத் 7:14 யோவா 14:6 |
10 | ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, | நீதி 18:1 நீதி 18:2 நீதி 24:13 நீதி 24:14 யோபு 23:12 சங் 19:10 சங் 104:34 சங் 119:97 சங் 119:103 சங் 119:111 சங் 119:162 எரே 15:16 கொலோ 3:16 |
11 | நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். | நீதி 4:6 நீதி 6:22-24 சங் 25:21 சங் 119:9-11 பிரச 9:15-18 பிரச 10:10 எபே 5:15 |
12 | அதினால் நீ துன்மார்க்கருடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், | நீதி 1:10-19 நீதி 4:14-17 நீதி 9:6 நீதி 13:20 சங் 17:4 சங் 17:5 சங் 26:4 சங் 26:5 சங் 141:4 2கொரி 6:17 |
13 | அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு, | நீதி 21:16 சங் 14:3 சங் 36:3 எசே 18:26 எசே 33:12 எசே 33:13 செப் 1:6 மத் 12:43-45 2தீமோ 4:10 எபிரெ 6:4-6 2பேது 2:20-22 1யோவா 2:19 |
14 | தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், | நீதி 10:23 எரே 11:15 ஆபகூ 1:15 செப் 3:11 1கொரி 13:6 |
15 | மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். | உபா 32:5 சங் 125:5 ஏசா 30:8-13 ஏசா 59:8 பிலிப் 2:15 |
16 | தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, | நீதி 5:3-20 நீதி 6:24 நீதி 7:5-23 நீதி 22:14 நீதி 23:27 ஆதி 39:3-12 நெகே 13:26 நெகே 13:27 பிரச 7:26 |
17 | இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய். | நீதி 5:18 எரே 3:4 |
18 | அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது. | நீதி 5:4-14 நீதி 6:26-35 நீதி 7:22-27 நீதி 9:18 1கொரி 6:9-11 கலா 5:19-21 எபே 5:5 வெளிப் 21:8 வெளிப் 22:15 |
19 | அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை. | சங் 81:12 பிரச 7:26 எரே 13:23 ஓசி 4:14 மத் 19:24-26 |
20 | ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக. | நீதி 13:20 சங் 119:63 சங் 119:115 உன்ன 1:7 உன்ன 1:8 எரே 6:16 எபிரெ 6:12 3யோவா 1:11 |
21 | செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். | யோபு 1:1 யோபு 42:12 சங் 37:3 சங் 37:9 சங் 37:11 சங் 37:22 சங் 37:29 சங் 84:11 சங் 112:4-6 |
22 | துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள். | நீதி 5:22 நீதி 5:23 யோபு 18:16-18 யோபு 21:30 சங் 37:20 சங் 37:22 சங் 37:28 சங் 37:37 சங் 37:38 சங் 52:5 சங் 104:35 சங் 145:20 ஏசா 3:10 ஏசா 3:11 |