இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 90

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.எண் 13:1-14
2பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.யோபு 38:4-6 யோபு 38:28-6 யோபு 38:29-6 நீதி 8:25 நீதி 8:26
3நீர் மனுஷரை நீர்த்துளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர்.சங் 104:29 சங் 146:4 ஆதி 3:19 ஆதி 6:6 ஆதி 6:7 எண் 14:35 யோபு 12:10 யோபு 34:14 யோபு 34:15 பிரச 12:7
4உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.2பேது 3:8
5அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.யோபு 9:26 யோபு 22:16 யோபு 27:20 யோபு 27:21 ஏசா 8:7 ஏசா 8:8 எரே 46:7 எரே 46:8
6அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோகும்.சங் 92:7 யோபு 14:2 மத் 6:30
7நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.சங் 90:9 சங் 90:11 சங் 39:11 சங் 59:13 எண் 17:12 எண் 17:13 உபா 2:14-16 எபிரெ 3:10 எபிரெ 3:11 எபிரெ 3:17-19 எபிரெ 4:1 எபிரெ 4:2
8எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.சங் 10:11 சங் 50:21 சங் 139:1-4 யோபு 34:21 எரே 9:13-16 எரே 16:17 எரே 23:24 எசே 8:12 வெளிப் 20:12
9எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்.சங் 78:33
10எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாய்க் கடந்து போகிறது நாங்களும் பறந்துபோகிறோம்.ஆதி 47:9 உபா 34:7
11உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்?லேவி 26:18 லேவி 26:21 லேவி 26:24 லேவி 26:28 உபா 28:59 உபா 29:20-29 ஏசா 33:14 நாகூ 1:6 லூக் 12:5 2கொரி 5:11 வெளிப் 6:17
12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.சங் 39:4 உபா 32:29 பிரச 9:10 லூக் 12:35-40 யோவா 9:4 எபே 5:16 எபே 5:17
13கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.சங் 6:4 சங் 80:14 எரே 12:15 யோவே 2:13 யோவே 2:14 சகரி 1:16
14நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.சங் 36:7 சங் 36:8 சங் 63:3-5 சங் 65:4 சங் 103:3-5 எரே 31:15 சகரி 9:17
15தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.சங் 30:5 சங் 126:5 சங் 126:6 ஏசா 12:1 ஏசா 40:1 ஏசா 40:2 ஏசா 61:3 ஏசா 65:18 ஏசா 65:19 எரே 31:12 எரே 31:13 மத் 5:4 யோவா 16:20 வெளிப் 7:14-17
16உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.சங் 44:1 எண் 14:15-24 ஆபகூ 3:2
17எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.சங் 27:4 சங் 50:2 சங் 80:3 சங் 80:7 சங் 110:3 2கொரி 3:18 1யோவா 3:2
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.