இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 78

                   
புத்தகங்களைக் காட்டு
1என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.சங் 49:1-3 சங் 51:4 நியா 5:3 நீதி 8:4-6 ஏசா 51:4 ஏசா 55:3 மத் 13:9
2என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.சங் 49:4 மத் 13:13 மத் 13:34 மத் 13:35
3அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.சங் 44:1 சங் 48:8 யாத் 12:26 யாத் 12:27 யாத் 13:8 யாத் 13:14 யாத் 13:15
4பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதியங்களையும் விவரிப்போம்.சங் 145:4-6 உபா 4:9 உபா 6:7 யோவே 1:3
5அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.சங் 81:5 சங் 119:152 சங் 147:19 உபா 4:45 உபா 6:7 உபா 11:19 ஏசா 8:20 ரோம 3:2 1யோவா 5:9-12
6இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;சங் 48:13 சங் 71:18 சங் 102:18 சங் 145:4 எஸ்தர் 9:28
7தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;சங் 40:4 சங் 62:5 சங் 91:14 சங் 130:6 சங் 130:7 சங் 146:5 எரே 17:7 எரே 17:8 1பேது 1:21
8இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.சங் 68:6 சங் 106:7 யாத் 32:9 யாத் 33:3 யாத் 33:5 யாத் 34:9 உபா 9:6 உபா 9:13 உபா 31:27 2இரா 17:14 எசே 2:3-8 எசே 20:8 எசே 20:18 மத் 23:31-33 அப் 7:51
9ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.உபா 1:41-44 யோசு 17:16-18 1சாமு 4:10 1சாமு 31:1
10அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும்,உபா 31:16 உபா 31:20 நியா 2:10-12 2இரா 17:14 2இரா 17:15 நெகே 9:26-29 எரே 31:32
11அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.சங் 78:7 சங் 106:13 சங் 106:21 சங் 106:22 உபா 32:18 எரே 2:32
12அவர்களுடைய பிதாக்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.சங் 78:42-50 சங் 105:27-38 சங் 135:9 யாத் 7:1-12 உபா 4:34 உபா 6:22 நெகே 9:10
13கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படிச்செய்தார்.சங் 66:6 சங் 106:9 சங் 106:10 சங் 136:13-15 யாத் 14:1-15 ஏசா 63:13 1கொரி 10:2 1கொரி 10:3
14பகலிலே மேகத்தினாலும், இராமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.சங் 105:39 யாத் 13:21 யாத் 13:22 யாத் 14:24 யாத் 40:35-38 நெகே 9:12 நெகே 9:19
15வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.சங் 105:41 சங் 114:8 யாத் 17:6 எண் 20:11 ஏசா 41:18 ஏசா 43:20 யோவா 7:37 யோவா 7:38 1கொரி 10:4 வெளிப் 22:1 வெளிப் 22:17
16கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.சங் 105:41 உபா 8:15 உபா 9:21
17என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள்.சங் 78:32 சங் 95:8-10 சங் 106:13-32 உபா 9:8 உபா 9:12-22 எபிரெ 3:16-19
18தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக்கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.சங் 106:14 சங் 106:15 யாத் 16:2 யாத் 16:3 எண் 11:4 1கொரி 10:6 யாக் 4:2 யாக் 4:3
19அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?யாத் 16:8-10 எண் 21:5 2நாளா 32:19 யோபு 34:37 ரோம 9:20 வெளிப் 13:6
20இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள்.யாத் 17:6 யாத் 17:7 எண் 20:11
21ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,சங் 78:31 எண் 11:10 1கொரி 10:5 1கொரி 10:11 யூதா 1:5
22யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம் மூண்டது.சங் 106:24 ஏசா 7:9 எபிரெ 3:12 எபிரெ 3:18 எபிரெ 3:19 எபிரெ 11:6 1யோவா 5:10 யூதா 1:5
23அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,சங் 33:9 ஏசா 5:6
24மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.சங் 68:9 சங் 105:40 யாத் 16:4 யாத் 16:14 உபா 8:3 நெகே 9:15 நெகே 9:20 யோவா 6:31-71 1கொரி 10:3
25தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்.சங் 103:20
26ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,சங் 135:7 எண் 11:31
27மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி,யாத் 16:12 யாத் 16:13 எண் 11:18 எண் 11:19 எண் 11:32
28அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார்.
29அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.சங் 106:15 எண் 11:20
30அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே.எண் 11:33 எண் 11:34 எண் 22:20-22 நீதி 1:32 லூக் 16:19-23
31தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.
32இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.எண் 14:1-45 எண் 16:1-17 எண் 21:1-6 எண் 25:1-18 எசே 20:13
33ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.சங் 90:7-9 எண் 14:29 எண் 14:35 எண் 26:64 எண் 26:65 உபா 2:14-16
34அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;எண் 21:7 நியா 3:8 நியா 3:9 நியா 3:12-15 நியா 4:3 நியா 10:7-10 ஏசா 26:6 எரே 22:23 ஓசி 5:15 ஓசி 7:14
35தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.சங் 78:7 சங் 78:11 சங் 78:42 சங் 106:13 சங் 106:21
36ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.சங் 106:12 சங் 106:13 உபா 5:28 உபா 5:29 ஏசா 29:13 எசே 33:31 ஓசி 11:12
37அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.சங் 119:80 ஓசி 7:14 ஓசி 7:16 ஓசி 10:2 அப் 8:21
38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.சங் 106:43-45 யாத் 34:6-9 எண் 14:18-20 எண் 16:44-48 ஏசா 44:21 ஏசா 44:22
39அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.சங் 103:14-16 ஆதி 6:3 யோவா 3:6
40எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தர வெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.சங் 78:17 சங் 95:8-10 சங் 106:14-33 எண் 14:11 உபா 9:21 உபா 9:22
41அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.எண் 14:4 எண் 14:22 உபா 6:16 அப் 7:39 எபிரெ 3:8-11 2பேது 2:21 2பேது 2:22
42அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற் போனார்கள்.சங் 78:11 சங் 78:21 சங் 78:22 சங் 136:10-15 யாத் 13:9 ஏசா 11:11 எரே 32:21
43அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.சங் 105:27-38 சங் 135:9 யாத் 3:19 யாத் 3:20 உபா 4:34 உபா 6:22 நெகே 9:10
44அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார்.சங் 105:29 யாத் 7:17-21 வெளிப் 16:3-6
45அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.சங் 105:31 யாத் 8:21-24
46அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.சங் 105:34 சங் 105:35 யாத் 10:12-15 யோவே 1:4-7 யோவே 2:25 ஆமோ 7:1 ஆமோ 7:2 வெளிப் 9:2-11
47கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,சங் 105:32 சங் 105:33 யாத் 9:18-34
48அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.யாத் 9:28
49தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.சங் 11:6 யோபு 20:23 ஏசா 42:25 புலம் 4:11 செப் 3:8 ரோம 2:8 ரோம 2:9
50அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.யோபு 27:22 எசே 5:11 எசே 7:4 எசே 7:9 எசே 8:18 எசே 9:10 ரோம 8:32 2பேது 2:4 2பேது 2:5
51எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து;சங் 105:36 சங் 135:8 சங் 136:10 யாத் 12:12 யாத் 12:29 யாத் 12:30 யாத் 13:15 எபிரெ 11:28
52தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;சங் 77:20 சங் 105:37 நெகே 9:12 ஏசா 63:11-14
53அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது.யாத் 14:15 யாத் 14:19 யாத் 14:20 எபிரெ 11:29
54அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,யாத் 15:13 யாத் 15:17 தானி 9:16-20 தானி 11:45
55அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.சங் 44:2 சங் 105:44 சங் 105:45 சங் 135:10-12 சங் 136:18-22 யோசு 6:1-21 நெகே 9:22-25
56ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,சங் 78:40 சங் 78:41 உபா 31:16-20 உபா 32:15-21 நியா 2:11 நியா 2:12 2இரா 17:7-23 நெகே 9:25 நெகே 9:26 எசே 16:15-26
57தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,சங் 78:41 நியா 3:5-7 நியா 3:12-7 எசே 20:27 எசே 20:28
58தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.லேவி 26:30 எண் 33:52 உபா 12:2 உபா 12:4 எசே 20:28 எசே 20:29
59தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,சங் 11:4 சங் 14:2-5 ஆதி 18:20 ஆதி 18:21
60தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி,யோசு 18:1 1சாமு 1:3 1சாமு 4:4-11 எரே 7:12-14 எரே 26:6-9
61தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,சங் 132:8 நியா 18:30 1சாமு 5:1 1சாமு 5:2 2நாளா 6:41
62தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.1சாமு 4:2 1சாமு 4:10 1சாமு 4:11
63அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள்.சங் 78:21 உபா 29:20 உபா 32:22
64அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.1சாமு 2:33 1சாமு 2:34 1சாமு 4:11 1சாமு 4:17 1சாமு 22:18 1சாமு 22:19
65அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து,சங் 7:6 சங் 44:23 ஏசா 51:9
66தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.1சாமு 5:6 1சாமு 6:4 யோபு 40:12
67அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,1சாமு 6:21 1சாமு 7:1 2சாமு 6:2 2சாமு 6:17
68யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.ஆதி 49:8-10 ரூத் 4:17-22 1சாமு 16:1 2நாளா 6:6
69தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.1இரா 6:2 1இரா 9:8 2நாளா 3:4
70தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.சங் 89:19 சங் 89:20 1சாமு 16:11 1சாமு 16:12 2சாமு 3:18 2சாமு 6:21 அப் 13:22
71கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.ஆதி 33:13 ஏசா 40:11
72இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.சங் 75:2 சங் 101:1-8 2சாமு 8:15 1இரா 9:4 1இரா 15:5 ஏசா 11:2-4 அப் 13:22 அப் 13:36
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.