| 1 | யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. | சங் 4:1 சங் 54:1 சங் 61:1 சங் 67:1 |
| 2 | சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது. | ஆதி 14:18 எபிரெ 7:1 எபிரெ 7:2 |
| 3 | அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) | சங் 46:9 2நாளா 14:12 2நாளா 14:13 2நாளா 20:25 2நாளா 32:21 ஏசா 37:35 ஏசா 37:36 எசே 39:3 எசே 39:4 எசே 39:9 எசே 39:10 |
| 4 | மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர். | எரே 4:7 எசே 19:1-4 எசே 19:6-4 எசே 38:12 எசே 38:13 தானி 7:4-8 தானி 7:17-28 |
| 5 | தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று. | யோபு 40:10-12 ஏசா 46:12 தானி 4:37 லூக் 1:51 லூக் 1:52 |
| 6 | யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. | சங் 18:15 சங் 80:16 சங் 104:7 யாத் 15:1 யாத் 15:21 |
| 7 | நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? | சங் 89:7 எரே 10:7-10 மத் 10:28 வெளிப் 14:7 வெளிப் 15:4 |
| 8 | நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது, | யாத் 19:10 நியா 5:20 2நாளா 32:20-22 எசே 38:20-23 |
| 9 | வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) | சங் 9:7-9 சங் 72:4 சங் 82:2-5 ஏசா 11:4 எரே 5:28 |
| 10 | மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். | ஆதி 37:18-20 ஆதி 37:26-28 ஆதி 50:20 யாத் 9:16 யாத் 9:17 யாத் 15:9-11 யாத் 18:11 தானி 3:19 தானி 3:20 அப் 4:26-28 வெளிப் 11:18 |
| 11 | பொருத்தனைப்பண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள். | சங் 50:14 சங் 119:106 எண் 30:2 பிரச 5:4-6 |
| 12 | பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர். | சங் 2:5 சங் 2:10 சங் 48:4-6 சங் 68:12 சங் 68:35 யோசு 5:1 2நாளா 32:21 செப் 3:6 |