இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 73

                   
புத்தகங்களைக் காட்டு
1சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.சங் 50:1 சங் 74:1 சங் 83:1 1நாளா 6:39 1நாளா 15:17 1நாளா 16:7 1நாளா 16:37 1நாளா 25:1-6 2நாளா 29:30
2ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.சங் 5:7 சங் 17:15 சங் 35:13 யோசு 24:15 1சாமு 12:23 1நாளா 22:7 யோபு 21:4
3துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.சங் 37:1 சங் 37:7 யோபு 21:7 நீதி 3:31 நீதி 24:1 எரே 12:1 யாக் 4:5
4மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.சங் 17:14 யோபு 21:23 யோபு 21:24 யோபு 24:20 பிரச 2:16 பிரச 7:15 லூக் 16:22
5நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.சங் 73:12 யோபு 21:6 நீதி 3:11 நீதி 3:12 எரே 12:1 எரே 12:2 1கொரி 11:32 எபிரெ 12:8 வெளிப் 3:19
6ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.உபா 8:13 உபா 8:14 உபா 32:15 எஸ்தர் 3:1 எஸ்தர் 3:5 எஸ்தர் 3:6 எஸ்தர் 5:9-11 யோபு 21:7-15 பிரச 8:11 எரே 48:11 எரே 48:29 எசே 28:2-5 தானி 4:30
7அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.சங் 17:10 சங் 119:70 யோபு 15:27 ஏசா 3:9 எரே 5:28 எசே 16:49
8அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.சங் 53:1-4 நீதி 30:13 நீதி 30:14
9தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.யாத் 5:2 2நாளா 32:15 யோபு 21:14 தானி 3:15 தானி 7:25 வெளிப் 13:6
10ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.சங் 75:8
11தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.சங் 73:9 சங் 10:11 சங் 94:7 யோபு 22:13 யோபு 22:14 எசே 8:12 செப் 1:12
12இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.சங் 37:35 சங் 52:7 எரே 12:1 எரே 12:2 லூக் 16:19 யாக் 5:1-3
13நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.யோபு 9:27 யோபு 9:31 யோபு 21:15 யோபு 34:9 யோபு 35:3 மல்கி 3:14
14நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.சங் 34:19 சங் 94:12 யோபு 7:3 யோபு 7:4 யோபு 7:18 யோபு 10:3 யோபு 10:17 எரே 15:18 ஆமோ 3:2 எபிரெ 12:5 1பேது 1:6
15இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.1சாமு 2:24 மல்கி 2:8 மத் 18:6 மத் 18:7 ரோம 14:15 ரோம 14:21 1கொரி 8:11-13
16இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,சங் 36:6 சங் 77:19 சங் 97:2 நீதி 30:2 நீதி 30:3 பிரச 8:17 ரோம 11:33
17அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.சங் 27:4 சங் 63:2 சங் 77:13 சங் 119:24 சங் 119:130
18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.சங் 35:6 உபா 32:35 எரே 23:12
19அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.சங் 58:9 யோபு 20:5 ஏசா 30:13 அப் 2:23 1தெச 5:3 வெளிப் 18:10
20நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர்விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.சங் 90:5 யோபு 20:8 ஏசா 29:7 ஏசா 29:8
21இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.சங் 73:3 சங் 37:1 சங் 37:7
22நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.சங் 69:5 சங் 92:6 நீதி 30:2 பிரச 3:18
23ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.சங் 16:8 சங் 23:4 சங் 139:1-12 சங் 139:18-12 ஆதி 17:1 மத் 1:23 மத் 28:20 எபிரெ 13:5
24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.சங் 16:7 சங் 25:9 சங் 32:8 சங் 48:14 சங் 143:8-10 நீதி 3:5 நீதி 3:6 நீதி 8:20 ஏசா 30:21 ஏசா 48:17 ஏசா 58:8 ஏசா 58:11 லூக் 11:13 யோவா 16:13 யாக் 1:5
25பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.சங் 16:5 சங் 16:11 சங் 17:15 சங் 37:4 சங் 43:4 சங் 63:3 சங் 89:6 மத் 5:8 பிலிப் 3:8 1யோவா 3:2 வெளிப் 21:3 வெளிப் 21:22 வெளிப் 21:23
26என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.சங் 63:1 சங் 84:2 சங் 119:81 சங் 119:82 யோபு 13:15 2கொரி 4:8-10 2கொரி 4:16-18 பிலிப் 1:21 2தீமோ 4:6-8 2பேது 1:14
27இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.சங் 119:155 யோபு 21:14 யோபு 21:15 ஏசா 29:13 எரே 12:2 மத் 15:7 மத் 15:8 எபே 2:13 எபே 2:17
28எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.சங் 65:4 சங் 84:10 சங் 116:7 புலம் 3:25 புலம் 3:26 லூக் 15:17-20 எபிரெ 10:19-22 யாக் 4:8 1பேது 3:18
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.