| 1 | தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள். | சங் 7:6 சங் 7:7 சங் 44:26 சங் 78:65-68 சங் 132:8 சங் 132:9 எண் 10:35 2நாளா 6:41 ஏசா 33:3 ஏசா 42:13 ஏசா 42:14 ஏசா 51:9 ஏசா 51:10 |
| 2 | புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள். | சங் 37:20 ஏசா 9:18 ஓசி 13:3 |
| 3 | நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள். | சங் 32:11 சங் 33:1 சங் 58:10 சங் 64:10 சங் 97:12 வெளிப் 18:20 வெளிப் 19:7 |
| 4 | தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். | சங் 66:4 சங் 67:4 ஏசா 12:4-6 |
| 5 | தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். | சங் 10:14 சங் 10:18 சங் 82:3 சங் 82:4 சங் 146:9 யோபு 31:16 யோபு 31:17 எரே 49:11 ஓசி 14:3 |
| 6 | தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். | சங் 107:10 சங் 107:41 சங் 113:9 1சாமு 2:5 கலா 4:27 |
| 7 | தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்து வருகையில். (சேலா) | சங் 114:1-8 யாத் 13:21 உபா 4:34 நியா 4:14 ஆபகூ 3:13 |
| 8 | பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது. | சங் 77:18 சங் 114:7 ஏசா 64:1 ஏசா 64:3 ஆபகூ 3:13 எபிரெ 12:26 வெளிப் 11:19 |
| 9 | தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர். | சங் 65:9-13 சங் 77:16 சங் 77:17 சங் 78:24-27 உபா 11:10-12 உபா 11:14-12 எசே 34:26 |
| 10 | உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர். | சங் 74:1 சங் 74:2 சங் 74:19 யாத் 19:5 யாத் 19:6 எண் 16:3 1பேது 5:3 |
| 11 | ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. | சங் 40:3 யாத் 14:15 யாத் 17:9-16 நியா 4:6-24 எபே 4:11 |
| 12 | சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள். | யாத் 14:25 எண் 31:8 எண் 31:9 எண் 31:54 யோசு 10:16 யோசு 10:42 யோசு 12:7 யோசு 12:8-24 நியா 5:19 வெளிப் 6:15 வெளிப் 19:17-20 |
| 13 | நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள். | சங் 81:6 யாத் 1:14 1கொரி 6:9-11 1கொரி 12:2 எபே 2:1-3 தீத் 3:3 |
| 14 | சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று. | எண் 21:3 எண் 21:21-35 யோசு 10:10-43 யோசு 12:1-24 வெளிப் 19:14-21 |
| 15 | தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது. | சங் 2:6 சங் 78:68 சங் 78:69 சங் 87:1 சங் 87:2 ஏசா 2:2 ஏசா 2:3 |
| 16 | உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார். | சங் 114:4 சங் 114:6 ஏசா 2:2 |
| 17 | தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்த வண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார். | சங் 18:10 உபா 33:2 2இரா 2:11 2இரா 6:16 2இரா 6:17 எசே 1:15-28 தானி 7:10 மத் 26:53 வெளிப் 5:11 வெளிப் 9:16 |
| 18 | தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர். | சங் 24:3 சங் 24:7-10 சங் 47:5 சங் 110:1 மாற் 16:9 லூக் 24:51 அப் 1:2-9 எபே 4:8-10 எபிரெ 4:14 எபிரெ 6:20 எபிரெ 8:1 1பேது 3:22 |
| 19 | எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா) | சங் 72:17-19 சங் 103:1-22 எபே 1:3 |
| 20 | நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. | ஏசா 12:2 ஏசா 45:17-22 ஓசி 1:7 யோவா 4:22 |
| 21 | மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார். | சங் 110:6 ஆபகூ 3:13 மாற் 12:4 |
| 22 | உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும், | எண் 21:33 ஏசா 11:11-16 ஏசா 49:22 |
| 23 | என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்; அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார். | சங் 58:10 |
| 24 | தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள். | சங் 24:7-10 சங் 47:5-7 2சாமு 6:12-17 1நாளா 13:8 1நாளா 15:16-24 |
| 25 | முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள். | சங் 87:7 சங் 150:3-5 வெளிப் 14:2 வெளிப் 14:3 வெளிப் 15:2 வெளிப் 15:3 |
| 26 | இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். | சங் 107:32 சங் 111:1 சங் 135:19-21 1நாளா 16:7 1நாளா 16:8-36 |
| 27 | அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு. | ஆதி 42:32 நியா 20:35 நியா 21:6-25 1சாமு 9:21 1நாளா 12:16 1நாளா 12:29 1நாளா 15:3 1நாளா 27:12 |
| 28 | உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்கள் நிமித்தம் உண்டு பண்ணினதைத் திடப்படுத்தும். | சங் 42:8 சங் 44:4 சங் 71:3 ஏசா 40:31 யோவா 5:8 யோவா 5:9 அப் 3:6-8 2கொரி 12:9 2கொரி 12:10 |
| 29 | எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். | 1நாளா 17:4-12 1நாளா 22:7-11 1நாளா 28:10-21 1நாளா 29:3 2நாளா 2:5 2நாளா 2:6 2நாளா 6:8 2நாளா 6:9 |
| 30 | நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார். | 2சாமு 8:1-18 2சாமு 10:1-19 2நாளா 14:1-15 2நாளா 20:1-37 ஏசா 37:1-38 |
| 31 | பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும். | சங் 72:8-11 ஏசா 19:18-25 ஏசா 45:14 ஏசா 60:6 ஏசா 60:7 ஏசா 66:19 |
| 32 | பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். (சேலா) | சங் 67:2-5 சங் 100:1 சங் 117:1 சங் 117:2 உபா 32:43 ரோம 15:10 ரோம 15:11 வெளிப் 15:4 |
| 33 | ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார். | சங் 68:4 சங் 18:10 சங் 104:3 |
| 34 | தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது. | சங் 29:1 சங் 29:2 சங் 96:6-8 1நாளா 16:28 1நாளா 16:29 வெளிப் 19:6 |
| 35 | தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. | சங் 45:4 சங் 65:5 சங் 66:5 சங் 76:12 யாத் 15:1 நெகே 1:5 எபிரெ 12:24-29 வெளிப் 6:16 வெளிப் 6:17 |