| 1 | தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், | சங் 4:1 சங் 6:1 சங் 76:1 |
| 2 | தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா) | சங் 98:2 சங் 98:3 எஸ்தர் 8:15-17 சகரி 8:20-23 அப் 9:31 |
| 3 | தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. | சங் 67:5 சங் 45:17 சங் 74:21 சங் 119:175 சங் 142:7 ஏசா 38:18 ஏசா 38:19 |
| 4 | தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா) | சங் 97:1 சங் 138:4 சங் 138:5 உபா 32:43 ஏசா 24:14-16 ஏசா 42:10-12 ஏசா 54:1 ரோம 15:10 ரோம 15:11 கலா 4:27 |
| 5 | தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. | சங் 67:3 மத் 6:9 மத் 6:10 |
| 6 | பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். | சங் 85:9-12 லேவி 26:4 ஏசா 1:19 ஏசா 30:23 ஏசா 30:24 எசே 34:26 எசே 34:27 ஓசி 2:21 ஓசி 2:22 1கொரி 3:6-9 |
| 7 | தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். | சங் 29:11 சங் 72:17 ஆதி 12:2 ஆதி 12:3 அப் 2:28 கலா 3:9 கலா 3:14 |