| 1 | பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். | சங் 81:1 சங் 95:1 சங் 95:2 சங் 98:4 சங் 100:1 1நாளா 15:28 |
| 2 | அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். | சங் 47:6 சங் 47:7 சங் 72:18 சங் 96:3-10 சங் 105:2 சங் 105:3 சங் 106:2 சங் 107:15 சங் 107:22 1நாளா 29:10-13 நெகே 9:5 ஏசா 6:3 ஏசா 12:4-6 ஏசா 49:13 வெளிப் 4:8-11 வெளிப் 5:13 |
| 3 | தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்தருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். | சங் 47:2 சங் 65:5 சங் 76:12 யாத் 15:1-16 யாத் 15:21-16 நியா 5:2-4 நியா 5:20-22 ஏசா 2:19 ஏசா 64:3 எரே 10:10 |
| 4 | பூமியின்மீதெங்கும் உம்மைப்பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா) | சங் 22:27 சங் 65:5 சங் 67:2 சங் 67:3 சங் 96:1 சங் 96:2 சங் 117:1 ஏசா 2:2-4 ஏசா 11:9 ஏசா 42:10-12 ஏசா 49:22 ஏசா 49:23 தானி 7:14 மல்கி 1:11 வெளிப் 15:4 |
| 5 | தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங்கிரியையில் பயங்கரமானவர். | சங் 66:16 சங் 46:8 சங் 111:2 சங் 126:1-3 எண் 23:23 |
| 6 | கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம். | சங் 78:13 சங் 106:8-10 சங் 104:5-7 சங் 136:13 சங் 136:14 யாத் 14:21 யாத் 14:22 ஏசா 63:13 ஏசா 63:14 |
| 7 | அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா) | சங் 62:11 தானி 4:35 தானி 6:26 தானி 6:27 மத் 6:13 மத் 28:18 |
| 8 | ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள். | உபா 32:43 ரோம 15:10 ரோம 15:11 |
| 9 | அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். | சங் 22:29 1சாமு 25:29 அப் 17:28 கொலோ 3:3 கொலோ 3:4 |
| 10 | தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். | சங் 17:3 உபா 8:2 உபா 8:16 உபா 13:3 |
| 11 | எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். | யோபு 19:6 புலம் 1:13 புலம் 3:2-66 ஓசி 7:12 மத் 6:13 |
| 12 | மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர். | சங் 129:1-3 ஏசா 51:23 |
| 13 | சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்; | சங் 51:18 சங் 51:19 சங் 100:4 சங் 118:19 சங் 118:27 உபா 12:11 உபா 12:12 எபிரெ 13:15 |
| 14 | என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். | நியா 11:35 நியா 11:36 |
| 15 | ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா) | எரே 41:5 |
| 16 | தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். | சங் 66:5 சங் 34:2 சங் 34:11 சங் 71:18 மல்கி 3:16 1தீமோ 1:15 1தீமோ 1:16 1யோவா 1:3 |
| 17 | அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். | சங் 30:8 சங் 34:3 சங் 34:4 சங் 34:6 சங் 116:1 சங் 116:2 சங் 116:12 |
| 18 | என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். | யோபு 27:8 யோபு 27:9 நீதி 15:8 நீதி 15:29 நீதி 21:13 நீதி 28:9 ஏசா 1:15 யோவா 9:31 யாக் 4:3 |
| 19 | மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். | சங் 6:9 சங் 34:6 சங் 116:1 சங் 116:2 புலம் 3:55 புலம் 3:56 எபிரெ 5:7 1யோவா 3:20-22 |
| 20 | என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. | சங் 51:11 சங் 86:12 சங் 86:13 2சாமு 7:14 2சாமு 7:15 |