இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 69

                   
புத்தகங்களைக் காட்டு
1தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.சங் 45:1 சங் 60:1 சங் 80:1
2ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.சங் 40:2 எரே 38:6 எரே 38:22
3நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.சங் 6:6 சங் 13:1-3 சங் 22:2 எபிரெ 5:7
4நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.யோவா 15:25 1பேது 2:22
5தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.சங் 17:3 சங் 19:12 சங் 44:20 சங் 44:21
6சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக.சங் 7:7 சங் 25:3 சங் 35:26 ஏசா 49:23 லூக் 24:19-21 அப் 4:7
7உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.சங் 22:6-8 சங் 44:22 எரே 15:15 யோவா 15:21-24
8என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.சங் 31:11 யோபு 19:13-19 மத் 26:48-50 மத் 26:56-50 மத் 26:70-74 யோவா 1:11 யோவா 7:5
9உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.சங் 119:139 1இரா 19:10 1நாளா 15:27-29 1நாளா 29:3 மாற் 11:15-17 யோவா 2:14-17
10என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.சங் 102:8 சங் 102:9 சங் 109:24 சங் 109:25 லூக் 7:33 லூக் 7:34
11இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.சங் 35:13 சங் 35:14 ஏசா 20:2 ஏசா 22:12 யோவே 1:8 யோவே 1:13
12வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடலானேன்.உபா 16:18 மத் 27:12 மத் 27:13 மத் 27:20 மத் 27:41 மத் 27:42 மத் 27:62 மத் 27:63 லூக் 23:2 அப் 4:26 அப் 4:27
13ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.சங் 55:16 சங் 55:17 சங் 91:15 மத் 26:36-46 லூக் 22:44 யோவா 17:1-26 எபிரெ 5:7 1பேது 2:23
14நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.சங் 40:1-3 எரே 38:6-13 புலம் 3:55
15ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.ஏசா 43:1 ஏசா 43:2 யோனா 2:2-7 மத் 12:40 வெளிப் 12:15 வெளிப் 12:16
16கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.சங் 36:7 சங் 63:3 சங் 109:21
17உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.சங் 13:1 சங் 22:24 சங் 27:9 சங் 44:24 சங் 102:2 சங் 143:9 மத் 27:46
18நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.சங் 10:1 சங் 22:1 சங் 22:19 எரே 14:8
19தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.சங் 69:7-9 சங் 22:6 சங் 22:7 ஏசா 53:3 எபிரெ 12:2 1பேது 2:23
20நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.சங் 42:10 சங் 123:4 எபிரெ 11:36
21என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.எரே 8:14 எரே 9:15 எரே 23:15 மத் 27:34 மத் 27:48
22அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.நீதி 1:32 மல்கி 2:2 ரோம 11:8-10
23அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.ஏசா 6:9 ஏசா 6:10 ஏசா 29:9 ஏசா 29:10 மத் 13:14 மத் 13:15 யோவா 12:39 யோவா 12:40 அப் 28:26 அப் 28:27 ரோம 11:25 2கொரி 3:14
24உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.சங் 79:6 லேவி 26:14-46 உபா 28:15-68 உபா 29:18-28 உபா 31:17 உபா 32:20-26 ஓசி 5:10 மத் 23:35-37 லூக் 21:22 1தெச 2:15 1தெச 2:16 வெளிப் 16:1
25அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.1இரா 9:8 எரே 7:12-14 மத் 23:38 மத் 24:1 மத் 24:2 அப் 1:20
26தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.சங் 109:16 2நாளா 28:9 யோபு 19:21 யோபு 19:22 சகரி 1:15 1தெச 2:15
27அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.சங் 81:12 யாத் 8:15 யாத் 8:32 யாத் 9:12 லேவி 26:39 ஏசா 5:6 மத் 21:19 மத் 23:31 மத் 23:32 மத் 27:4 மத் 27:5 ரோம 1:28 ரோம 9:18 2தெச 2:11 2தெச 2:12 வெளிப் 22:10 வெளிப் 22:11
28ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.யாத் 32:32 யாத் 32:33 ஏசா 65:16 ஓசி 1:9 வெளிப் 3:5 வெளிப் 22:19
29நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.சங் 40:17 சங் 109:22 சங் 109:31 ஏசா 53:2 ஏசா 53:3 மத் 8:20 2கொரி 8:9
30தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.சங் 28:7 சங் 40:1-3 சங் 118:21 சங் 118:28 சங் 118:29
31கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.சங் 50:13 சங் 50:14 சங் 50:23 ஓசி 14:2 எபே 5:19 எபே 5:20 எபிரெ 13:15 1பேது 2:5
32சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.சங் 25:9 சங் 34:2 ஏசா 61:1-3 யோவா 16:22 யோவா 20:20
33கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.சங் 10:17 சங் 34:6 சங் 72:12-14 சங் 102:17 சங் 102:20 ஏசா 66:2 லூக் 4:18
34வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிறயாவும் அவரைத் துதிக்கக்கடவது.சங் 96:11 சங் 98:7 சங் 98:8 சங் 148:1-14 சங் 150:6 ஏசா 44:22 ஏசா 44:23 ஏசா 49:13 ஏசா 55:12 வெளிப் 7:11-13
35தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.சங் 51:18 சங் 102:13 சங் 102:16 சங் 147:12 சங் 147:13 ஏசா 14:32 ஏசா 44:26 ஏசா 46:13 வெளிப் 14:1
36அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.சங் 90:16 சங் 90:17 சங் 102:28 ஏசா 44:3 ஏசா 44:4 ஏசா 61:9 அப் 2:39
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.