| 1 | அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக. | சங் 148:1 |
| 2 | இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள். | சங் 100:1-3 சங் 135:3 சங் 135:4 உபா 7:6 உபா 7:7 உபா 12:7 1சாமு 12:22 யோபு 35:10 ஏசா 54:5 |
| 3 | அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம் பண்ணக்கடவர்கள். | சங் 150:4 யாத் 15:20 நியா 11:34 2சாமு 6:16 எரே 31:13 |
| 4 | கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். | சங் 22:8 சங் 35:27 சங் 117:2 சங் 147:11 நீதி 11:20 ஏசா 62:4 ஏசா 62:5 எரே 32:41 செப் 3:17 |
| 5 | பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். | சங் 23:1 சங் 118:15 சங் 145:10 ரோம 5:2 1பேது 1:8 |
| 6 | ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களை தண்டிக்கவும், | சங் 96:4 நெகே 9:5 தானி 4:37 லூக் 2:14 வெளிப் 19:6 |
| 7 | அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும், | சங் 137:8 சங் 137:9 எண் 31:2 எண் 31:3 நியா 5:23 1சாமு 15:2 1சாமு 15:3 1சாமு 15:18-23 சகரி 9:13-16 சகரி 14:17-19 வெளிப் 19:11-21 |
| 8 | அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும். | யோசு 10:23 யோசு 10:24 யோசு 12:7 நியா 1:6 நியா 1:7 |
| 9 | இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா. | சங் 137:8 உபா 7:1 உபா 7:2 உபா 32:42 உபா 32:43 ஏசா 14:22 ஏசா 14:23 வெளிப் 17:14-16 |