| 1 | கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. | சங் 63:3-5 சங் 92:1 சங் 135:3 |
| 2 | கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். | சங் 51:18 சங் 102:13-16 நெகே 3:1-16 நெகே 7:4 ஏசா 14:32 ஏசா 62:7 எரே 31:4 தானி 9:25 மத் 16:18 |
| 3 | இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். | சங் 51:17 யோபு 5:18 ஏசா 57:15 ஏசா 61:1 எரே 33:6 ஓசி 6:1 ஓசி 6:2 மல்கி 4:2 லூக் 4:18 |
| 4 | அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். | சங் 8:3 சங் 148:3 ஆதி 15:5 ஏசா 40:26 |
| 5 | நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. | சங் 48:1 சங் 96:4 சங் 99:2 சங் 135:5 சங் 145:3 1நாளா 16:25 எரே 10:6 எரே 32:17-19 நாகூ 1:3 வெளிப் 15:3 |
| 6 | கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். | சங் 25:9 சங் 37:11 சங் 145:14 சங் 146:8 சங் 146:9 சங் 149:4 1சாமு 2:8 செப் 2:3 மத் 5:5 யாக் 4:10 1பேது 3:4 1பேது 5:6 |
| 7 | கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள். | சங் 47:6 சங் 47:7 சங் 68:32 சங் 92:1-3 சங் 95:1 சங் 95:2 சங் 107:21 சங் 107:22 யாத் 15:20 யாத் 15:21 வெளிப் 5:8-10 |
| 8 | அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். | சங் 135:1 ஆதி 9:14 1இரா 18:44 1இரா 18:45 யோபு 26:8 யோபு 26:9 யோபு 36:27-33 யோபு 38:24-27 ஏசா 5:6 |
| 9 | அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். | சங் 104:27 சங் 104:28 சங் 136:25 சங் 145:15 சங் 145:16 யோபு 38:41 மத் 6:26 லூக் 12:24 |
| 10 | அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். | சங் 20:7 சங் 33:16-18 யோபு 39:19-25 நீதி 21:31 ஏசா 31:1 ஓசி 1:7 |
| 11 | தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். | சங் 35:27 சங் 149:4 நீதி 11:20 நீதி 31:30 ஏசா 62:4 செப் 3:17 மல்கி 3:16 மல்கி 3:17 1பேது 3:4 |
| 12 | எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி. | சங் 135:19-21 சங் 146:10 சங் 149:2 ஏசா 12:6 ஏசா 52:7 யோவே 2:23 |
| 13 | அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். | சங் 48:11-14 சங் 51:18 சங் 125:2 நெகே 3:1-16 நெகே 6:1 நெகே 7:1 நெகே 12:30 புலம் 2:8 புலம் 2:9 புலம் 4:12 தானி 9:25 |
| 14 | அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். | சங் 29:11 சங் 122:6 லேவி 26:6 1நாளா 22:9 ஏசா 9:6 ஏசா 9:7 ஏசா 60:17 ஏசா 60:18 ஏசா 66:12 சகரி 9:8 |
| 15 | அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது. | சங் 33:9 சங் 107:20 சங் 107:25 யோபு 34:29 யோபு 37:12 யோனா 1:4 மத் 8:8 மத் 8:9 மத் 8:13 |
| 16 | பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். | சங் 148:8 யோபு 37:6 ஏசா 55:10 |
| 17 | அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? | சங் 78:47 சங் 78:48 யாத் 9:23-25 யோசு 10:11 யோபு 38:22 யோபு 38:23 |
| 18 | அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். | சங் 147:15 யோபு 6:16 யோபு 6:17 யோபு 37:10 யோபு 37:17 |
| 19 | யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். | சங் 76:1 சங் 78:5 சங் 103:7 உபா 33:2-4 மல்கி 4:4 ரோம 3:2 ரோம 9:4 2தீமோ 3:15-17 |
| 20 | அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா. | உபா 4:32-34 நீதி 29:18 ஏசா 5:1-7 மத் 21:33-41 அப் 14:16 அப் 26:27 அப் 26:18 ரோம 3:1 ரோம 3:2 எபே 2:12 எபே 5:8 1பேது 2:9 1பேது 2:10 |