இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 139

                   
புத்தகங்களைக் காட்டு
1கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.சங் 139:23 சங் 11:4 சங் 11:5 சங் 17:3 சங் 44:21 1இரா 8:39 1நாளா 28:9 எரே 12:3 எரே 17:9 எரே 17:10 யோவா 21:17 எபிரெ 4:13 வெளிப் 2:18 வெளிப் 2:23
2என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.சங் 56:8 ஆதி 16:13 2இரா 6:12 2இரா 19:27 நீதி 15:3 ஏசா 37:28 சகரி 4:10
3நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.யோபு 13:26 யோபு 13:27 யோபு 14:16 யோபு 14:17 யோபு 31:4 மத் 3:12
4என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.சங் 19:14 யோபு 8:2 யோபு 38:2 யோபு 42:3 யோபு 42:6-8 செப் 1:12 மல்கி 3:13-16 மத் 12:35-37 யாக் 1:26 யாக் 3:2-10
5முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.உபா 33:27 யோபு 23:8 யோபு 23:9
6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.சங் 40:5 சங் 13:1 யோபு 11:7-9 யோபு 26:14 யோபு 42:3 நீதி 30:2-4 ரோம 11:33
7உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?எரே 23:23 எரே 23:24 யோனா 1:3 யோனா 1:10 அப் 5:9
8நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.எசே 28:12-17 ஆமோ 9:2-4 ஒபதி 1:4
9நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,சங் 18:10 சங் 19:6 மல்கி 4:2
10அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.சங் 63:8 சங் 73:23 சங் 143:9 சங் 143:10 ஏசா 41:13
11இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.சங் 10:11-13 சங் 94:7 யோபு 22:12-14 ஏசா 29:15 எரே 23:24
12உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.யாத் 14:20 யாத் 20:21 யோபு 26:6 யோபு 34:22 தானி 2:22 எபிரெ 4:13
13நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.யோபு 10:9-12
14நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.ஆதி 1:26 ஆதி 1:27
15நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.சங் 139:13 யோபு 10:9-11 யாத் 11:5
16என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.சங் 56:8 மல்கி 3:16 வெளிப் 20:12
17தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.சங் 40:5 நீதி 8:31 ஏசா 55:8 ஏசா 55:9 எரே 29:11 எபே 3:9 எபே 3:10
18அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.சங் 40:12
19தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.சங் 5:6 சங் 9:17 சங் 55:23 சங் 64:7 சங் 94:23 ஏசா 11:4
20அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.சங் 73:8 சங் 73:9 சங் 74:18 சங் 74:22 சங் 74:23 யோபு 21:14 யோபு 21:15 ஏசா 37:23 ஏசா 37:28 ஏசா 37:29 யூதா 1:15 வெளிப் 13:6
21கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?சங் 15:4 சங் 31:6 2நாளா 19:2 வெளிப் 2:2 வெளிப் 2:6
22முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.சங் 101:3-8 லூக் 14:26
23தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.சங் 139:1 சங் 26:2
24வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.சங் 7:3 சங் 7:4 சங் 17:3 நீதி 28:26 எரே 17:9 எரே 17:10
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.