| 1 | பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். | ஆதி 2:10-14 எஸ்றா 8:21 எஸ்றா 8:31 எசே 1:1 |
| 2 | அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். | சங் 33:2 சங் 81:2 ஏசா 24:8 எசே 26:13 ஆமோ 8:10 வெளிப் 18:22 |
| 3 | எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். | சங் 123:3 சங் 123:4 புலம் 2:15 புலம் 2:16 |
| 4 | கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? | பிரச 3:4 ஏசா 22:12 புலம் 5:14 புலம் 5:15 ஓசி 9:4 ஆமோ 8:3 |
| 5 | எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக. | சங் 84:1 சங் 84:2 சங் 84:10 சங் 102:13 சங் 102:14 சங் 122:5-9 நெகே 1:2-4 நெகே 2:2 நெகே 2:3 ஏசா 62:1 ஏசா 62:6 ஏசா 62:7 எரே 51:50 தானி 6:10 தானி 6:11 |
| 6 | நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக. | சங் 22:15 ஏசா 41:17 புலம் 4:4 எசே 3:26 |
| 7 | கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே. | சங் 74:18 சங் 79:8-12 யாத் 17:14 1சாமு 15:2 ஓசி 7:2 |
| 8 | பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். | ஏசா 47:1-5 எரே 50:42 எரே 51:33 சகரி 2:7 |
| 9 | உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். | ஏசா 13:16 ஓசி 10:14 ஓசி 13:16 |