1கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.சங் 121:1 சங் 122:1 சங் 123:1 சங் 124:1 சங் 125:1 சங் 126:1 சங் 127:1 சங் 128:1 சங் 129:1 2ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக.சங் 5:1 சங் 5:2 சங் 17:1 சங் 55:1 சங் 55:2 சங் 61:1 சங் 61:2 2நாளா 6:40 நெகே 1:6 நெகே 1:11 ஏசா 37:17 தானி 9:17-19 3கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.சங் 143:2 யோபு 9:2 யோபு 9:3 யோபு 9:20 யோபு 10:14 யோபு 15:14 ஏசா 53:6 யோவா 8:7-9 ரோம 3:20-24 4உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.சங் 25:11 சங் 86:5 சங் 103:2 சங் 103:3 யாத் 34:5-7 ஏசா 1:18 ஏசா 55:7 எரே 31:34 தானி 9:9 மீகா 7:18-20 ரோம 8:1 2கொரி 5:19 எபே 1:7 கொலோ 1:14 5கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.சங் 27:14 சங் 33:20 சங் 40:1 சங் 62:1 சங் 62:5 ஆதி 49:18 ஏசா 8:17 ஏசா 26:8 ஏசா 30:18 லூக் 2:25 லூக் 2:38 6எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.சங் 63:6 சங் 119:147 அப் 27:29 7இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.சங் 40:3 சங் 71:5 சங் 115:9-13 சங் 131:1 சங் 131:3 செப் 3:12 8அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களின்றும் மீட்டுக்கொள்வார்.சங் 103:3 சங் 103:4 மத் 1:21 ரோம 6:14 தீத் 2:14 1யோவா 3:5-8