| 1 | கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. | சங் 118:29 சங் 103:17 சங் 106:1 சங் 107:1 சங் 136:1 1நாளா 16:8 1நாளா 16:34 எரே 33:11 |
| 2 | அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. | சங் 115:9-11 சங் 135:19 சங் 135:20 சங் 145:10 சங் 147:19 சங் 147:20 கலா 6:16 எபிரெ 13:15 1பேது 2:9 1பேது 2:10 |
| 3 | அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. | சங் 134:1-3 1பேது 2:5 வெளிப் 1:6 வெளிப் 4:7-11 வெளிப் 5:8-10 |
| 4 | அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. | சங் 22:23 வெளிப் 19:5 |
| 5 | நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். | சங் 18:6 சங் 40:1-3 சங் 77:2 சங் 107:13 சங் 107:19 சங் 116:3 சங் 116:4 சங் 120:1 சங் 130:1 சங் 130:2 ஆதி 32:7 ஆதி 32:9-11 1சாமு 30:6-8 மாற் 14:31-36 |
| 6 | கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்? | சங் 27:1-3 சங் 46:1 சங் 46:11 சங் 56:4 சங் 56:9 சங் 56:11 சங் 146:5 ஏசா 51:12 எரே 20:11 மீகா 7:8-10 ரோம 8:31 எபிரெ 13:6 |
| 7 | எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். | சங் 54:4 சங் 55:18 1நாளா 12:18 |
| 8 | மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். | சங் 40:4 சங் 62:8 சங் 62:9 எரே 17:5-7 மீகா 7:5-7 |
| 9 | பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். | சங் 146:3-5 ஏசா 30:2 ஏசா 30:3 ஏசா 30:15-17 ஏசா 31:1 ஏசா 31:8 ஏசா 36:6 ஏசா 36:7 எசே 29:7 |
| 10 | எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். | 2சாமு 5:1-25 2சாமு 8:1-18 2சாமு 10:1-19 சகரி 12:3 சகரி 14:1-3 வெளிப் 19:19-21 வெளிப் 20:8 வெளிப் 20:9 |
| 11 | என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். | சங் 22:12-16 சங் 88:17 1சாமு 23:26 1நாளா 19:10 |
| 12 | தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். | உபா 1:44 |
| 13 | நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார். | சங் 18:17 சங் 18:18 சங் 56:1-3 1சாமு 20:3 1சாமு 25:29 2சாமு 17:1-3 மீகா 7:8 மத் 4:1-11 எபிரெ 2:14 |
| 14 | கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார். | சங் 18:2 யாத் 15:2-6 ஏசா 12:2 ஏசா 45:17 ஏசா 45:22-25 மத் 1:21-23 |
| 15 | நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். | சங் 30:11 சங் 30:12 சங் 32:11 சங் 33:1 சங் 119:54 சங் 119:111 உபா 12:12 ஏசா 51:11 ஏசா 65:13 அப் 2:46 அப் 2:47 அப் 16:34 வெளிப் 18:20 வெளிப் 19:1-5 |
| 16 | கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். | யாத் 15:6 அப் 2:32-36 |
| 17 | நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். | சங் 6:5 ஏசா 38:16-20 ஆபகூ 1:12 யோவா 11:4 ரோம 14:7-9 |
| 18 | கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. | சங் 66:10-12 சங் 94:12 சங் 94:13 2சாமு 12:10 2சாமு 13:1-39 2சாமு 16:1-23 யோபு 5:17 யோபு 5:18 யோபு 33:16-30 நீதி 3:11 நீதி 3:12 யோனா 2:6 1கொரி 11:32 2கொரி 1:9-11 2கொரி 6:9 எபிரெ 12:10 எபிரெ 12:11 |
| 19 | நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன். | ஏசா 26:2 வெளிப் 22:14 |
| 20 | கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள். | சங் 24:3 சங் 24:4 சங் 24:7 சங் 24:9 ஏசா 26:2 ஏசா 35:8-10 வெளிப் 21:24-27 வெளிப் 22:14 வெளிப் 22:15 |
| 21 | நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன். | சங் 22:23 சங் 22:24 சங் 69:33 சங் 69:34 சங் 116:1 |
| 22 | வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. | மத் 21:42 மாற் 12:10 மாற் 12:11 லூக் 20:17 அப் 4:11 எபே 2:20-22 1பேது 2:4-8 |
| 23 | அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. | அப் 2:32-36 அப் 3:14 அப் 3:15 அப் 5:31 அப் 5:32 எபே 1:19-22 |
| 24 | இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். | சகரி 3:9 மத் 28:1-8 யோவா 20:19 யோவா 20:20 அப் 20:7 வெளிப் 1:10 |
| 25 | கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். | சங் 20:9 சங் 22:21 சங் 69:1 சங் 69:13 |
| 26 | கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். | சகரி 4:7 மத் 21:9 மத் 23:39 மாற் 11:9 மாற் 11:10 லூக் 19:38 யோவா 12:13 |
| 27 | கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். | 1இரா 18:21 1இரா 18:39 |
| 28 | நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். | சங் 145:1 சங் 146:2 யாத் 15:2 ஏசா 12:2 ஏசா 25:1 ஏசா 25:9 |
| 29 | கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. | சங் 118:1 சங் 103:17 எஸ்றா 3:11 ஏசா 63:7 |