| 1 | எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும். | சங் 74:22 சங் 79:9 சங் 79:10 யோசு 7:9 ஏசா 48:11 எசே 20:14 எசே 36:32 தானி 9:19 எபே 1:6 வெளிப் 4:10 வெளிப் 4:11 |
| 2 | அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? | சங் 42:3 சங் 42:10 சங் 79:10 யாத் 32:12 எண் 14:15 எண் 14:16 உபா 32:26 உபா 32:27 2இரா 19:10-19 யோவே 2:17 |
| 3 | நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார். | சங் 2:4 சங் 68:4 சங் 123:1 1நாளா 16:25 மத் 6:9 |
| 4 | அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. | சங் 97:7 சங் 135:15-17 உபா 4:28 ஏசா 40:19 ஏசா 40:20 ஏசா 42:17 ஏசா 46:1 ஏசா 46:2 ஏசா 46:6 ஏசா 46:7 எரே 10:3-5 ஓசி 8:6 ஆபகூ 2:18-20 அப் 19:26 அப் 19:35 1கொரி 10:19 1கொரி 10:20 |
| 5 | அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. |
| 6 | அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. |
| 7 | அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. |
| 8 | அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். | சங் 135:18 ஏசா 44:9-20 எரே 10:8 யோனா 2:8 ஆபகூ 2:18 ஆபகூ 2:19 |
| 9 | இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். | சங் 118:2-4 சங் 135:19 சங் 135:20 யாத் 19:5 |
| 10 | ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். | யாத் 28:1 எண் 16:5 எண் 16:40 எண் 18:7 |
| 11 | கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். | சங் 33:18 சங் 118:4 சங் 147:11 நீதி 14:26 நீதி 30:5 அப் 10:35 வெளிப் 19:5 |
| 12 | கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். | சங் 25:7 சங் 136:23 ஆதி 8:1 யாத் 2:24 யாத் 2:25 ஏசா 44:21 ஏசா 49:14-16 அப் 10:4 |
| 13 | கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். | சங் 29:11 சங் 112:1 சங் 128:1 சங் 128:4 சங் 128:5 மல்கி 3:16 மல்கி 3:17 மல்கி 4:2 லூக் 1:50 அப் 13:26 கொலோ 3:11 |
| 14 | கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். | ஆதி 13:16 2சாமு 24:3 ஏசா 2:2 ஏசா 2:3 ஏசா 27:6 ஏசா 19:20 ஏசா 19:21 ஏசா 56:8 ஏசா 60:4-22 எரே 30:19 எரே 33:22 ஓசி 1:10 சகரி 8:20-23 சகரி 10:8 வெளிப் 7:4 வெளிப் 7:9 |
| 15 | வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். | சங் 3:8 ஆதி 14:19 ஆதி 32:26-29 எபே 1:3 எபே 1:4 1பேது 3:9 |
| 16 | வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். | சங் 89:11 சங் 144:5 சங் 148:4 ஏசா 66:1 புலம் 3:66 யோவா 14:2 |
| 17 | மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். | சங் 6:5 சங் 30:9 சங் 88:10-12 ஏசா 38:18 ஏசா 38:19 |
| 18 | நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா. | சங் 113:2 சங் 118:17-19 சங் 145:2 சங் 145:21 தானி 2:20 வெளிப் 5:13 |