1அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.சங் 112:1 2இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.சங் 41:13 சங் 106:48 1நாளா 16:36 1நாளா 29:10-13 தானி 2:20 எபே 3:21 வெளிப் 5:13 3சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.சங் 72:11 சங் 72:17-19 சங் 86:9 ஏசா 24:16 ஏசா 42:10-12 ஏசா 49:13 ஏசா 59:19 ஆபகூ 2:14 மல்கி 1:11 ரோம 15:9 ரோம 15:10 வெளிப் 11:15 4கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.சங் 97:9 சங் 99:2 ஏசா 40:15 ஏசா 40:17 ஏசா 40:22 5உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?சங் 89:6 சங் 89:8 யாத் 15:11 உபா 33:26 ஏசா 40:18 ஏசா 40:25 ஏசா 16:5 எரே 10:6 6அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.சங் 11:4 யோபு 4:18 யோபு 15:15 ஏசா 6:2 7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.சங் 75:6 சங் 75:7 சங் 107:41 யோபு 5:11 யோபு 5:15 யோபு 5:16 எசே 17:24 எசே 21:26 எசே 21:27 லூக் 1:52 லூக் 1:53 யாக் 2:5 8அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.சங் 45:16 சங் 68:13 ஆதி 41:41 பிலிப் 2:8-11 வெளிப் 5:9 வெளிப் 5:10 9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.சங் 68:6 ஆதி 21:5-7 ஆதி 25:21 ஆதி 30:22 ஆதி 30:23 1சாமு 2:5 ஏசா 54:1 லூக் 1:13-15 கலா 4:27