| 1 | தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன்; என் மகிமையும் பாடும். | சங் 57:7-11 |
| 2 | வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன். | சங் 33:2 சங் 69:30 சங் 81:2 சங் 92:1-4 நியா 5:12 |
| 3 | கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன். | சங் 22:22 சங் 22:27 சங் 96:10 சங் 117:1 சங் 138:4 சங் 138:5 செப் 3:14 செப் 3:20 |
| 4 | உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. | சங் 36:5 சங் 85:10 சங் 89:2 சங் 89:5 சங் 103:11 ஏசா 55:9 மீகா 7:18-20 எபே 2:4-7 |
| 5 | தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. | சங் 8:1 சங் 21:13 சங் 57:5 சங் 57:11 சங் 148:13 1நாளா 29:10-13 |
| 6 | உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். | சங் 60:5-12 உபா 33:12 2சாமு 12:25 மத் 3:17 மத் 17:5 ரோம 1:7 எபே 1:6 கொலோ 3:12 |
| 7 | தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். | சங் 89:35 சங் 89:36 ஆமோ 4:2 |
| 8 | கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன். | யோசு 13:8-11 2சாமு 2:8 2சாமு 5:5 |
| 9 | மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன். | சங் 60:8-10 2சாமு 8:1 2சாமு 8:2 யோவா 13:8 யோவா 13:14 |
| 10 | அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? | சங் 20:6-8 சங் 60:1 ஏசா 63:1-6 எரே 49:7-16 ஒபதி 1:3 ஒபதி 1:4 |
| 11 | எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா? | சங் 44:9 1சாமு 29:1-31 |
| 12 | இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா. | சங் 20:1-9 |
| 13 | தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார். | சங் 18:29-34 சங் 118:6-13 சங் 144:1 2நாளா 20:12 1கொரி 15:10 எபே 6:10-18 |