இணை வசன வேதாகமம்

Click to Subscribe

சங்கீதம் 106

                   
புத்தகங்களைக் காட்டு
1அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.சங் 105:45
2கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?சங் 40:5 சங் 139:17 சங் 139:18 சங் 145:3-12 யோபு 5:9 யோபு 26:14 ரோம 11:33 எபே 1:19 எபே 3:18
3நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.சங் 1:1-3 சங் 84:11 சங் 84:12 சங் 119:1-3 மாற் 3:35 லூக் 6:47-49 லூக் 11:28 யோவா 13:17 யோவா 15:14 யாக் 1:25 வெளிப் 7:15 வெளிப் 22:14
4கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு,சங் 25:7 சங் 119:132 நெகே 5:19 நெகே 13:14 நெகே 13:22 நெகே 13:31 லூக் 23:42
5உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.சங் 105:6 சங் 105:43 உபா 7:6 யோவா 15:16 அப் 9:15 எபே 1:4 2தெச 2:13 யாக் 2:5 1பேது 2:9 வெளிப் 17:14
6எங்கள் பிதாக்களோடுங்கூட நாங்களும் பாவஞ்செய்து, அக்கிரமம் நடப்பித்து, ஆகாமியம் பண்ணினோம்.சங் 78:8 லேவி 26:40 எண் 32:14 1இரா 8:47 எஸ்றா 9:6 எஸ்றா 9:7 நெகே 9:16 நெகே 9:32-34 தானி 9:5-8 மத் 23:32 அப் 7:51 அப் 7:52
7எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.உபா 29:4 உபா 32:28 உபா 32:29 நீதி 1:22 ஏசா 44:18 மாற் 4:12 மாற் 8:17-21 2தெச 2:10-12
8ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.சங் 143:11 எண் 14:13-16 உபா 32:26 உபா 32:27 யோசு 7:9 எரே 14:7 எரே 14:21 எசே 20:9 எசே 20:14 எசே 20:22 எசே 20:44 தானி 9:17-19
9அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.சங் 18:15 சங் 66:6 சங் 78:13 சங் 78:52 சங் 78:53 சங் 114:3-7 சங் 136:13-16 யாத் 14:21 யாத் 14:22 யாத் 14:27-29 நெகே 9:11 ஏசா 11:14-16 நாகூ 1:4 மத் 8:26
10பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.யாத் 14:30 யாத் 15:9 யாத் 15:10 உபா 11:4 நெகே 9:11
11அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.சங் 78:53 யாத் 14:13 யாத் 14:27 யாத் 14:28 யாத் 15:5 யாத் 15:10 யாத் 15:19
12அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.யாத் 14:31 யாத் 15:1-21 லூக் 8:13 யோவா 8:30 யோவா 8:31
13ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,சங் 78:11 யாத் 15:17 யாத் 15:24 யாத் 16:2 யாத் 17:7
14வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.சங் 78:18 சங் 78:30 எண் 11:4 எண் 11:33 எண் 11:34 உபா 9:22 1கொரி 10:6
15அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.சங் 78:29-31 எண் 11:31-34 ஏசா 10:16 ஏசா 24:16
16பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.எண் 16:1 எண் 16:3-50
17பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.எண் 16:29-33 எண் 26:10 உபா 11:6
18அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது; அக்கினி ஜூவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது.எண் 16:35-40 எண் 16:46-40 எபிரெ 12:29
19அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.யாத் 32:4-8 யாத் 32:35-8 உபா 9:12-16 உபா 9:21-16 நெகே 9:18 1கொரி 10:7
20தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.சங் 89:17 எரே 2:11 ரோம 1:22 ரோம 1:23
21எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,சங் 106:13 சங் 78:11 சங் 78:12 சங் 78:42-51 உபா 32:17 உபா 32:18 எரே 2:32
22தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.சங் 78:51 சங் 105:23 சங் 105:27-36
23ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்.யாத் 32:10 யாத் 32:11 யாத் 32:32 உபா 9:13 உபா 9:14 உபா 9:19 உபா 9:25 உபா 10:10 எசே 20:13 எசே 20:14
24அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.ஆதி 25:34 எண் 13:32 எண் 14:31 மத் 22:5 எபிரெ 12:16
25கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.எண் 14:1-4 எண் 14:27-29 உபா 1:26 உபா 1:27
26அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,சங் 95:11 எண் 14:28-35 உபா 1:34 உபா 1:35 எபிரெ 3:11 எபிரெ 3:18
27அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.சங் 44:11 லேவி 26:33 உபா 4:26 உபா 4:27 உபா 28:37 உபா 28:64 உபா 28:65 உபா 32:26 உபா 32:27 எசே 20:23
28அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து,எண் 25:1-3 எண் 25:5-3 எண் 31:16 உபா 4:3 உபா 32:17 யோசு 22:17 ஓசி 9:10 வெளிப் 2:14
29தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.சங் 106:39 சங் 99:8 உபா 32:16-21 பிரச 7:29 ரோம 1:21-24
30அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.எண் 25:6-8 எண் 25:14-8 எண் 25:15-8 உபா 13:9-11 உபா 13:15-17 யோசு 7:12 1இரா 18:40 1இரா 18:41 யோனா 1:12-15
31அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.எண் 25:11-13 உபா 24:13 மாற் 14:3-9
32மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.சங் 78:40 சங் 81:7 எண் 20:2 எண் 20:6 எண் 20:13
33அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.எண் 20:10 எண் 20:11
34கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.யோசு 15:63 யோசு 16:10 யோசு 17:12-16 யோசு 23:12 யோசு 23:13 நியா 1:19 நியா 1:21 நியா 1:27-35 மத் 17:19-21
35ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;யோசு 15:63 நியா 1:27-36 நியா 2:2 நியா 2:3
36அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.சங் 78:58 யாத் 34:15 யாத் 34:16 நியா 2:12 நியா 2:13 நியா 2:17 நியா 2:19 நியா 3:5-7 நியா 10:6 2இரா 17:8-11 2இரா 17:16-11 2இரா 17:17-11 2நாளா 33:2-9 எசே 16:15-63 எசே 20:28-32
37அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.உபா 12:30 உபா 12:31 உபா 18:10 2இரா 16:3 2இரா 17:17 2இரா 21:6 ஏசா 57:5 எரே 7:31 எரே 32:35 எசே 16:20 எசே 16:21 எசே 20:26 எசே 23:37 எசே 23:47
38அவர்கள் கானான் தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.உபா 21:9 2இரா 21:16 2இரா 24:4 எரே 2:34
39அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.ஏசா 24:5 ஏசா 24:6 ஏசா 59:3 எசே 20:18 எசே 20:30 எசே 20:31 எசே 20:43
40அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.சங் 78:59-62 நியா 2:14 நியா 2:20 நியா 3:8 நெகே 9:27-38
41அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள்.உபா 32:30 நியா 2:14 நியா 3:8 நியா 3:12 நியா 4:1 நியா 4:2 நியா 6:1-6 நியா 10:7-18 நெகே 9:27-38
42அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
43அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.நியா 2:16-18 1சாமு 12:9-11
44அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,நியா 2:18 நியா 3:9 நியா 4:3 நியா 6:6-10 நியா 10:10-16 1சாமு 7:8-12 2இரா 14:26 2இரா 14:27 நெகே 9:27-38
45அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,சங் 105:8 லேவி 26:40-42 2இரா 13:23 லூக் 1:71 லூக் 1:72
46அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.1இரா 8:50 எஸ்றா 9:9 எரே 15:11 எரே 42:12
47எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.சங் 14:7 சங் 126:1 1நாளா 16:35
48இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா, என்பார்களாக.சங் 41:13 சங் 72:18 சங் 72:19 சங் 89:52 1நாளா 29:10 1கொரி 14:16
 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

Join WhatsApp எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.