| 1 | என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். | சங் 104:35 சங் 103:1 சங் 103:2 சங் 103:22 |
| 2 | ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். | தானி 7:9 மத் 17:2 1தீமோ 6:16 1யோவா 1:5 |
| 3 | தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். | சங் 18:10 சங் 18:11 ஆமோ 9:6 |
| 4 | தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார். | அப் 23:8 எபிரெ 1:7 எபிரெ 1:14 |
| 5 | பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். | சங் 24:2 சங் 33:9 சங் 136:6 யோபு 26:7 யோபு 38:4-7 |
| 6 | அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. | ஆதி 1:2-10 ஆதி 7:19 2பேது 3:5 |
| 7 | அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. | ஆதி 8:1 நீதி 8:28 மாற் 4:39 |
| 8 | அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. | ஆதி 8:5 |
| 9 | அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர். | சங் 33:7 ஆதி 9:11-15 யோபு 26:10 யோபு 38:10 யோபு 38:11 ஏசா 54:9 எரே 5:22 |
| 10 | அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. | சங் 107:35 உபா 8:7 ஏசா 35:7 ஏசா 41:18 |
| 11 | அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். | சங் 145:16 |
| 12 | அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும். | சங் 104:16 சங் 104:17 சங் 50:11 சங் 84:3 சங் 148:10 மத் 6:26 |
| 13 | தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. | சங் 147:8 உபா 11:11 யோபு 38:25-28 யோபு 38:37-28 எரே 10:13 எரே 14:22 மத் 5:45 அப் 14:17 |
| 14 | பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். | சங் 145:15 சங் 145:16 சங் 147:8 சங் 147:9 ஆதி 1:11 ஆதி 1:12 ஆதி 1:29 ஆதி 2:5 1இரா 18:5 எரே 14:5 எரே 14:6 யோவே 2:22 |
| 15 | மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். | சங் 23:5 நியா 9:13 நீதி 31:6 பிரச 10:19 எரே 31:12 சகரி 9:15-17 மாற் 14:23 எபே 5:18 |
| 16 | கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும். | சங் 29:5 சங் 92:2 எண் 24:6 எசே 17:23 |
| 17 | அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு. | சங் 104:12 எரே 22:23 எசே 31:6 தானி 4:21 ஒபதி 1:4 மத் 13:32 |
| 18 | உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம். | 1சாமு 24:2 யோபு 39:1 |
| 19 | சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும். | சங் 8:3 சங் 136:7-9 ஆதி 1:14-18 உபா 4:19 யோபு 31:26-28 யோபு 38:12 எரே 31:35 |
| 20 | நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும். | சங் 74:16 சங் 139:10-12 ஆதி 1:4 ஆதி 1:5 ஆதி 8:22 ஏசா 45:7 ஆமோ 1:13 |
| 21 | பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித்தேடும். | சங் 34:10 யோபு 38:39 ஏசா 31:4 எசே 19:2-14 ஆமோ 3:4 |
| 22 | சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும். | யோபு 24:13-17 நாகூ 3:17 யோவா 3:20 |
| 23 | அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான். | ஆதி 3:19 நியா 19:16 பிரச 5:12 எபே 4:28 2தெச 3:8-12 |
| 24 | கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. | சங் 8:3 சங் 40:5 சங் 107:31 நெகே 9:6 யோபு 5:9 |
| 25 | பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு. | சங் 95:4 சங் 95:5 ஆதி 1:20-22 ஆதி 1:28-22 உபா 33:14-16 உபா 33:19-16 |
| 26 | அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. | சங் 107:23 ஆதி 49:13 |
| 27 | ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். | சங் 36:6 சங் 136:25 சங் 145:15 சங் 145:16 சங் 147:9 யோபு 38:41 லூக் 12:24-28 |
| 28 | நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். |
| 29 | நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும். | சங் 30:7 யோபு 13:24 யோபு 34:29 ரோம 8:20-22 |
| 30 | நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர். | சங் 33:6 யோபு 26:13 யோபு 33:4 ஏசா 32:14 ஏசா 32:15 எசே 37:9 எபே 2:1 எபே 2:4 எபே 2:5 தீத் 3:5 |
| 31 | கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார். | சங் 102:16 ரோம 11:36 கலா 1:5 எபே 3:21 2தீமோ 4:18 எபிரெ 13:21 1பேது 5:11 2பேது 3:18 வெளிப் 5:12 வெளிப் 5:13 |
| 32 | அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத் தொட, அவைகள் புகையும். | சங் 77:16 சங் 97:4 சங் 97:5 சங் 114:7 ஏசா 64:2 எரே 4:23-26 எரே 5:22 ஆமோ 8:8 நாகூ 1:5 நாகூ 1:6 ஆபகூ 3:5 ஆபகூ 3:6 ஆபகூ 3:10 வெளிப் 20:11 |
| 33 | நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். | சங் 63:4 சங் 145:1 சங் 145:2 சங் 146:2 |
| 34 | நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன். | சங் 1:2 சங் 63:5 சங் 63:6 சங் 77:12 சங் 119:15 சங் 119:16 சங் 119:111 சங் 119:127 சங் 119:128 சங் 119:167 சங் 139:17 சங் 139:18 நீதி 24:14 |
| 35 | பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா. | சங் 1:4 சங் 37:38 சங் 59:13 சங் 68:1 சங் 68:2 சங் 73:27 சங் 101:8 நியா 5:31 நீதி 2:22 வெளிப் 19:1 வெளிப் 19:2 |