இணை வசன வேதாகமம்

யோபு 4

                   
புத்தகங்களைக் காட்டு
1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:யோபு 2:11 யோபு 15:1 யோபு 22:1 யோபு 42:9
2நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?2கொரி 2:4-6 2கொரி 7:8-10
3இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.ஆதி 18:19 நீதி 10:21 நீதி 15:7 நீதி 16:21 ஏசா 50:4 எபே 4:29 கொலோ 4:6
4விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.சங் 145:14 நீதி 12:18 நீதி 16:23 நீதி 16:24 2கொரி 2:7 2கொரி 7:6 1தெச 5:14
5இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.யோபு 3:25 யோபு 3:26
6உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?யோபு 1:1 யோபு 1:9 யோபு 1:10 2இரா 20:3
7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.யோபு 9:22 யோபு 9:23 சங் 37:25 பிரச 7:15 பிரச 9:1 பிரச 9:2 அப் 28:4 2பேது 2:9
8நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.சங் 7:14-16 நீதி 22:8 எரே 4:18 ஓசி 8:7 ஓசி 10:12 ஓசி 10:13 2கொரி 9:6 கலா 6:7 கலா 6:8
9தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.யாத் 15:8 யாத் 15:10 2இரா 19:7 சங் 18:15
10சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்டசிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோகும்.யோபு 29:17 சங் 3:7 சங் 57:4 சங் 58:6 நீதி 30:14
11கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோகும், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோகும்.யோபு 38:39 ஆதி 49:9 எண் 23:24 எண் 24:9 சங் 7:2 எரே 4:7 ஓசி 11:10 2தீமோ 4:17
12இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.சங் 62:11
13மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,யோபு 33:14-16 ஆதி 20:3 ஆதி 28:12 ஆதி 31:24 ஆதி 46:2 எண் 12:6 எண் 22:19 எண் 22:20 தானி 2:19 தானி 2:28 தானி 2:29 தானி 4:5
14திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.யோபு 7:14 சங் 119:120 ஏசா 6:5 தானி 10:11 ஆபகூ 3:16 லூக் 1:12 லூக் 1:29 வெளிப் 1:17
15அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.சங் 104:4 மத் 14:26 லூக் 24:37-39 எபிரெ 1:7 எபிரெ 1:14
16அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:1இரா 19:12
17மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?யோபு 8:3 யோபு 9:2 யோபு 35:2 யோபு 40:8 ஆதி 18:25 சங் 143:2 சங் 145:17 பிரச 7:20 எரே 12:1 ரோம 2:5 ரோம 3:4-7 ரோம 9:20 ரோம 11:33
18கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே,யோபு 15:15 யோபு 15:16 யோபு 25:5 யோபு 25:6 சங் 103:20 சங் 103:21 சங் 104:4 ஏசா 6:2 ஏசா 6:3
19புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?யோபு 10:9 யோபு 13:12 யோபு 33:6 ஆதி 2:7 ஆதி 3:19 ஆதி 18:27 பிரச 12:7 2கொரி 4:7 2கொரி 5:1
20காலைமுதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள்.2நாளா 15:6
21அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்களே என்று சொன்னான்.சங் 39:5 சங் 39:11 சங் 49:14 சங் 146:3 சங் 146:4 ஏசா 14:16 லூக் 16:22 லூக் 16:23 யாக் 1:11

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.