1 | அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: | யோபு 2:11 யோபு 15:1 யோபு 22:1 யோபு 42:9 |
2 | நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? | 2கொரி 2:4-6 2கொரி 7:8-10 |
3 | இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர். | ஆதி 18:19 நீதி 10:21 நீதி 15:7 நீதி 16:21 ஏசா 50:4 எபே 4:29 கொலோ 4:6 |
4 | விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். | சங் 145:14 நீதி 12:18 நீதி 16:23 நீதி 16:24 2கொரி 2:7 2கொரி 7:6 1தெச 5:14 |
5 | இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர். | யோபு 3:25 யோபு 3:26 |
6 | உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ? | யோபு 1:1 யோபு 1:9 யோபு 1:10 2இரா 20:3 |
7 | குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும். | யோபு 9:22 யோபு 9:23 சங் 37:25 பிரச 7:15 பிரச 9:1 பிரச 9:2 அப் 28:4 2பேது 2:9 |
8 | நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள். | சங் 7:14-16 நீதி 22:8 எரே 4:18 ஓசி 8:7 ஓசி 10:12 ஓசி 10:13 2கொரி 9:6 கலா 6:7 கலா 6:8 |
9 | தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள். | யாத் 15:8 யாத் 15:10 2இரா 19:7 சங் 18:15 |
10 | சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்டசிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோகும். | யோபு 29:17 சங் 3:7 சங் 57:4 சங் 58:6 நீதி 30:14 |
11 | கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோகும், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோகும். | யோபு 38:39 ஆதி 49:9 எண் 23:24 எண் 24:9 சங் 7:2 எரே 4:7 ஓசி 11:10 2தீமோ 4:17 |
12 | இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது. | சங் 62:11 |
13 | மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, | யோபு 33:14-16 ஆதி 20:3 ஆதி 28:12 ஆதி 31:24 ஆதி 46:2 எண் 12:6 எண் 22:19 எண் 22:20 தானி 2:19 தானி 2:28 தானி 2:29 தானி 4:5 |
14 | திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது. | யோபு 7:14 சங் 119:120 ஏசா 6:5 தானி 10:11 ஆபகூ 3:16 லூக் 1:12 லூக் 1:29 வெளிப் 1:17 |
15 | அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது. | சங் 104:4 மத் 14:26 லூக் 24:37-39 எபிரெ 1:7 எபிரெ 1:14 |
16 | அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது: | 1இரா 19:12 |
17 | மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? | யோபு 8:3 யோபு 9:2 யோபு 35:2 யோபு 40:8 ஆதி 18:25 சங் 143:2 சங் 145:17 பிரச 7:20 எரே 12:1 ரோம 2:5 ரோம 3:4-7 ரோம 9:20 ரோம 11:33 |
18 | கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே, | யோபு 15:15 யோபு 15:16 யோபு 25:5 யோபு 25:6 சங் 103:20 சங் 103:21 சங் 104:4 ஏசா 6:2 ஏசா 6:3 |
19 | புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? | யோபு 10:9 யோபு 13:12 யோபு 33:6 ஆதி 2:7 ஆதி 3:19 ஆதி 18:27 பிரச 12:7 2கொரி 4:7 2கொரி 5:1 |
20 | காலைமுதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள். | 2நாளா 15:6 |
21 | அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்களே என்று சொன்னான். | சங் 39:5 சங் 39:11 சங் 49:14 சங் 146:3 சங் 146:4 ஏசா 14:16 லூக் 16:22 லூக் 16:23 யாக் 1:11 |