1 | அதற்குப்பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து, | யோபு 1:22 யோபு 2:10 |
2 | வசனித்துச் சொன்னது என்னவென்றால்: | நியா 18:14 |
3 | நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட இராத்திரியும் அழிவதாக. | யோபு 10:18 யோபு 10:19 எரே 15:10 எரே 20:14 எரே 20:15 |
4 | அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும், | யாத் 10:22 யாத் 10:23 யோவே 2:2 ஆமோ 5:18 மத் 27:45 அப் 27:20 வெளிப் 16:10 |
5 | அந்தகாரமும் மரணஇருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக. | யோபு 10:21 யோபு 10:22 யோபு 16:16 யோபு 24:17 யோபு 28:3 யோபு 38:17 சங் 23:4 சங் 44:19 சங் 107:10 சங் 107:14 ஏசா 9:2 எரே 2:6 எரே 13:16 ஆமோ 5:8 மத் 4:16 லூக் 1:79 |
6 | அந்த இராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக. |
7 | அந்த இராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக. | ஏசா 13:20-22 ஏசா 24:8 எரே 7:34 வெளிப் 18:22 வெளிப் 18:23 |
8 | நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக. | 2நாளா 35:25 எரே 9:17 எரே 9:18 ஆமோ 5:16 மத் 11:17 மாற் 5:38 |
9 | அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக. | யோபு 30:26 எரே 8:15 எரே 13:16 |
10 | நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. | யோபு 10:18 யோபு 10:19 ஆதி 20:18 ஆதி 29:31 1சாமு 1:5 பிரச 6:3-5 எரே 20:17 |
11 | நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன? | சங் 58:8 எரே 15:10 ஓசி 9:14 |
12 | என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன? | ஆதி 30:3 ஆதி 50:23 ஏசா 66:12 எசே 16:4 எசே 16:5 |
13 | அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து, | பிரச 6:3-5 பிரச 9:10 |
14 | பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும், | யோபு 30:23 1இரா 2:10 1இரா 11:43 சங் 49:6-10 சங் 49:14-10 சங் 89:48 பிரச 8:8 ஏசா 14:10-16 எசே 27:18-32 |
15 | அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே. | யோபு 22:25 யோபு 27:16 எண் 22:18 1இரா 10:27 ஏசா 2:7 செப் 1:18 சகரி 9:3 |
16 | அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும், வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள்போலவும் இருப்பேனே. | சங் 58:8 1கொரி 15:8 |
17 | துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். | யோபு 14:13 சங் 55:5-8 மத் 10:28 லூக் 12:4 2தெச 1:6 2தெச 1:7 2பேது 2:8 |
18 | கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை. | யோபு 39:7 யாத் 5:6-8 யாத் 5:15-19 நியா 4:3 ஏசா 14:3 ஏசா 14:4 |
19 | சிறியவனும் பெரியவனும் அங்கே சரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான். | யோபு 30:23 சங் 49:2 சங் 49:6-10 பிரச 8:8 பிரச 12:5 பிரச 12:7 லூக் 16:22 லூக் 16:23 எபிரெ 9:27 |
20 | மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், | யோபு 6:9 யோபு 7:15 யோபு 7:16 எரே 20:18 |
21 | பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து, | எண் 11:15 1இரா 19:4 யோனா 4:3 யோனா 4:8 வெளிப் 9:6 |
22 | அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன? |
23 | தன் வழியைக் காணக்கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன? | ஏசா 40:27 |
24 | என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. | யோபு 7:19 சங் 80:5 சங் 102:9 |
25 | நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது. | யோபு 1:5 யோபு 31:23 |
26 | எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது. | யோபு 27:9 சங் 143:11 |