கிறிஸ்துவின் ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட ஒரு ஊழியனின் ஊழியத்தில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. அவர் மீட்கப்படாத மக்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிப்பதும், தேவனுடைய மக்களுக்களை ஞானத்தோடும், புரிந்துக்கொள்ளுதலோடும் அவர்களை வளர்ப்பதும் (எரேமியா 3:15), இடறல்களை ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுவதும் (ஏசாயா 57:14) மட்டுமல்லாமல், அவர் சென்று, “சத்தமிட்டுக் கூப்பிடு. அடக்கிக்கொள்ளாதே. எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.” (ஏசாயா 58:1, 1 தீமோத்தேயு 4:2) என்ற கட்டளைக்கும் கீழ்ப்படிய வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, மற்றொரு முக்கியமான கடமையாக, “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;" (ஏசாயா 40:1) என்ற தேவனுடைய வார்த்தைக்கும் அவர் கீழ்ப்படிய வேண்டியிருக்கிறது.

“என் மக்கள்!" என்பது எவ்வளவு ஒரு சிறந்த அழைப்பு! “உன் தேவன்!" என்ன ஒரு உறுதியளிக்கும் இணைப்பு “என் மக்களுக்கு ஆறுதல்!" என்ன ஒரு பாக்கியமான பொறுப்பு! “ஆற்றுங்கள், தேற்றுங்கள்" என்ற கட்டளையை இரண்டு முறை வலியுறுத்துவதற்கு மூன்று காரணங்களாகக் குறிப்பிட்டு சொல்லலாம். முதலாவது, சில சமயங்களில் விசுவாசிகளின் ஆத்துமாக்கள் ஆறுதலடைய மறுக்கின்றன (சங்கீதம் 77:2). எனவே இதுபோன்ற நேரங்களில் தான் ஆத்துமாவுக்கு அதிக ஆறுதல் கொடுப்பது அவசியம். இரண்டாவதாக, விசுவாசிகளை ஊக்குவிக்கும் காரியத்தை அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று போதகருக்குத் தெரிவிப்பது அவசியம் என்கிற பொறுப்பை அவர் மனதில் ஆழமாகப் பிரதிபலிக்க. மூன்றாவதாக, தேவன் தாமே தம்முடைய மக்களின் மகிழ்ச்சியைக் குறித்து எவ்வளவாய் வாஞ்சிக்கிறார் என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் (பிலிப்பியர் 4:4).

தேவனுக்கு அவருடைய மக்கள் இருக்கிறார்கள், அவருடைய விசேஷித்த தயவுக்கு உரிய மக்கள்: தம்முடன் நெருங்கிய உறவில் இருக்கும்படி இந்தக் கூட்டத்தாரை அழைத்திருப்பதன் மூலம் அவாகளை “என்னுடைய ஜனங்கள்” என்று அநேக நேரங்களில் அழைக்கிறார். அவர்கள் பலமுறை அறுதல் அடையமால் உள்ளனர். அவர்களின் பாவ சுபாவம், சாத்தானால் உண்டாகும் சோதனைகள், உலகத்தார் மூலம் உண்டாகும் துன்பங்கள் மேலும், கிறிஸ்துவின் விஷயங்களில் உலகின் மோசமான அணுகுமுறை, இப்படியாக தொடர்ச்சியான காரணங்களினால் அவர்கள் அறுதல் அடையாமல் உள்ளனர். “சகலவித ஆறுதல்களின்” தேவன் அவர்கள் மேல் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் (2 கொரிந்தியர் 1:3). மேலும் அவருடைய ஊழியக்காரர்கள் இருதயம் உடைந்தவர்களுடைய காயங்களைக் கட்டி அதில் கீலேயாத்தின் பிசின் தைலம் இடவேண்டும் என்பது அவருடைய வெளிப்படையான சித்தமாய் இருக்கிறது. தேவனுடைய கட்டளைகள் மற்றும் அவரது அதிகாரத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் இந்த அவரைப்போல வேறொரு தேவன் உள்ளாரா என்கிற கேள்வியை எழுப்புவதின் வழியாகவே “தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்?” என்று நாம் சொல்வதற்கு முகாந்திரம் இருக்கிறது (மீகா 7:18).

இந்த சிறிய புத்தகத்தின் உள்ளடக்கங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக அவ்வப்போது நமது மாதாந்தரப் பத்திரிக்கைகளில் தோன்றிவை. அவைகள் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் வெகு காலத்திற்கு முன்பே போதிக்கப்பட்டவை. இப்போது நாம் உபயோகம் செய்யாத சில கருத்துக்களை நாம் தவிர்த்திருக்கிறோம் (குறிப்பாக தீர்க்கதரிசனம் பற்றி காரியங்கள்). எனினும் தேவனுடைய அநேகம் துன்புற்ற மக்களுக்கு இந்தப் புத்தகத்தின் செய்திகள் மிகுந்த ஆறுதலைத் தந்திருப்பதால், அவைகளை அதிகம் மறுதிருத்தம் செய்யவில்லை. இது புத்தகத்தில் உள்ள வேத வசன விளக்கங்கள் வழியாக தேவன் துன்பப்பட்டவர்களுக்கு சமாதானம் தருவாராக. அனைத்து மகிமையும் தேவனுக்கே உரியது.

-ஆர்தர் W. பிங்க், 1952

 

'தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்' வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பாவோம், அந்த ஆசிரியர்களின் பிற படைப்புகளுக்கு அல்ல.

எங்களுடைய வலைத்தளங்களை பின்தொடர...

நாங்கள் புதிதாக பதிவிடும் புத்தகங்கள், கட்டுரைகள், மற்றும் ஒலி புத்தகங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.