"ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று அர்த்தமாம் மத்தேயு 27:46.
"என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இவை திடுக்கிடச் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகள். மகிமையின் தேவன் சிலுவையில் அறையப்பட்டது, பூவுலகில் இதுவரை நிகழ்ந்திராத, மிகவும் அசாதாரணமான நிகழ்வு ஆகும், மிகுந்த துக்கத்தோடு இருப்பவரின் அழுகுரல், திகைக்க வைக்கும் அந்தக் காட்சியின் மிகவும் அதிர்ச்சியூட்டும் செயலாகும். மாசற்றவரைக் கண்டனம் செய்வதும், குற்றமற்றவரை வேதனைக்குட்படுத்துவதும் நன்மை செய்பவரைக் கொடூரமான சாவுக்குட்படுத்துவதும், வரலாற்றில் புதிய நிகழ்வு அல்ல. நீதிமான் ஆபேலின் கொலையிலிருந்து சகரியா வரை, இரத்தசாட்சிகளின் நீண்ட பட்டியல் உள்ளது. ஆனால் மையச் சிலுவையில் தொங்கியவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் மனுஷகுமாரன், அனைத்து மதிப்படை மொழிகள் அடங்கிய குறைவற்ற ஒருவர். அவருடைய குணாதிசயம் அவரது மேலங்கியைப் போன்றே ஒட்டுத் தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது" (யோவான் 19:23). சாதாரணமாக வேதனைப்பட்டவர்களைப் பொறுத்த வரையில், அவர்களை வேதனைக்குட்படுத்தியவர்களைக் குற்றஞ்சாட்டுவதற்கு குறைகளும் கறைகளும் இருந்தன. ஆனால் இவருடைய நீதிபதி, "நான் இவரிடம் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்கிறார். மேலும் துயருற்றவர், குறையற்ற மனிதர் மட்டுமல்ல அவர் தேவகுமாரன். இருப்பினும், மனிதன், தேவனை அழிக்க விரும்புவது விந்தையாக இல்லையா? “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்" (சங்கீதம் 14:1). இதுவே அவனுடைய விருப்பம். ஆனால் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன், தன் விரோதிகளால்தான் துன்புறுத்தப்படுவதற்கு அனுமதித்தது விந்தையாகவே உள்ளது. "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17) என்று உரைத்து இவரில் மகிழ்ச்சியாயிருந்த பிதாவானவர் தன் குமாரனை இந்த இழிவான மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தது மிகவும் விந்தையாக உள்ளது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இந்த வார்த்தைகள் திகைப்பின் வார்த்தைகளாகும். 'கைவிடப்பட்டவன்' என்ற வார்த்தை மனிதன் பேசும் வார்த்தைகளில் மிக சோகமானதாகும். எழுத்தாளர் ஒருவர், குடியிருப்பவர்களால் கைவிடப்பட்ட ஒரு நகரத்தின் வழியாகக் கடந்து செல்வாரானால், அந்நேரம் உள்ள அவரது உணர்வுகளை அவரால் மறக்க முடியாது. நண்பர்களால் கைவிடப்பட்ட மனிதன், கணவனால் கைவிடப்பட்ட மனைவி, பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை - என்ற இந்த வார்த்தைகளில் எப்பேர்பட்ட சோகம் நிறைந் துள்ளது! ஆனால் ஒரு சிருஷ்டி அதன் சிருஷ்டிகர்த்தாவால் கைவிடப் படுவது, ஒரு மனிதன் தேவனால் கைவிடப்படுவது ஒ! இது எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் பயங்கரமானது. இது தீங்குகளெல்லாவற்றிலும் பெரிய தீங்கு. இது பேராபத்தின் உச்சக்கட்டம். ஆம், வீழ்ச்சியடைந்த மனிதன், அவனுடைய புதுப்பிக்கப்படாத நிலையில், அவ்வாறு கருதுவதில்லை. ஆனால், அனைத்து முழுமையின் தொகுப்பு ஆண்டவர் என ஓரளவு அறிந்தவன், எல்லா சிறப்பின் ஊற்றும் இலக்கும் அவரே என்றும், "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங்கீதம் 41:2) என்று கதறுபவன், இப்பொழுது கூறப்பட்டதை ஆமோதிக்க தயாராக இருக்கிறான். அனைத்து காலங்களிலும் பரிசுத்தவான்கள் எழுப்பும் ஒலி என்னவென்றால் "தேவனே எங்களைக் கைவிடாதேயும்" என்பது தான். தேவன், தம் முகத்தை நம்மிடமிருந்து ஒரு கணம் மறைப்பது தாங்க முடியாதது. புதுப்பிக்கப்பட்ட பாவிகளிடம் இது மெய் என்றால், பிதாவானவர் தம் முகத்தைத் தம்முடைய அன்பான குமாரனுக்கு மறைப்பது எவ்வளவு எல்லையற்ற தாக்கத்தை உண்டு பண்ணும்!சாபத்தீடான மரத்தில் தொங்கிய அவர் முந்திய நித்தியத்திலிருந்தே பிதாவின் அன்பிற்குப் பாத்திரராய் இருந்திருக்கிறார். நீதிமொழிகள் 8:30 -ன் மொழி நடையில் நம் கவனத்தை ஈர்க்கும் போது, துயருற்ற இரட்சகர் "பிதாவின் அருகில் இருந்தார், அவரால் வளர்க்கப்பட்டார்” அவர் “நித்தம் அவரின் மனமகிழ்ச்சியாய் இருந்தார்.” பிதாவின் சமுகம் அவருடைய வீடாய் இருந்திருக்கிறது, பிதாவின் மார்பு அவருடைய இருப்பிடமாயிருந்தது, உலகம் உண்டாவதற்கு முன்னே அவர் பிதாவின் மகிமையில் பங்கேற்றிருக்கிறார். குமாரன் பூமியிலிருந்த முப்பத்தி மூன்று வருட காலத்தில், அவர் பிதாவோடு உள்ள இடைவிடாத ஐக்கியத்தில் மகிழ்ந்திருந்தார். பிதாவின் விருப்பத்திற்கு மாறான எந்த எண்ணமும் அவரில் இருந்ததில்லை, பிதாவிடமிருந்து வந்த விருப்பத்திற்கு மாறான மீறுதலும் இல்லை. அவருடைய உணர்வுள்ள சமுகத்திற்கு வெளியே ஒரு கணம் கூட இருந்ததில்லை. அப்படியானால் தேவனால் இப்பொழுது “கைவிடப்பட்டார்” என்பதன் பொருள் என்னவாயிருக்கும்! "பிதாவின் முகம் மறைக்கப்பட்டது " என்பது பிதா இரட்சகருக்குக் குடிக்கக் கொடுத்த பானத்தின் மிகக் கசப்பான பகுதியாக இருந்தது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இவை ஒப்புமை இல்லாத அவலம் நிறைந்த வார்த்தைகளாகும். அவைகள் அவருடைய துயரத்தின் உச்சக்கட்டத்தைக் குறிக்கின்றன. போர்ச்சேவகர்கள் அவரைக் கொடூரமாக ஏளனம் செய்கின்றனர். முட்கிரீடத்தை அவருக்குச் சூட்டியிருந்தார்கள்; சாட்டை கொண்டும் கையாலும் அவரை அடித்திருக்கிறார்கள்; அவர் மீது உமிழ்ந்து அவர் முடியைப் பிடுங்கும் அளவுக்குச் சென்றனர். அவருடைய உடையைக் களைந்து வெளியரங்கமான அவமானத்திற்குட்படுத்தினார்கள். இருப்பினும் இவையெல்லாவற்றையும் அமைதியாகச் சகித்தார். அவருடைய கைகளையும் கால்களையும் ஆணிகளால் துளைத்தார்கள். அவமானத்தை ஏற்றுச் சிலுவையைப் பொறுமையுடன் சகித்தார். அந்த இழிவான கூட்டம் அவரை இகழ்ந்து பேசியது, அவரோடு சிலுவையிலறையப்பட்ட கள்வர்கள் அவர் முகத்திற்கு எதிரே இழிவான சொற்களை உறைக்கும்படிப் பேசினார்கள். இருந்தபோதிலும் அவர் தன் வாயைத் திறக்கவில்லை. மனிதர்கள் கையில்பட்ட வேதனைக்குப் பதிலாக அவர் வாயிலிருந்து கூக்குரல் எழும்பவில்லை. ஆனால் இப்போது ஒருமுனைப்படுத்தப்பட்ட முழுச் செறிவுள்ள கடும்சினம் விண்ணிலிருந்து அவர் மீது இறங்கியது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று சத்தமிட்டார். நிச்சயமாகவே இந்தக் கூக்குரல் கடின இருதயத்தைக் கரைத்திருக்க வேண்டும். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இவை ஆழ்ந்த புரியமுடியாத இரகசியத்தின் வார்த்தைகளாகும். பழைய ஏற்பாட்டின் காலத்தில், யொகோவா தேவன் அவருடைய மக்களைக் கைவிடவில்லை. திரும்பத் திரும்ப அவர்கள் கஷ்டத்தில் அவரே அவர்கள் புகலிடமாயிருந்தார். இஸ்ரவேலர் கொடுமையான அடிமைத்தன கட்டில் இருந்தபோது தேவனை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர் அவர்களைக் கேட்டார். அவர்கள் சிவந்த சமுத்திரத்திற்கு முன்பாக உதவியற்ற நிலையில் நிற்கும்போது, அவர் அவர்களுக்கு உதவியாக வந்து, அவர்கள் பகைவர் களிடமிருந்து அவர்களை விடுவித்தார். மூன்று எபிரேயர்களை எரிகிற அக்கினிச் சூளையில் போட்டபோது தேவன் அவர்களோடிருந்தார். ஆனால் இங்கு சிலுவையில், எகிப்து நாட்டிலிருந்து எழுந்ததைவிட மிக சோகமான அங்கலாய்ப்பின் குரல் எழும்பியது, இருப்பினும் அங்கு பதில் ஏதுவுமில்லை! சிவந்த சமுத்திர நெருக்கடியைக் காட்டிலும் இங்கு அதிக ஆபத்தான நிலை: அவர்களைவிட இங்கு கருணை உள்ளம் இல்லாத விரோதிகளால் உண்டான குழப்பமான நிலை இருப்பினும் அங்கே விடுதலை இல்லை! நேபுகாத்நேச்சாரின் அக்கினிச் சூளையைவிட முடிவின்றி பயங்கரமாக எரியும் நிலை ஆனால் அவர் அருகில் ஆறுதலுக்காக ஒருவருமில்லை. அவர் தேவனால் கைவிடப்பட்டார்!ஆம், துயருறும் இரட்சகரின் வேதனைக்குரல் ஆழ்ந்த புதிராக உள்ளது. முதலாவது "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்கள்" என்று சத்தமிட்டார், இதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது ஏனென்றால் இது இரக்ககுணமுள்ள இதயத்தோடு ஒத்துப்போகிறது. மீண்டும் அவர் தம் வாயைத் திறந்து, மனந்திரும்பிய கள்வனிடம், "மெய்யாகவே நான் உனக்கு சொல்கிறேன், இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய்" என்றார், மேலும் இதுவும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் ஏனென்றால் பாவியின் மீது அவருக்குள்ள இரக்கம் அவருடைய உதடுகள் அசைந்தன, தன்னுடைய தாயை நோக்கி, "ஸ்திரீயே! அதோ, உன் மகன்" என்றார். தனக்கு அன்பாயிருந்த சீஷனை நோக்கி, "அதோ உன் தாய்" என்றார். இதுவும் நம்மால் பாராட்ட முடியும். ஆனால் அடுத்ததாக அவர் தன் வாயைத் திறந்து போட்ட சத்தம் நம்மைத் திகைத்து, தள்ளாட வைக்கிறது. பழைய ஏற்பாட்டில் தாவீது இவ்வாறு கூறுகிறார். "நீதிமான் கைவிடப்பட்டதைக் கண்டதில்லை" ஆனால் நாம் இங்கே தாம் ஒருவரே நீதிமானாயிருப்பவர் கைவிடப்பட்டதைக் காண்கிறோம். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இவை ஆழ்ந்த அறிவுள்ள பயபக்தியான வார்த்தைகளாகும். இந்த வேதனையின் குரலானது, இப்பூவுலகை நடுங்க வைத்து அது அண்டசராசரம் எங்கும் எதிரொலித்தது. ஆ! யாரால் இந்த விந்தையிலும் விந்தையை ஆழ்ந்து சிந்திக்க முடியும்! அச்சந்தருகிற பயங்கரமான இருளைக் கிழித்தெறிந்த இந்த வியக்கவைக்கும் அவலக்குரலின் அர்த்தத்தை யாரால் ஆராய முடியும்! “ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்ற வார்த்தைகள் பரிசுத்த ஸ்தலத்திற்கே நம்மை நடத்திச் செல்கிறது. இங்கே அல்லது எங்காகிலும் சிற்றின்பத்தைத் தூண்டும் ஆவல்களை நாம் களைந்து போடுவதே மேன்மையானதாகும். தேவனுடைய வார்த்தைகளை இப்படியிருக்குமோ, அப்படியிருக்குமோ என யூகித்தல் அதன் புனிதத் தன்மையைக் கெடுப்பதாகும். வார்த்தைகளின் ஆழத்தை வியந்து அவரைத் தொழுது கொள்வதே மேன்மை. இந்த வார்த்தைகள் திடுக்கிடச் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த தாகவும், திகைக்க வைக்கும் துயரம் நிறைந்ததாகவும், ஆழ்ந்த இரகசிய மாகவும், இணையற்ற அவலச்சுவையுள்ளதாகவும், ஆழ்ந்த பயபக்தி உணர்வு உள்ளதாகவும் இருந்தபோதிலும், நாம் இன்னமும் அதன் அர்த்தத்தை அறியாமல் இல்லை. உண்மையில், இந்த வேதனையின் குரலானது ஆழ்ந்த இரகசியமானது. எனினும் ஆசீர்வாதமான தீர்விற்கு ஏதுவாக உள்ளது. இணையற்ற அவலம் நிறைந்த இந்த வார்த்தைகள் தெய்வீக அன்பின் முழுமையையும் தேவனின் அச்சமூட்டும் வளைந்து கொடுக்காத நீதியையும் வெளிப்படுத்துகின்றன என்பதை வேதம் சந்தேகமின்றித் தெளிவுபடுத்து கிறது. மரிக்கும் தருவாயில் இரட்சகர் மொழிந்த நான்காவது வார்த்தையை உற்று நோக்கும்போது, நம் ஒவ்வொரு எண்ணமும் கிறிஸ்துவுக்குள் சிறையாக்கப்பட்டு, நம்முடைய இருதயங்கள் பயபக்தியுள்ள உணர்வடையட்டும். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
1 இங்கே நாம் பாவத்தின் பயங்கரத்தையும் அதன் சம்பளத்தின் தன்மையும் காண்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு நடுப்பகலில் சிலுவையில் அறையப்பட்டார். கல்வாரியின் வெளிச்சத்தில் அனைத்தும் அதன் உண்மைத் தன்மையில் வெளிப்பட்டது. அங்கே, எல்லாவற்றின் தன்மைகளும் முழுமையாகவும் இறுதியாகவும் வெளிப்பட்டது. மனித இதயத்தின் சீர்கேடுகளாகிய தேவன் மீதுள்ள வெறுப்பு, அதன் இழிவான நன்றிகேடு, ஒளியைக் காட்டிலும் இருளை நேசிக்கும் தன்மை, ஜீவனின் அதிபதியைக் காட்டிலும் கொலை யாளிக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஆகிய அனைத்தும் பயங்கரமாக வெளிப்பட்டது. சாத்தானின் அச்சந்தரும் தன்மை தேவனிடம் உள்ள பகைமை உணர்வு, கிறிஸ்துவின் மீதுள்ள தீராதவிரோதம், இவற்றை மனிதனின் இதயத்தில் வைத்து இரட்சகரைக் காட்டிக்கொடுக்கச் செய்தல், இவை யாவும் முழுமையாக வெளிப்பட்டது. அதேபோன்று முழுமையான தெய்வீகத்தன்மை, சொல்வதற்கு அரிய தேவனின் பரிசுத்தம், அசைக்க முடியாத நேர்மை தவறாத நடத்தை, அவருடைய பயங்கரமான கடுங்கோபம், அவரது ஈடு இணையற்ற கிருபை ஆகியவை முழுமையாக அங்கு அறியப்பட்டது. மேலும் அங்கே பாவத்தின் இழிவான தன்மை, அதன் கயமை, அதன் சட்டத்திற்குட்படாத குழப்பமான தன்மை ஆகியவையும் தெளிவாக வெளிப்படையாயிற்று. பாவம் ஊடுறுவக்கூடிய அளவின் தன்மையும் இங்கே காட்டப்பட்டுள்ளது. அதன் முதலாவது வெளிப்பாட்டில் அது தற்கொலை வடிவில் வந்தது - அதாவது ஆதாம் தன்னுடைய சொந்த ஆவிக்குரிய வாழ்க்கையை அழித்தல்; இரண்டாவது உடன் பிறந்தவர்களைக் கொலை செய்யும் வடிவில் வந்தது - காயீன் தன் சொந்த சகோதரன் ஆபேலைக் கொலை செய்தல்; ஆனால் சிலுவையில் மனிதன் மனுஷகுமாரனைச் சிலுவையில் அறைந்து, தேவனை கொல்லுதல் என்ற உச்சக்கட்டத்தில் வந்தது.ஆனால் சிலுவையில் மிகவும் வெறுக்கத்தக்க பாவத்தின் தன்மையை மட்டுமல்லாமல் அதன் பயங்கரமான சம்பளத்தின் தன்மையினையும் நாம் காண்கிறோம். "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23) பாவத்தின் மேல் சுமத்தப்பட்டது மரணம் ஆகும். “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்து போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவு மாயிற்று" (ரோமர் 5:12). பாவம் இல்லாதிருந்திருந்தால் மரணமும் இல்லாதிருக்கும். ஆனால் 'மரணம்' என்பது என்ன? இறுதிமூச்சு விட்டபின்பு, பயங்கரமான அமைதி ஆட்கொண்டு, உடல் அசைவின்றி இருப்பதா? இரத்த ஓட்டம் நின்று போனதால் முகம் வெளீறிய நிறத்துடனும் கண்கள் உணர்விழந்து கோரமாகக் காட்சியளிப்பதா? ஆம், ஆனால் இது அதைவிட அதிகமானதே. இந்த வார்த்தையில், உடல் ரீதியாக முடிவுக்கு வருவதைவிட அதிகப் பரிதாபமானதாகவும் சோகமானதாகவும் உள்ள ஒன்று அடங்கியுள்ளது. பாவத்தின் சம்பளம் ஆவிக்குரிய மரணமாகும். பாவம், எல்லா ஜீவனுக்கும் ஊற்றாகிய தேவனிடமிருந்து நம்மை பிரித்து விடுகிறது. இது ஏதேன் தோட்டத்தில் காட்டப்பட்டது. வீழ்ச்சிக்கு முன்னதாக, ஆதாம் தன்னைப் படைத்தவரின் ஆசீர்வாதமான தோழமையில் மகிழ்ந்திருந்தான், பாவம் உலகினுள் நுழைந்த அந்த நாளின் மாலைப்பொழுதில், தேவனாகிய தேவன் தோட்டத்திற்குள் பிரவேசித்தபோது, அவருடைய குரல் நம் முற்பிதாக்களுக்குக் கேட்டது, குற்றம் புரிந்த இருவரும் தோட்டத்திலிருந்த மரங்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டார்கள். சதாகாலமும் ஒளியாய் இருக்கிற தேவனோடு உறவு கொண்டு மகிழ முடியவில்லை; அதற்குப் பதிலாக அவர்கள் அவரிடமிருந்து விலகி ஒதுங்கியிருந்தனர். காயீனும் அதே போன்றுதான் : தேவனால் கேள்வி கேட்கப்பட்ட போது "நான் உமது சமூகத்துக்கு விலகி மறைந்து பூமியில் நிலையற்று அலைகிறவனா யிருப்பேன்" (ஆதியாகமம் 4:14). பாவம் தேவனுடைய சமுகத்திலிருந்து நம்மை விலக்குகிறது. இஸ்ரவேலுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பெரிய பாடம் இதுதான். யெகோவா தேவனின் சிங்காசனம் அவர்கள் நடுவில் இருந்தது, இருப்பினும் அதை நெருங்க முடியாது. அவர் சேரூபீன்கள் மத்தியில் மகாபரிசுத்த ஸ்தலத்தில் வாசம் பண்ணினார், பிரதான ஆசாரியன் தவிர ஒருவரும் அங்கே நுழைய முடியாது. மேலும் ஆசாரியனும் வருடத்தின் ஒரு நாளில் இரத்தத்தைச் சுமந்து கொண்டு உள்ளே செல்லவேண்டும். அந்தக் கூடாரத்திலும் ஆலயத்திலும், தேவனின் சிங்காசனத்தண்டை எவரும் நெருங்காதவாறு தொங்கிய திரைச்சீலையானது, பாவம் தேவனிடமிருந்து பிரிந்துள்ளது என்ற பயபக்தியான உண்மைக்குச் சாட்சியாக உள்ளது.பாவத்தின் சம்பளம் மரணம். இது சரீரப்பிரகாரமானது மட்டுமல்ல, ஆவிக்குரிய மரணமுமாகும், இயற்கையானது மட்டுமல்ல முக்கியமாக தண்டனைக்குரிய மரணமாகும். சரீரப்பிரகாரமான மரணம் என்பது என்ன? இது ஆன்மாவும் ஆவியும் உடலிலிருந்து பிரிவது ஆகும். எனவே தண்டனைக்குரிய மரணம் என்பது ஆன்மாவும் ஆவியும் தேவனிடமிருந்து பிரிவது ஆகும். சுகபோகமாய் வாழ்கிறவனைக் குறித்து சத்தியவார்த்தை "அவள் உயிரோடே செத்தவள்" (1 தீமோத்தேயு 5:6) என்று கூறுகிறது. கெட்ட குமாரன் என்ற அற்புதமான உவமையில் 'மரணம்' என்ற பதத்தின் அர்த்தம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கெட்டகுமாரன் திரும்பிய பிறகு அவனுடைய தகப்பன் என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்" (லூக்கா 15:24). அவன் 'தூரதேசத்தில்' இருக்கும்போது அவன் வாழாமல் இருக்கவில்லை; இல்லை, அவன் உடலளவில் மரிக்கவில்லை. ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தான் - அவனுடைய தகப்பனிடமிருந்து அவன் ஒதுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டான்.இப்பொழுது சிலுவையில் அவருடைய மக்கள் அடையவேண்டிய சம்பளத்தை அல்லது பலனைத் தாம் ஏற்றுக்கொண்டார். அவரிடம் பாவம் இருந்ததில்லை. ஏனெனில் அவர் தாம் ஒருவரே புனிதமான தேவன். "அவர் தாமே தமது சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார்" (1 பேதுரு 2:24). அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ளவர், நம் இடத்தை எடுத்துக்கொண்டு துயருற்றார். நம்முடைய சமாதானத்திற்காக, அவர் தண்டனையை சுமந்தார். பாவத்தின் சம்பளமாக நமக்கு வரவேண்டிய கஷ்டங்கள், தண்டனை மற்றும் மரணம் அனைத்தையும் தாமே ஏற்றுக்கொண்டார். சரீரப்பிரகாரமான கஷ்டங்களை மாத்திரமல்ல பாவத்தின் தண்டனையானப் பலனையும் ஏற்றுக்கொண்டார். நாம் ஏற்கனவே கூறியபடி, இது தேவனிடமிருந்து பிரிப்பது ஆகும். எனவே இரட்சகர் இவ்வாறு சத்தமிட்டார். “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" இறுதியில் குற்ற உணர்வற்ற இருதயமுள்ளோரின் நிலை இவ்வாறாகத் தான் இருக்கும். வழிதவறியவர்களுக்கு இவ்வாறு பயங்கரமான அழிவு காத்திருக்கிறது. "அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும் அவ ருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்" (2 தெசலோனிக்கேயர் 1:10). எல்லா நன்மைகளுக்கும் ஊற்றும் மேலும் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் வழியாகவும் உள்ள தேவனிடமிருந்து நித்தியகாலமாகப் பிரிந்திருப்பார்கள். "சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என்று தீயவர்களை நோக்கி கிறிஸ்து கூறுவார். அவர் சமுகத்திலிருந்து வெளியேற்றப்படுவது, தேவனை விட்டு நித்தியமாய் அகற்றப்படுவதே சபிக்கப்பட்டவர்களுக்குக் காத்திருக்கிறது. ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிராதவன், முடிவில்லா குடியிருப்பாகிய அக்கினிக்கடலிலே தள்ளப்படுவான். இதுவே இரண்டாம் மரணம் (வெளிப்படுத்தல் 20:14). வாழ்க்கை முடிவுறுவது மட்டுமல்ல, ஜீவனுள்ள தேவனிடமிருந்து முடிவில்லாப் பிரிவு ஏற்பட்டுவிடுகிறது. பாவிகளின் இடத்தில் கிறிஸ்து சிலுவையில் மூன்று மணிநேரம் தொங்கியபோது தேவனையற்ற பிரிவுதான் சம்பவித்தது. சிலுவையில் கிறிஸ்து நம் பாவங்களின் சம்பளத்தைப் பெற்றார். "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
2 இங்கே நாம் தேவனின் முழுமையான புனிதத் தன்மையினையும் நிலையான நீதியையும் காண்கிறோம்.
கல்வாரியின் சோகத்தை நாம் குறைந்தது நான்கு நிலைகளிலிருந்து உற்று நோக்கவேண்டும். சிலுவையில் மனிதன் ஒரு வேலையைச் செய்தான் பூரணரான ஒருவரைத் தனது "கொடிய கைகளால்" சிலுவை மரத்தில் ஆணியிலறைந்ததன் மூலம் தனது சீர்கேட்டின் உச்சத்தை வெளிப்படுத் தினான். சிலுவையில் பிசாசானவன் ஒரு வேலையைச் செய்தான் -அவருடைய குதிங்காலை நசுக்கியதின் மூலம் ஸ்திரீயின் வித்திற்கு விரோதமாகத் தனக்கிருந்த தீராத விரோதத்தை வெளிப்படுத்தினான். சிலுவையில் ஆண்டவராகிய இயேசு ஒரு வேலையைச் செய்தார் - நம்மை தேவனிடம் கூட்டிச் சேர்ப்பதற்காய், நீதியுள்ளவர் அநீதியுள்ளவர்களுக்காய் மரித்தார். சிலுவையில் தேவன் ஒருவேலை செய்தார் - அவர் தமது புனிதத்தை வெளிப்படுத்தி, நமக்காகப் பாவமாக்கப்பட்டவர் மீது தமது கடுங்கோபத்தை ஊற்றியதின் மூலம், தமது நீதியை நிலைப்படுத்தினார்.ஆண்டவரின் கறைபடாத புனிதத்தைப் பற்றி மனிதனால் எவ்வாறு எழுதமுடியும் அல்லது எழுதுவதற்குத் தகுதி பெற முடியும்! சாவுக்கேதுவான மனிதன் அவரைப் பார்த்து உயிருடன் இருக்க முடியாத அளவுக்கு அவர் பரிசுத்தர். அவருடைய பார்வையில் பரலோகம்கூட சுத்தமில்லாத அளவுக்கு அவர் பரிசுத்தர். சேராபீன் அவருக்கு முன்பாக முகத்தை மூடியிருக்கும் அளவுக்கு அவர் பரிசுத்தர். ஆபிரகாம் அவருக்கு முன்பாக நின்றபொழுது, "இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன்" (ஆதியாகமம் 18:27) என்று கூறிய அளவுக்கு அவர் பரிசுத்தர். யோபு அவர் சமூகத்திற்கு வந்த பொழுது, "நான் என்னை அருவருக்கிறேன்" (யோபு 42:6) என்று கூறும் அளவுக்கு அவர் பரிசுத்தர். ஏசாயா அவருடைய மகிமைக்காட்சியைக் கண்ட பொழுது, "ஐயோ! நான் அதமானேன்... சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே" என்று அதிசயிக்கும் அளவுக்கு அவர் பரிசுத்தர், தானியேல் முன் தேவன் காட்சியளித்த போது, "என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப் போயிற்று; திடனற்றுப் போனேன்" என்று அறிவித்த அளவுக்கு அவர் பரிசுத்தர். இங்கே நமக்குக் கூறப்பட்டது. போல், "தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக் கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்க மாட்டீரே” (ஆபகூக் 1:13) என்ற அளவுக்கு அவர் பரிசுத்தர். நம் இரட்கர் நம் பாவங்களைச் சுமந்து கொண்டிருந்ததால், மும்மடங்கு, பரிசுத்த தேவன், அவரைப் பார்க்காது, தனது முகத்தை விலக்கி அவரைக் கைவிட்டார். நமக்குப் பதிலாக, நம்முடைய பாவங்களும் அக்கிரமங்களும் கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்டதால், நம் மீறுதல்கள் மீது தேவகோபம் இறங்கியது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" சிலுவையைச் சுற்றி இருந்தவர்கள் எவரும் பதிலளிக்க முடியாத கேள்விதான் அந்தக் கேள்வி. அந்த நேரத்தில் ஒரு அப்போஸ்தலன்கூட பதில் கூறியிருக்க முடியாது. ஆம், பரலோகத்திலிருக்கிற தேவதூதர்கள் கூட பதிலளிக்க இயலாமல் திகைக்க வைத்த கேள்வி அது. ஆனால் நம் ஆண்டவராகிய கிறிஸ்து அதற்கு பதிலளித்தார், அவருடைய பதில் சங்கீதம் 22 இல் உள்ளது. அந்த சங்கீதம் அற்புதமாக அவருடைய பாடுகளைப் பற்றிய தீர்க்கதரிசனமான முன்னறிவிப்பைக் கொடுத்துள்ளது. அந்த சங்கீதம், ஆண்டவர் சிலுவையில் மொழிந்த நான்காவது வார்த்தையோடு ஆரம்பித்து, அதே அங்கலாய்ப்பின் குரல் மூன்றாம் வசனம் வரை தொடர்கிறது, 3 ஆம் வசனத்தில் "இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்" என்று கூறுவதைக் காண்கிறோம். இது அநீதி என்று யாரையும் புகார் கூறவில்லை. அதற்குப் பதிலாக தேவன் நீதியுள்ளவர் என்று ஒப்புக் கொள்கிறார் - நீரே பரிசுத்தர், நான் உத்தரவாதமாகவுள்ள எல்லாக் கடனையும் என் கையில் வாங்குவதில் நீர் நீதியுள்ளவர்; என் ஜனங்கள் பதிலளிக்க வேண்டிய எல்லாப் பாவங்களையும் நான் சுமந்துள்ளேன். எனவே உம்முடைய எச்சரிக்கையின் கரத்திலிருந்து வரும் இந்த பலத்த அடி சரியானதே என்று மெய்ப்பிக்கிறேன். நீரே பரிசுத்தர்: நீர் தீர்ப்பளிக்கும் போது நீர் தெளிவானவர்.சிலுவையில், எங்கும் இல்லாத அளவுக்கு பாவத்தின் முடிவில்லா வெறுப்புணர்வையும், அதன் தண்டனையில் தேவனுடைய நீதியையும் காண்கிறோம். முற்காலத்தில் உலகம் தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டதா? சோதோம் கொமோரா வானத்திலிருந்து வந்த கந்தகத்தாலும் அக்கினியாலும் அழிக்கப்பட்டதா? எகிப்தியருக்கு கொள்ளை நோய் அனுப்பப்பட்டதா? பார்வோனும் அவன் சேனையும் சிவந்த சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்டனரா? இவையெல்லாவற்றிலும் பாவத்தின் தீயத்தன்மை யையும் தேவனின் வெறுப்பையும் காண்கிறோம். ஆனால் அதைவிட அதிகமாக இங்கே கிறிஸ்து தேவனால் கைவிடப்பட்ட நிலையைக் காண்கிறோம். கொல்கொதாவிற்குச் சென்று பார்த்தால், யெகோவாவின் மைந்தன், அவருடைய தகப்பனின் கடுங்கோபமாகிய பாத்திரத்தைக் குடிப்பதையும், தெய்வீக நீதி என்ற கூர்வாளால் அடிக்கப்படுவதையும், தேவனால் புதுப்பிக்கப்படுவதையும், மரிக்கும் வரை துயரப்படுவதையும், அவர் சிலுவையில் பாவிகளின் இடத்தில் தொங்குகையில், தன் சொந்தக் குமாரனையும் கடுமையாக நடத்தாமல் விட்டு வைக்கவில்லை என்பதையும் காண்கிறோம். இயற்கை இந்த பயங்கரமான சோகத்தை எவ்வாறு முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறது என்பதைக் காண்கிறோம் - அந்த நிலத்தின் உருவமைப்பு ஒரு மண்டையோடு போல் காட்சியளிக்கிறது. கொட்டப்பட்ட கடும் சினத்தின் பெரும் சுமையால் அந்த பூமி அடியில் கொந்தளித்து நடுங்குவதைப் பாருங்கள். வானத்தில் சூரியன், அப்படிப்பட்ட கொடிய காட்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வதால் பூமியெங்கும் இருளால் மூடப்பட்டிருப்பதைப் பாருங்கள். இங்கே பாவத்திற்குப் பழிவாங்கும் தேவனின் பயங்கரமான கோபத்தைக் காண்கிறோம். பழைய ஏற்பாடு காலத்தின் தெய்வீக நியாயத்தீர்ப்பில் கட்டவிழ்த்து விடப்பட்ட இடியுடன் கூடிய மின்னல், பெரும் துன்பத்தின் இணையற்ற பயத்தால் கிறிஸ்தவ சமயத்தைக் கைவிட்டவர்கள் மேல் வரும் கோபாக்கினை, அக்கினிக் கடலில் தள்ளப்பட்டவர்களின் அழுகையும் புலம்பலும் பற்கடிப்பும் ஆகிய இவைகளே தேவனின் அசைக்கமுடியாத தீர்ப்பு, சொல்லில் அடங்காத பரிசுத்தம், பாவத்தின் மீது முடிவில்லா வெறுப்பு ஆகியவை சிலுவையில் உள்ள தன் சொந்தக் குமாரனின் மீது பற்றி எரிந்த தேவனின் கடும் சினத்திற்கு உதாரணங்களாகக் காட்டப்பட்டு உணர்த்த முடியாது. ஏனென்றால் அவர் பாவத்தின் பயங்கரமான கொடிய தீர்ப்பைச் சகித்துக் கொண்டிருந்தார்.அவர் தேவனால் கைவிடப்பட்டார். தாம் ஒருவரே பரிசுத்தரானவர். பாவத்தின் மீதுள்ள எல்லையில்லா வெறுப்புடையவர், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல (1 யோவான் 3:3) பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2 கொரிந்தியர் 5:21). எனவே அவர் உக்கிரப் புயலின் முன்பு தலைகுனிந்தார். இதில் எவராலும் எண்ணமுடியாத பெரும் திரள்கூட்ட மக்களின் எண்ணிலடங்கா பாவங்களின் மீதுள்ள தெய்வீகக் கோபம் காட்டப்பட்டுள்ளது. இதுவே கல்வாரியின் உண்மையான விளக்கம் ஆகும். தன் சொந்தக்குமாரனாகிய கிறிஸ்து மீது பாவம் காணப்பட்டாலும், தேவனின் புனிதமான பண்பு, பாவத்தை நியாயந்தீர்ப்பதை விட வேறு எதுவும் செய்ய முடியாது. சிலுவையில் தேவனின் நியாயத்தீர்ப்பு மன நிறைவளிக்கிறதாகவும் அவருடைய தூய்மை மெய்ப்பித்துக் காட்டப்பட்டதாயுமிருக்கிறது. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?"
3 இங்கே நாம் கெத்செமெனேயின் விளக்கத்தைக் காண்கிறோம்.
நம் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகர் சிலுவையருகில் சென்றபோது, தொடுவானம் மேலும் மேலும் இருளடைந்தது. குழந்தைப்பருவத்தில் அவர் மனிதனிடமிருந்து துன்பப்பட்டிருக்கிறார், பொது ஊழியம் ஆரம்பித்த திலிருந்து சாத்தானிடமிருந்து துன்பப்பட்டிருக்கிறார்; ஆனால் சிலுவையில் தேவனின் கையில் துன்பப்பட வேண்டியிருந்தது. யெகோவாவே, நம் இரட்சகரை அடித்துக் காயம் உண்டாக்க வேண்டியிருந்தது இதுதான் எல்லாவற்றையும் இருளடையச் செய்தது. கெத்செமெனேயில் அவர், சிலுவையின் மும்மணி நேரத்திற்காக மனச்சோர்வுடன் நுழைந்தார். அதனால்தான் அந்த மூன்று சீஷர்களையும் தோட்டத்தின் வெளியில் விட்டு வந்தார், ஏனென்றால் தன்னைப் பிழிந்தெடுக்கும் இடத்திற்கு தனிமையாக நடக்க வேண்டியிருந்தது. "என் ஆத்துமா அளவிலடங்காத துக்கம் கொண்டிருக்கிறது" என்று சத்தமிட்டார். இது தன்னுடைய கொடூரச் சாவை அறிந்து பயத்தினால் பின்னுக்கு விலகுவது அல்ல. தான் நன்கு அறிந்த தன் நண்பன் தன்னைக் காட்டிக்கொடுத்த எண்ணமல்ல, தேவையின் உச்சக்கட்டத்தில் அவருடைய பிரியமான சீஷர்கள் அவரைக் கைவிட்டு ஓடியதுமல்ல, எதிர்பார்த்த ஏளனப் பேச்சுகளும் வெறுப்பூட்டும் வகையில் திட்டுதலும் அல்ல, உடையைக் களைந்ததோ அல்லது ஆணிகளோ அவரது ஆத்துமாவை மேற்கொள்ளவில்லை. இல்லை இந்தக் கூர்மையான மனவேதனை, அவர் சிலுவையில் பாவத்தைச் சுமந்து சகிக்கும் வேதனை யோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுமில்லை என்றே கூறலாம். "அப்பொழுது இயேசு அவர்களோடே கெத்சமெனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி, நான் அங்கே போய் ஜெபம் பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டு போய் துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங் கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம் போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்" (மத்தேயு 26:36-39). இங்கே அவர் இருண்ட மேகங்கள் மேலே எழும்புவதைக் காண்கிறார். பயங்கரமான புயல் வருவதைக் காண்கிறார். அந்த இருண்ட மும்மணி நேரத்தின் உணர்த்தமுடியாத பயங் கரத்தை முன்கூட்டியே எண்ணிப் பார்க்கிறார். "என் ஆத்துமா அளவிலடங்காத துக்கங் கொண்டிருக்கிறது" என்று சத்தமிட்டார். அந்த கிரேக்க பதம் இன்னமும் அழுத்தம் நிறைந்ததாயும் இருக்கிறது. அவர் துக்கத்தால் சூழப்பட்டிருந்தார். எதிர்பார்த்த தேவனின் கடுங்கோபத்தில் மூழ்கியிருந்தார். அவருடைய அனைத்து வலிமையும் வேதனையால் நசுக்கப்பட்டிருந்தது. புனித மாற்கு மற்றொரு வகையாக வெளிப்படுத்துகிறார். "அவர் திகிலடையும்" (மாற்கு 14:33) ஒருவரைப் பேரச்சமூட்டி, புல்லரிக்கச் செய்யும் அளவிற்குத் திகிலின் உச்சநிலை முதன்மையாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மாற்கு, சுவிசேஷம் மேலும் "மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்" என்பதில், அவருடைய ஆவி வேதனையில் முற்றிலும் மூழ்கியதைக் குறிக்கிறது. அந்த பயங்கரமான கசப்பான பாத்திரத்தைப் பார்த்து அவருடைய இதயம் மெழுகு போல் உருகியது. ஆனால் லூக்கா சுவிசேஷகன், எல்லாவற்றையும்விட மிக்க வலிமை வாய்ந்த சொற்களைப் பயன்படுத்துகிறார்: "அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது" (லூக்கா 22:44). "வியாகுலம்" என்ற வார்த்தைக்கு கிரேக்க பதம் 'போராட்டத்தில் ஈடுபடு' என்பதாகும். முன்னதாக மனிதரின் எதிர்ப்புகளோடு போராடினார். பிசாசின் எதிர்ப்புகளோடு போராடினார். ஆனால் இப்பொழுது பிதா தனக்குக் குடிக்கக் கொடுத்த பாத்திரத்தை எதிர்நோக்கி இருக்கிறார். அந்தப் பாத்திரம், பாவத்தை வெறுக்கும் பிதாவின், கடுங்கோபத்தை உள்ளடக்கியிருந்தது. "உமக்குச் சித்தமானால், இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்" என்று கூறியதன் அர்த்தத்தை விளக்குகிறது. அந்த "பாத்திரம்" என்பது ஐக்கியத்தின் அடையாளமாகும். அவருடைய கோபத்தில் ஐக்கியம் இருக்க முடியாது. ஆனால் அவருடைய அன்பில் மட்டுமே ஐக்கியம் இருக்க முடியும், எப்படியிருப்பினும், பிதாவோடு உள்ள ஐக்கியம் துண்டிக்கப்படுமோ என்று எண்ணி, மேலும் கூறுகிறார், "ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது” இருந்தபோதிலும் அவருடைய வியாகுலம் மிகப்பெரியதாக இருக்கிறது. "அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது" லூக்கா 22:44. நம் இரட்சகர் இரத்தத் துளிகளை உண்மையாகவே சிந்தினார் என்பதற்கு சந்தேகமிருக்க முடியாது என்று நாம் நினைக்கலாம். அவருடைய வியர்வை இரத்தத்தைப் போன்றிருந்தது ஆனால் உண்மையில் அதுவல்ல என்று கூறுவதில் அர்த்தமில்லை; இதில் 'இரத்தம்' என்ற வார்த்தையில் அழுத்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. சாதாரணமாக தண்ணீர் முத்துக்களைப் போன்று இரத்தம் சிந்தினார். இந்த பயங்கரமும் முன்னோடியுமான துயரக் காட்சிக்குப் பொருத்தமான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 'கெத்சமெனே' ஆ! இந்தப் பெயர் உம்மைக் காட்டிக் கொடுக்கிறதே! ஒலிவ எண்ணெய் பிழியும் இடம் என்பது இதன் அர்த்தமாகும். இந்த இடத்தில் தான் நம் இரட்சகரின் ஜீவஇரத்தம் சொட்டு சொட்டாகப் பிழியப்பட்டது. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் சரியாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது உண்மையாகவே சிலுவைக்கேற்ற ஒரு பாதப்படி, நிகரற்ற, விவரிக்கமுடியாத வியாகுலத்தின் பாதப்படி. கெத்சமெனேயில் அவருக்கு அளிக்கப்பட்ட பாத்திரம் சிலுவையில் கிறிஸ்துவால் குடித்து முடிக்கப்பட்டது.
4.இங்கு இரட்சகருக்கு ஆண்டவர் மீதுள்ள அசையாத நம்பிக்கையைப் பார்க்கிறோம்.
தேவனால் நம் மீட்பர் கைவிடப்படும் காட்சி, ஒரு அச்சவுணர்வை எழுப்பக்கூடிய நிகழ்வாகவும், தம் விசுவாசத்தைத் தவிரத் தனக்கு வேறெந்த ஆதரவுமில்லாத அனுபவமாகவும் இருக்கிறது. சிலுவை மீது நமது இரட்சகர் நிலை ஒரு தன்னிகரற்ற தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அவர் பொது ஊழியத்தின் போது பேசிய வார்த்தைகளை சிலுவையில் கூறிய வார்த்தைகளோடு வேறுபடுத்திப் பார்க்கும்போது இது தெளிவாகப் புரியும். முன்பு அவர் கூறியது, “நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்" (யோவான் 11:42). தற்போது அவரது கூக்குரல், "என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன். உத்தரவு கொடீர்” (சங்.22:2) முன்பு அவர் கூறியது, “என்னை அனுப்பினவர் என்னு டனேகூட இருக்கிறார்...அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை” (யோவா.8:29). தற்போது அவரது கதறல், “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” பிதாவின் உடன்படிக்கை மற்றும் வாக்குத்தத் தத்தைக் தவிர அவர் சார்ந்து கொள்ளுவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அவரது வியாகுலத்தின் கதறலில் அவர் பிதா வெளிப்படுத்தப்படுகிறார். இது வேதனையின் கூக்குரலேயன்றி அவநம்பிக்கையின் கூக்குரல் அல்ல. தேவன் அவரை விட்டு விலகிச் சென்றார் ஆனால் அவருடைய ஆத்துமா இன்னும் தேவனை இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறதை நாம் கவனித்துப் பார்ப்போம். இருளின் மத்தியிலும் அவரது விசுவாசம் ஆண்டவரையே முற்றிலும் சார்ந்து வெற்றி சிறந்தது. "என் தேவனே” அவர் கூறுகிறார் "என் தேவனே "நீர் தங்கியிருப்பவர் மேல் என்றும் நீங்காத நித்திய பெலன் உண்டு. நீர் இதுவரைக்கும் என் மனிதத்தன்மைக்கு ஆதரவு அளித்து, உமது வாக்கின்படி அடியேனைத் தாங்கினீர். இப்போதும் என் தேவனே எனக்குத் தூரமாகாதேயும். நான் உம்மையே சார்ந்திருக்கிறேன். காணக்கூடியதும், உணரக்கூடியதுமான சகல ஆறுதலும் காணப்படாமற்போன நிலையில் இரட்சகர் காணக்கூடாத விசுவாசத்தின் ஆதரவையும், அடைக்கலத்தையும் தனதாக்கிக் கொண்டார்.இருபத்தி இரண்டாம் சங்கீதத்தில் இரட்சகருக்கு ஆண்டவர் மீதுள்ள ஒரு சிறிதும் விலகாத விசுவாசம் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்த மிக அருமையான சங்கீதத்தில் அவரது இருதயத்தின் ஆழம் வெளிக் கொணரப்படுகிறது. அவரைக் கேளுங்கள், "எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள். நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள். உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். நானோ ஒரு புழு. மனுஷனல்ல: மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம் பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி; கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும். இவன் மேல் பிரியமாய் இருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள். நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர். என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாய் இருக்கப் பண்ணினீர். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன். நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்" (சங்கீதம் 22:4-10). அவருடைய பகைஞர் அவருக்கு விரோதமாக எழுப்ப முயன்ற முக்கிய விஷயம் கர்த்தர் பேரிலான அவரது விசுவாசம். யெகோவா மீது அவருக்குள்ள நம்பிக்கையை வைத்து அவரைக் கேலி செய்தனர் - அவர் உண்மையிலே ஆண்டவர் மேல் விசுவாசமுள்ளவராய் இருந்தாரானால் ஆண்டவர் நிச்சயமாக இவரை விடுவிப்பார். எந்தவொரு விடுதலையும் இல்லாத நிலையில் இரட்சகர் தொடர்ந்து விசுவாசித்துக் கொண்டிருந்தார், சிறிது நேரம் கைவிடப்பட்ட நிலையிலும் தொடர்ந்து விசுவாசித்தார். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்ட போதே தேவன் மேல் சார்ந்திருந்த அவர் மரண நேரத்திலும் தேவன் பேரிலே சார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். அவர் தொடர்ந்து கூறுகிறார். "என்னை விட்டுத் தூரமாகாதேயும்: ஆபத்துக் கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது : பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது. பீறிக் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல் என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். தண்ணீரைப்போல ஊற்றுண்டேன். என் எலும்புகளெல்லாம் கட்டு விட்டது. என் இருதயம் மெழுகு போலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப் போல் காய்ந்தது. என் நாவு மேல் வாயோடே ஒட்டிக்கொண்டது. என்னை மரணத்தூளிலே போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது. பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்து கொண்டது. என் கைகளையும் என் கால்களையும் உருவக்குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம். அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போடுகிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும் என் பெலனே, எனக்குச் சகாயம் பண்ணத் தீவிரித்துக் கொள்ளும். என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும் எனக்கு அருமையானதை நாய்களின் தூஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்" (சங்கீதம் 22:11-20). யோபு ஆண்டவரைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கிறார். "அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையா யிருப்பேன்" (யோபு 13:15). ஆண்டவருக்கு பாவத்தின் மீதிருந்தகோபம் இரட்சகர் மீது விழுந்த நேரத்திலும் அவர் தொடர்ந்து விசுவாசித்தார். ஆம் அவர் விசுவாசம் நம்புவதைக் காட்டிலும் பெரிய காரியத்தை செய்தது - வெற்றிவாகை சூடியது "என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும். நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவி கொடுத்தருளினீர்" (சங்கீதம் 22:21). எவ்வளவு மகத்துவமானதொரு மாதிரியை நம் இரட்சகர் தம் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்! ஒப்பிட்டு நோக்குங்கால் ஒருவேளை சூரியன் பிரகாசிக்கிற நேரத்தில் ஆண்டவரை நம்புவது ஒரு சுலபமான காரியமா யிருக்கும். எல்லாம் இருளாய் இருக்கும் நேரமே பரீட்சிக்கப்பட வேண்டிய நேரம். செழிப்பிலும் தரித்திரத்திலும் ஆண்டவரைச் சார்ந்திராத விசுவாசம் ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விசுவாசம் அல்ல. நாம் சாகும்போது விசுவாசம் வேண்டுமென்றால் நாம் வாழ்ந்திருக்கும் போது உண்மையான விசுவாசம் தேவை. இரட்சகர், கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்ட போதே ஆண்டவர் சார்பில் விழுந்தார். முப்பத்து மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு விநாடியும் ஆண்டவர் சார்பில் விழுந்து கொண்டிருந்த அவர் மரண நேரத்திலும் இன்னும் அவர் சார்பில் விழுந்திருந்ததில் ஆச்சரியம்' ஒன்றுமில்லையே! கிறிஸ்தவ தோழர்களே, உங்களுக்கு எல்லாம் இருளாய் இருக்கலாம். ஆண்டவருடைய முகத்திலிருந்து பிரகாசிக்கும் ஒளியை இனிமேலும் காணக்கூடாதபடி இருக்கலாம். ஆண்டவரே உங்களைக் கோபத்தோடு நோக்கிப் பார்ப்பதைப் போன்று தோன்றலாம். இவை எல்லாவற்றின் மத்தியிலும், இன்னும் 'ஏலி, ஏலீ, என் தேவனே, என் தேவனே என்று கூறலாம். "என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?"
5.இங்கு நாம் இரட்சிப்பின் அடித்தளத்தைக் காண்கிறோம்.
ஆண்டவர் பரிசுத்தராய் இருப்பதால் அவரால் பாவத்தை ஏறிட்டுக்கூடப் பார்க்க முடியாது. அவர் நீதியுள்ளவர். ஆகவே பாவத்தை எங்கு கண்டாலும் அவர் நியாயந்தீர்க்கிறார். ஆனால் ஆண்டவர் அன்பின் உருவாகவும் இருக்கிறார். ஆண்டவர் இரக்கத்தில் களிகூருகிறார். ஆகவே அவருடைய அளவிலா ஞானம், நீதியைத் திருப்தியடையச் செய்து அவரது இரக்கம் குற்றவுணர்வுள்ள பாவிகளிடம் தடையில்லாமல் பாய்ந்து செல்ல ஒரு வழி வகுத்தது. இது அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ளவர் பாடுகளை அனுபவிக்கும் ஒரு பதிலாள் நிலை. இங்கு வேறு யாரும் தகுதிவுள்ளவராக இல்லாததால் ஆண்டவருடைய குமாரனே பதிலாளாகத் தெரிவு செய்யப்படுகிறார். நாகூம் தீர்க்கதரிசியால் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. "அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிர கோபத்தில் தரிப்பவன் யார்?" (நாகூம் 1:3). வணங்கப்படத்தக்கவரான நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவில் இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்தது. அவரால் மாத்திரமே "நிற்க" முடியும். ஒருவரால் மாத்திரமே சாபத்தைச் சுமந்து, அதே நேரத்தில் அதன் மேலெழும்பி வெற்றி சிறக்க முடியும். ஒருவரால் மாத்திரமே பழிவாங்கும் உக்கிரத்தைத் தாங்கிக் கொண்டு அதே நேரத்தில் சட்டத்தின் நிலையை உயர்த்த மேன்மைப்படுத்த முடியும். ஒருவரால் மாத்திரமே சாத்தானைத் தன் குதிங்காலை நசுக்க அனுமதித்து அந்த நசுக்கப்பட்ட நேரத்தில் தானே மரணத்தின் மேல் அவனுக்கிருந்த வல்லமையை அழிக்க முடியும். ஆண்டவர் "சகாயஞ் செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான் மேல் வைத்து," (சங்கீதம் 89:19) யெகோவாவிற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத, அவருடைய மகிமையைப் பிரகாசிப்பிக்கிற, அவரைப் போன்ற அச்சடையாளமுள்ள ஒருவரைத் தெரிந்து கொண்டார். அந்த எல்லையில்லா அன்பு, வளைந்து கொடுக்காத நியாயம், சர்வ வல்லமை ஆகியவைகளின் ஒன்றிணைப்பு விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பை சாத்தியமாக்கிற்று.சிலுவையில் நம்மெல்லாருடைய அக்கிரமமும் அவர் மேல் சுமத்தப் பட்டதால் தெய்வீக நியாயத்தீர்ப்பு அவர் மேல் விழுந்தது. ஒருவர் மேலுள்ள பாவத்தை இன்னொருவர் மேல் மாற்றும் போது அதற்கான தண்டனையும் மாற்றப்படவேண்டும். பாவமும் அதற்கான தண்டனையும் ஆண்டவராகிய இயேசுவிடம் மாற்றப்பட்டது. சிலுவையின் மீது பாவநிவிர்த்தி செய்து கொண்டிருந்தார். பாவநிவிர்த்தி முற்றிலுமாகக் கர்த்தருடைய காரியம். இது ஆண்டவருடைய பரிசுத்தத்தின் முழு எதிர்பார்த்தலுக்கு ஈடுகொடுக்கும் காரியத்தைப் பற்றியது. அவருடைய நியாயத்தின் கோரிக்கையை முழுமையாகத் திருப்திப்படுத்தும் ஒன்றாகவும் காணப்பட்டது. கிறிஸ்துவின் இரத்தம் நமக்காக மாத்திரம் சிந்தப்படவில்லை அது தேவனுக்காகவும் சிந்தப்பட்டது. "கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனை யான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து" (எபேசியர் 5:2) என்ற வசனம் "தேவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்ததை வலியுறுத்துகிறது. அந்த மறக்க முடியாத இரவில் எகிப்தில் ஆசரிக்கப்பட்ட பஸ்கா இதற்கு ஓர் முன்னடையாளமாக இருந்தது. ஆட்டுக்குட்டியின் இரத்தம் ஆண்டவரின் கண்களுக்குத் தென்படும் இடத்தில் இருக்க வேண்டும். "அந்த இரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன்!" (யாத்.12:13). கிறிஸ்துவின் சிலுவை மரணம் ஒரு சாபத்தின் மரணம். "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார்" (கலாத்தியர் 3:13). கர்த்தரிடத்திலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்படுதலே "சாபம்” கிறிஸ்து வல்லமையோடு வெளிப்படும் நாளில் தனது இடது பக்கத்திலிருப்பவர்களிடத்தில் இன்னும் பேசுவதிலிருந்து இது தெளிவாகிறது. "சபிக்கப்பட்டவர்களே என்னை விட்டுப்... போங்கள்" என்று சொல்லுவார். கர்த்தருடைய சமுகத்திலும் மகிமையிலுமிருந்து நாடு கடத்தலைப் போன்ற அனுபவமே சாபமாகும். இது பழைய ஏற்பாட்டின் அநேக மாதிரிகளின் பொருளை விளக்குகிறது. வருஷத்திற்கொருமுறை, பாவ நிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலி செலுத்தப்படும் போது காளையைக் கொன்று அதன் இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து, அதைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு சென்றனர் (லேவிராகமம் 16:27). அங்கே காளையின் உடல் முழுவதுமாக எரிக்கப்பட்டது. பாளையத்தின் நடுவில் ஆண்டவருடைய வாசஸ்தலம் இருந்தது. பாளையத்திற்குப் புறம்பே கொண்டு செல்லப்படுவது ஆண்டவரது பிரசன்னத்திலிருந்து விலக்கப்படுவதாகும். ஒரு குஷ்டரோகியின் நிலையும் இதுதான். "அந்த வியாதி அவனில் இருக்கும் நாள் வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன். அவன் தீட்டுள்ளவனே. ஆகவே அவன் தனியே குடியிருக்க வேண்டும். அவன் குடியிருப்புப் பாளையத்திற்குப் புறம்பே இருக்கக்கடவது" (லேவிராகமம் 13:46). அதேனெனில் ஒரு குஷ்டரோகி எல்லாப்பாவத்தின் ஒரு முழு உருவமாகக் கருதப்பட்டான். 'வெண்கல சர்ப்பத்தின்' ஒரு மாதிரிப் படிவமூலமாகவும் இதைப் பார்க்கிறோம். ஏன் ஆண்டவர் மோசேயிடம் கம்பத்தின் மேல் 'சர்ப்பத்தை' வைத்து சர்ப்பத்தால் கடிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களை அதை நோக்கிப் பார்க்கும்படி சொன்னார்? கிறிஸ்துவை, உன்னதமான பரிசுத்த தேவனை ஒரு சர்ப்பத்தின் மாதிரியாகக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆம், அது அவர் "நமக்காகச் சாபமானதைத்" தெளிவு படுத்துகிறது. ஏனெனில் சர்ப்பம் சாபத்திற்கு அடையாளமாகக் காட்டப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் நிழலாட்டமாய் வந்த காரியங்களை தற்போது கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். தேவனின் பிரசன்னத்தி லிருந்து பிரிக்கப்பட்டவராய் "நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்' (எபிசியர் 13:12) என்று பார்க்கிறோம். அவர் ஒரு "குஷ்டரோகியைப்" போல் பாவத்தின் உருவானார். ஒரு "வெண்கல சர்ப்பத்தைப்" போன்று நமக்காகச் சாபமானார். முள்முடியின் ஆழமான அர்த்தத்தைப் பார்க்கிறோம் - முட்கள் சாபத்தின் அடையாளம். தலையில் முள்முடி சூட்டப்பட்டவராய் உயர்த்தப்பட்ட காட்சி அவர் நம் சாபத்தை சுமப்பதைக் காட்டுகிறது. தேசம் மரணப் போர்வை போர்த்தப்பட்டதாய் காரிருளில் இருந்த அந்த மூன்று மணிநேரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது இயற்கைக் கப்பாற்பட்ட ஒரு அந்தகாரம். இது இரவு நேரம் அல்ல. உச்சி வானத்தில் சூரியன் இருக்கிறது. திரு. ஸ்பர்ஜன் சொன்னது போல இது "ஒரு நடுப்பகலின் நடு இரவு "இது ஒரு கிரகணமும் இல்லை. ஆற்றல் மிக்க வான்கணிப்பாளர் கூற்றுப்படி இயேசு சிலுவையிலறையப்பட்ட அந்த நேரத்தில் சந்திரன், சூரியனை விட்டு அதிக தொலைவில் இருந்தது. காரிருள் அந்த வேதனைக் குரலுக்குப் பொருளாய் அமைவது போல் கிறிஸ்துவின் கதறுதல் அந்தக் காரிருளுக்கு விளக்கம் கொடுக்கிறது. இந்தஇருளுக்கு விளக்கம் அளித்து இந்தக் கூக்குரலை விவரித்துக் கூறும் ஒரு காரியத்தைக் கவனிப்போம் - கிறிஸ்து பாவிகள் மற்றும் இழந்து போனவர்கள் இடத்தைத் தனதாக்கிக் கொண்டார். பாவத்தைச் சுமக்கும் இடத்தில் இருந்தார். மக்களுக்கு வரவேண்டிய நியாயத்தீர்ப்பைத் தான் சகித்துக் கொண்டு பாவமறியாத அவர் நமக்காகப் பாவமானார். அங்கு என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்வதற்காகவே அந்தக் கதறல் வெளிப்பட்டது. இது பாவநிவராணத்தின் வெளிப்பாடு எனக்கூறலாம். ஏனெனில் மூன்று (மூன்று மணிநேரம்) என்பது எப்பொழுதும் வெளிப்பாட்டின் எண்ணாகக் கருதப்படுகிறது. தேவன் வெளிச்சமா யிருக்கிறார். 'இருள்' என்பது அவர் விலகிச் சென்றுவிட்டார் என்பதற்கான இயற்கையான ஒரு அடையாளம். மீட்பர் பாவிகளின் பாவத்தோடு தனித்திருக்கும்படி விடப்பட்டார்: இதுவே மூன்று மணி அந்தகாரத்திற்கான விளக்கம். அக்கினிக்கடலில், சபிக்கப்பட்டவர்கள் மீது இரட்டிப்பான துன்பங்களான, உணர்ச்சியின் வேதனை மற்றும் இழப்பின் வேதனை செயல்படுவது போல கிறிஸ்துவும், தேவனுடைய உக்கிரம் அவர் மேல் ஊற்றப்பட்டதினிமித்தமும், அவருடைய பிரசன்னமும் ஐக்கியமும் விலக்கப்பட்டதினிமித்தமும் தாங்கொணா துயரம் அடைந்தார்.ஒரு விசுவாசிக்கு சிலுவையின் மேன்மையென்ன என்பதை கலாத்தியர் 2:20 விவரித்துக் காண்பிக்கிறது. "கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன்." அவர் நமக்குப் பதிலாளரானார். தேவன் நம்மை இரட்சகரோடு ஒன்றாக இணைத்தார். அவர் மரணம் என்னுடையதாயிற்று. என்னுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,என்னுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். பாவம் தள்ளிவிடப்பட வில்லை. ஆனால் தூக்கி எறியப்பட்டது. வேறொருவர் கூறுவது போல, "ஆண்டவர் பாவத்தைத் தன் குமாரன் மீது வைத்து நியாயம் தீர்த்ததால் தற்போது விசுவாசிக்கும் பாவியைத் தன் குமாரனில் ஏற்றுக்கொள்கிறார்." நமது "ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது" (கொலோசியர் 3:3). நான் கிறிஸ்துவுடனே அடைக்கப்பட்டுள்ளேன். ஏனெனில் கிறிஸ்து ஆண்டவரிடமிருந்து அடைக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்.அவர் நமக்காகத் துக்கப்பட்டுத் தம் ஜனங்களை மீட்டார்.நாம் பெறவேண்டிய சாபம் அவர் தலைமேல் வீழ்ந்தது.அவர் புனிதத்தலை கவிழச்செய்த கோரப்புயல் முற்றிலும் ஓய்ந்ததுஅதன் விளைவாக நான் பெற்றது தெய்வீக அமைதி. அவர் தலை ஏற்றதுமகிமையின் கிரீடம்இங்கு இரட்சிப்பின் அடிப்படித் தன்மையைக் காண்கிறோம். நமது பாவங்கள் ஏற்கப்பட்டாயிற்று. நமக்கு விரோதமான தேவனின் எல்லாக் கோரிக்கைகளும் ஈடுகொடுக்கப்பட்டாயிற்று. நாம் அவர் பிரசன்னத்தில் எப்போதும் மகிழ்ந்திருக்க சிறிது நேரம் கிறிஸ்து கைவிடப்பட்டார். "என் தேவனே! என் தேவனே! ஏனென்னைக் கைவிட்டீர்?" ஒவ்வொரு விசுவாசமுள்ள ஆத்துமாவும் இதற்குப் பதில் கூறட்டும். நான் ஒளியில் நடக்கும்படி அவர் பயங்கரமான இருளுக்குள் பிரவேசித்தார். நாம் மகிழ்ச்சியின் பாத்திரத்தில் பானம் பண்ணுமாறு அவர் வியாகுலத்தின் பாத்திரத்தில் பானம் பண்ணினார். நான் மன்னிக்கப்படும்படியாக அவர் கைவிடப்பட்டார். "என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?"
6.இங்கு கிறிஸ்து நம்பேரில் கொண்டுள்ள அன்பின் மிக உன்னத சான்றினைக் காண்கிறோம்.
"ஒருவன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை" (யோவான் 15:13). ஆனால் அவர் "ஜீவனைக் கொடுக்கும் அன்பு" எவையெல்லாம் உள்ளடக்கியது என்று அளக்க முடிந்தால் மட்டுமே கிறிஸ்துவின் அன்பை மதிப்பீடு செய்ய இயலும். சரீர மரணத்தின் மூலம் சொல்லமுடியாத நிந்தை மற்றும் விவரிக்க முடியாத வேதனை அடைந்தபோதிலும், இதைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் இதில் அடங்கியிருக்கிறது. அவர் நமது இடத்தை ஏற்று நமக்காகப் பாவமானார் என்பதே இதன் பொருள். இதன் உட்கருத்து என்ன என்பதை அவர் ஆள்தத்துவத்தின் வெளிச்சத்தில் மட்டுமே தீர்மானிக்க முடியும் மிகவும் கனம் பொருந்திய சீரிய நல்லொழுக்கமுள்ள ஒரு பெண் சில காலம் மட்டும் இழிவான அசுத்தமான மனிதரோடு இணைந்து இருப்பதைத் தாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தப்படும் காட்சியை நம் கண்முன் நிறுத்துவோம். அக்கிரமக்காரர்களின் குகையில் முரட்டுத்தனமான நாகரீகமற்ற ஆண்களாலும் பெண்களாலும் சூழப்பட்டு தப்பிச் செல்ல முடியாதபடி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவளைக் கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அசுத்த உதடுகளிலிருந்து வரும் சூளுரைகள், குடிகாரரின் வெறியாட்டம் மற்றும் அந்த ஆபாச சூழ்நிலைகள் மீதான அவள் அரு வருப்பை மதிப்பீடு செய்ய முடியுமா? அக்கிரமத்தின் மத்தியில் ஒரு தூய்மை யான பெண்மணி ஆத்துமாவில் எவ்வளவு வேதனை அடைந்திருப்பாள் என்றதொரு கருத்துக்கணிப்புச் செய்ய முடியுமா? ஆனால் இந்த எடுத்துக்காட்டு அநேகக்குறைபாடுகள் கொண்டது. ஏனென்றால் ஒரு பெண்ணும் பரிபூரண தூய்மை, மேன்மை, நல்லொழுக்கம் மற்றும் களங்கமற்ற நன்னடத்தை உடையவளாய் இருக்க முடியாது. தூய்மை என்பது பாவமில்லாத நிலை - ஆவிக்குரிய பரிசுத்தம். கிறிஸ்து தூய்மையானவர்-பரிபூரண தூய்மையானவர். அவர் ஒருவரே பரிசுத்தர். பாவத்தின் மீது எல்லையற்ற அருவருப்பு இருந்தது. அதை வெறுத்தார். அவருடைய பரிசுத்த ஆத்துமா வெறுப்பினால் பின்னிட்டது. ஆனால் நம்மெல்லாருடைய அக்கிரமும் அவர் மீது சுமத்தப்பட்டது. அந்த இழிவான பாவம் பயங்கரமான சர்ப்பத்தைப் போன்று அவரைச் சுற்றிச் சூழ்ந்து இறுகப் பற்றிக் கொண்டது. ஆனாலும் அவர் நமக்காகப் பாடுகளைச் சகிக்க சித்தங்கொண்டார்.ஏன்? அவர் நம்மீது அன்பு கூர்ந்ததால்! "இவ்வுலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே, முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்" (யோவான் 13:1). இன்னும் பார்ப்போமானால், கர்த்தரால் அவர் மீது ஊற்றப்பட்ட உக்கிரத்தை அளக்க முடியுமானால் மட்டுமே நம்மேல் இருக்கும் கிறிஸ்துவின் அன்பின் மேன்மையை மதிப்பீடு செய்ய இயலும். இதிலிருந்து மட்டுமே அவர் ஆத்துமா பின்னிழுக்கப்பட்டது. இது அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, மற்றும் இதற்கு என்ன விலைக்கிரயம் செலுத்த வேண்டியிருந்தது என்பதைத் தானாகவே வேதனையோடு வெளிப்படுத்தும் மற்றும் கர்த்தரிடத்தில் ஏறெடுக்கும் விண்ணப்பங்களின் சங்கீதங் கனிலிருந்து ஓரளவு கற்றுக்கொள்ள நாம் அனுமதிக்கப்படுகிறோம். எதிர்பார்த்தலோடு பேசும் வண்ணமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஆவியிலே தாவீதின் மூலமாகப் பின்வருமாறு கதறுகிறார். "தேவனே என்னை இரட்சியும்: வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகி வருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்கநிலையில்லை நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன். வெள்ளங்கள் என்மேல் புரண்டு போகிறது. நாள் கூப்பிடுகிறதினால் இளைத்தேன் என் தொண்டை வறண்டு போயிற்று. என் தேவனுக்கு நான் காத்திருக்கையால் என் கண்கள் பூத்தப் போயிற்று... நான் அமிழ்ந்துப் போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும். என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும். ஜலப்பிரவாகங்கள் என் மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும் பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக் கொள்ளாமலும் இருப்பதாக... உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும். நான் வியாகுலப்படுகிறேன். எனக்குத் தீவிரமாய்ச் செவி கொடுத்தருளும். நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலை பண்ணும். என் சத்துருக் களினிமித்தம் என்னை மீட்டுவிடும். தேவரீர் என் நிந்தையையும், என் வெட்கத்தையும், என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர். என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது. நான் மிகவும் வேதனைப்படுகிறேன். எனக்காகப் பரிதபிக்கிறவன் உண்டோ என்று காத்திருக்கிறேன். ஒருவனையும் காணேன்" (சங்கீதம் 69:1-3, 14-15, 17-20). மேலும் "உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என் மேல் புரண்டு போகிறது'' (சங்கீதம் 42:7). ஆண்டவருக்குப் பாவத்தின் மீதிருந்த அருவருப்பு பாவத்தைச் சுமப்பவர் மீது வீசி அடித்து வழிந்தோடும் வெள்ளத்தைப் போலச் சீறிப் பாய்ந்தது. சிலுவையின் வியாகுலத்தை ஆவலோடு எதிர்பார்ப்பவராக எரேமியாவின் மூலம் கதறுகிறார், "வழியில் நடந்து போகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? கர்த்தர் உமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தின தினால் எனக்கு உண்டான என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப் பாருங்கள்" (புலம்பல் 1:12). பரிசுத்தமானவர் மூன்று மணிநேரம் சிலுவையில் அனுபவித்த சொல்லொண்ணா துயரத்தைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு சில அறிக்கைகளே இவைகள். அந்த மூன்று மணி நேரத்திற்குள் நித்திய நரகத்திற்கொப்பானதொன்று சிறிய வடிவில் புகுத்தப்பட்டுள்ளது.தேவனுடைய முகத்தின் ஒளி பிதாவின் செல்லக்குமாரனுக்கு மறைக்கப்பட்டிருந்திருக்கும். வெளியிலுள்ள இருளில் அவர் தனித்து விடப்பட்டிருந்தார்.இங்கு நாம் காண்பது தன்னிகரற்ற அளவிடப்பட முடியாத அன்பு. "உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி செய்யும்" என்று கதறினார். ஆனால் வேதனையும் உக்கிரமும் நிறைந்த பாத்திரத்தை முற்றிலும் குடித்துத் தீர்க்காவிட்டால் அவருடைய மக்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதைக் குடிப்பதற்கு வேறொருவரும் இல்லையாதலால் அவர் முற்றிலும் குடித்துத் தீர்த்தார். அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்! பாவம் மனிதர்களைக் கொண்டு வந்தது, அன்பு இரட்சகரைக் கொண்டு வந்தது. "என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவீட்டீர்?"
7.இங்கு அந்த ‘பெரிய நம்பிக்கை'யின் அழிவைக் காண்கிறோம்.
இரட்சகரின் இந்தக் கதறல் ஆண்டவரால் கைவிடப்பட்டு இழந்து போன ஒவ்வொரு ஆத்துமாவின் இறுதிநிலையை முன்னறிவிக்கிறது. வாசகர்கள் இந்த நாட்களின் கள்ளப்போதகத்திற்கு எதிராக எச்சரிக்கை செய்யப்பட என் மனச்சாட்சி என்னை வற்புறுத்துகிறது. ஆண்டவர் நம் எல்லோரையும் நேசிக்கிறார். அவர் அதிக இரக்கமுள்ளவராக இருக்கிற படியால் தம் வார்த்தையில் கூறப்பட்ட பயங்கரமான அச்சுறுத்தல்களை நம் மேல் வரவிடமாட்டார். எனப் போதிக்கப்படுகிறோம். இதேவிதமாகத்தான் அந்த பழைய பாம்பு ஏவாளிடம் வாதாடியது. "அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று ஆண்டவர் சொல்லி இருந்தார். ஆனால் சர்ப்பம் "நீங்கள் சாகவே சாவதில்லை" என்று கூறியது. ஆனால் யாருடைய வார்த்தை உண்மையென நிரூபிக்கப்பட்டது? நிச்சயமாக பிசாசினுடைய தல்ல. ஏனெனில் ஆதி முதல் அவன் பொய்யனாயிருக்கிறான். ஆண்டவரின் எச்சரிப்பின் வார்த்தை நிறைவேறியது. நமது முதல் பெற்றோர் அவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியத் தவறிய அந்த நாளில்தானே ஆவிக்குரிய மரணமடைந்தனர். வரும் நாட்களிலும் இது நிறைவேறும். ஆண்டவர் இரக்கமுள்ளவர். அவர் நமக்கு ஒரு இரட்சகரை அனுப்பித்தந்தது இந்த உண்மையை நிரூபிக்கிறது. கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பது அவருடைய இரக்கத்திற்குச் சான்றாகும். உங்கள் மேல் நீடிய பொறுமையுள்ளவராய் இருந்து உங்கள் முரட்டாட்டமான கலகங்களை இந்நாள் மட்டும் பொறுத்து கிருபையின் நாட்களை இந்நிமிட மட்டும் நீட்டிக்கொடுத்தது இதை நிரூபிக்கிறது. ஆனால் ஆண்டவருடைய இரக்கத்திற்கு ஓர் எல்லை உண்டு. கிருபையின் நாள் வெகுசீக்கிரத்தில் முடிவிற்கு வரும். நம்பிக்கையின் வாசல் மிகச்சீக்கிரத்தில் முற்றிலுமாக அடைபடும். மரணம் உங்கள் வாழ்க்கையை தீவிரமாகத் துண்டித்துப் போடலாம். மரணத்திற்குப் பின் "நியாயத்தீர்ப்பு” உண்டு. அந்த நியாயத் தீர்ப்பு நாளிலே ஆண்டவர் கிருபையாய் அல்ல ஆனால் நீதியாய் செயல்படு வார். நீங்கள் ஏளனமாய் உதாசீனம் பண்ணின கிருபையினிமித்தம் உங்களைப் பழிவாங்குவார்.கிறிஸ்துவின் கதறல், ஆண்டவருக்குப் பாவத்தின் மேலுள்ள வெறுப் பிற்கு எவ்வாறு சாட்சியாக வெளிப்பட்டது என்பதை அறிந்து கொள்ள இது போதுமானதாய் இருப்பதால் விரிவாக விளக்கப்பட்ட காரியங்களை மறுபடியும் கூறப்போவதில்லை. ஆண்டவர் பரிசுத்தமும், நீதியும் உள்ளவராய் இருப்பதால் பாவத்தை எங்கு கண்டாலும் நியாயம் தீர்ப்பார். பாவம் ஆண்டவராகிய இயேசுவின் மீது சுமத்தப்பட்ட போது தன் சொந்தகுமா ரென்றும் பாராது செயல்பட்டவர், இரட்சிக்கப்படாத வாசகராகிய நீங்கள் பாவத்தோடு அந்த வெள்ளை சிங்காசன ங்காசனத்தில் வீற்றிருப்பவர் முன் நிற்கும்போது அவர் உங்களை விடுவிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தம் மக்களின் பிணையாளியாகக் கிறிஸ்து தொங்கிக் கொண்டிருக் கும்போது ஆண்டவர் தம் உக்கிரத்தை அவர் மீது ஊற்றினாரானால், நீங்கள் உங்கள் பாவத்தில் மரித்தால் எவ்வளவு நிச்சயமாய் அவர் தம் உக்கிரத்தை உங்கள் மேல் ஊற்றுவார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சத்திய வார்த்தைத் தெள்ளத்தெளிவாய் இருக்கிறது. "குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை. தேவனுடைய கோபம் அவன் மேல் நிலை நிற்கும் என்றான்" (யோவான் 3:36). பாவிகளின் இடத்தை எடுத்த பொழுது தன் சொந்தக்குமாரனையே 'தப்பவிடாத' தேவன், இரட்சகரைத் தள்ளிவிடும் ஒருவனை நிச்சயமாகத் தப்பவிட மாட்டார். கிறிஸ்து மூன்று மணி நேரம் ஆண்டவரிடமிருந்து பிரிக்கப்பட்டார். நீங்கள் உங்கள் இரட்சகரை கடைசிவரை ஒதுக்கி விட்டீர்களானால் நித்திய நித்தியமாய் ஆண்டவரிடமிருந்து பிரிக்கப்படுவீர்கள். "அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும்... நீங்கலாகி நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்” (2 தெச.1:10) “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?" இங்கொரு பாழ்க்கடிப்பின் குரல் கேட்டது.வாசகரே, அதன் எதிரொலி ஒருபோதும் உங்களுக்கு வேண்டாம்இங்கொரு பிரிவின் கூக்குரல் கேட்கிறது.வாசகரே, அதன் அனுபவம் ஒருபோதும் உங்களுக்கு வேண்டாம்.இங்கொரு பாவநிவிர்த்தியின் குரல் கேட்கிறது.வாசகரே, அதன் இரட்சிப்பின் நன்மை உங்களுக்கு வேண்டும்; உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.