லேவியராகமம் 19:20: இந்த வசனம், ஒரு பெண் அடிமையாயிருந்து, ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும்போது அவள் வேறொருவனுடன் உடலுறவு கொண்டால், அவள் “கசையினால்” அடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. கசையடி என்பது மிகவும் கடுமையான தண்டனை அல்லவா? இத்தகைய நிகழ்வுக்குக் காரணமன அந்தப் பெண் அடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் அவளுடன் இருந்த அந்த ஆணைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லையே இது என்ன மாதிரியான சமத்துவம்?
இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்ளவும், குற்றச்சாட்டை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இந்தப் பகுதி முழுவதையும் வாசிப்போம்:
லேவியராகமம் 19:20-22 “ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல. அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன். அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.”
இந்த 20 -ஆம் வசனம் மூலமொழிக்கு ஏற்றாற்போல் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையில் இவ்வார்த்தைக்கு அடிக்கப்படுதல் என்பது பொருள் கிடையாது. இந்த பெயர்ச்சொல் முழு பழைய ஏற்பாட்டிலும் ஒருயொரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெயர்ச்சொல்லிலிருந்தே “பகார்” என்ற வினைச்சொல் தோன்றியது. அதாவது “விசாரணை செய், தீர விசாரி, தீவிரமாய் தேடு” என்பதே இதன் பொருள். எனவே, அடிக்கப்படுதல் என்பதற்குப் பதிலாக, அவளுடைய “விவகாரம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்” என்று வர வேண்டும். இவ்வசனத்தில் வருகிற “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க,” என்ற வாசகத்தில் வருகிற, “மீட்கப்படாமலும்” என்னும் தமிழ் வார்த்தைக்கான எபிரெயச் சொல், “படா” என்பதாகும். இதற்கு மீட்பு என்ற பொருள் இருந்தாலும் பெரும்பாலும், “காப்பாற்றப்படுதல், விடுவிக்கப்படுதல்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க” என்பதற்குப் பதில், “ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் காப்பாற்றப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க” என்று வர வேண்டும். அதாவது, அந்த அடிமைப் பெண், தவறான முறையில் உடலுறவு கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் போது, ஒருவராலும் அவள் காப்பாற்றப்படாமல் விட்டுவிடப்பட்டால் அவள் விசாரிக்கப்பட வேண்டும். எனவே லேவியராகமம் 19:20 க்கான மாற்று எளிய மொழிபெயர்ப்பு, இவ்வறாக இருக்க வேண்டும். “ஓர் அடிமையாகிய பெண்ணுடன் ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அப்பெண்ணுடன் தவறாக நடந்துகொண்ட நபரால் நிந்திக்கப்பட்டும், அவளுக்கு எந்த உதவியும் செய்யாமலும், அவளுக்குக் கிடைக்க வேண்டிய சுதந்தரம் வழங்கப்படாமலும் இருந்தால், அவள் விசாரிக்கப்பட வேண்டும்; அவள் அடிமை ஸ்தானத்திலிருந்து விடுதலை பெறாதவளாகையால் அவன் கொல்லப்படமாட்டான்.”
ஆகவே இங்கு வழங்கப்பட்ட அறிவுரையில் அந்தப் பெண்ணுடன் நேரடியாகப் பொருந்தக்கூடிய எந்த வித அறிவுரையும் இல்லை. அவளே இங்கு பாதிக்கப்பட்டவள். இந்த வசனத்தின் தொடக்கத்தில் ஒரு ஆண் அடிமைப் பெண்ணைக் கற்பழித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு, அவள் விடுதலையாகாதவள் ஆகையால் அவள் இறக்க மாட்டான் என்பதே முடிவு. அவள் விடுதலை பெற்ற ஒரு சுதந்திரப் பெண்ணாக இருந்திருந்தால், அவன் இறக்க வேண்டியிருக்கும்!
இந்த வழக்கில், அவளைக் கற்பழித்தவன் தன்னுடைய குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, அதற்கான குற்றநிவாரண பலியைச் செலுத்த வேண்டும் (வசனம் 21). ஆகவே அவளைக் கற்பழித்த ஆணுக்குத் தண்டனை இல்லை என்று ஆகிவிடாது. அவனும் தன் குற்றத்தைச் சுமக்க வேண்டும், அதற்காக காணிக்கை செலுத்த வேண்டும். அவள் விட்டு விடப்படுவதுப் போல் இவன் விடுவிக்கப்படுவதில்லை.
இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று உள்ளது. அது, என்னவெனில், இந்தப் பிரச்சினையில், அடிமைப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆணிடம் மட்டுமே பரிகாரம் செய்ய வேண்டும் என்று கட்டளை உள்ளது. அந்த அடிமைப் பெண் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஏனெனில் இவள் ஒரு அடிமையாக இருப்பதால், ஒரு சுதந்திரமான மனிதனை எதிர்ப்பதில் உள்ள தன்னுடைய இயலாமையை அவள் உணர்ந்திருக்கலாம். எனவே பாவத்திற்கு பரிகாரம் செய்யும் பொறுப்பை பெண்ணிடம் கேட்காமல் ஆணின்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இங்கே ஓர் அடிமைப் பெண்ணிடம் தேவன் கொண்டிருக்கிற கரிசனையுள்ள இதயத்தைப் பாருங்கள். அந்தக் காலத்தில் நிலவிய அடிமைத்தனத்தில் இப்படியான ஒன்று நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.