1 | பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், | ஆதி 3:15 ஆதி 6:3 ஆதி 6:13-22 ஆதி 8:15-19 ஆதி 9:1-17 ஆதி 12:1-3 ஆதி 26:2-5 ஆதி 28:12-15 ஆதி 32:24-30 ஆதி 46:2-4 யாத் 3:1-22 லூக் 24:27 லூக் 24:44 அப் 28:23 1பேது 1:10-12 2பேது 1:20 2பேது 1:21 |
2 | இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். | ஆதி 49:1 எண் 24:14 உபா 4:30 உபா 18:15 உபா 31:29 ஏசா 2:2 எரே 30:24 எரே 48:47 எசே 38:16 தானி 2:28 தானி 10:14 ஓசி 3:5 மீகா 4:1 அப் 2:17 கலா 4:4 எபே 1:10 2பேது 3:3 யூதா 1:18 |
3 | கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். | யோவா 1:14 யோவா 14:9 யோவா 14:10 2கொரி 4:6 |
4 | இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். | எபிரெ 1:9 எபிரெ 2:9 எபே 1:21 கொலோ 1:18 கொலோ 2:10 2தெச 1:7 1பேது 3:22 வெளிப் 5:11 வெளிப் 5:12 |
5 | ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது “நீ என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்றும், “நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்” என்றும் எப்போதாவது கூறியதுண்டா? | எபிரெ 5:5 சங் 2:7 அப் 13:33 |
6 | மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, “கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக” என்றார். | எபிரெ 1:5 நீதி 8:24 நீதி 8:25 யோவா 1:14 யோவா 1:18 யோவா 3:16 ரோம 8:29 கொலோ 1:15 கொலோ 1:18 1யோவா 4:9 வெளிப் 1:5 |
7 | வானதூதரைக் குறித்து அவர் “தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்” என்றார். | எபிரெ 1:14 2இரா 2:11 2இரா 6:17 சங் 104:4 ஏசா 6:2 எசே 1:13 எசே 1:14 தானி 7:10 சகரி 6:5 |
8 | தம் மகனைக் குறித்து, “இறைவனே, என்றுமுளது உமது அரியணை: உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல். | சங் 45:6 சங் 45:7 |
9 | நீதியே உமது விருப்பம்: அநீதி உமக்கு வெறுப்பு: எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உம்மீது அருள்பொழிவு செய்து அரசத் தோழரினும் மேலாய் உயர்த்தினார்” என்றார். | எபிரெ 7:26 சங் 11:5 சங் 33:5 சங் 37:28 சங் 40:8 சங் 45:7 ஏசா 61:8 |
10 | மீண்டும், “ஆண்டவரே, நீர் தொடக்கத்தில் பூவுலகுக்கு அடித்தளம் இட்டீர். விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ! | சங் 102:25-27 |
11 | அவையோ அழிந்துவிடும்: நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்: | எபிரெ 12:27 ஏசா 34:4 ஏசா 65:17 மத் 24:35 மாற் 13:31 லூக் 21:33 2பேது 3:7-10 வெளிப் 20:11 வெளிப் 21:1 |
12 | போர்வையைப்போல் அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்: ஆடையைப்போல் அவற்றை மாற்றிவிடுவீர். நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது” என்றார் அவர். | எபிரெ 13:8 யாத் 3:14 யோவா 8:58 யாக் 1:17 |
13 | மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது, “நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று கூறியதுண்டா? | எபிரெ 1:3 எபிரெ 10:12 சங் 110:1 மத் 22:44 மாற் 12:36 லூக் 20:42 அப் 2:34-36 அப் 7:55 |
14 | அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா? | எபிரெ 8:6 எபிரெ 10:11 சங் 103:20 சங் 103:21 தானி 3:28 தானி 7:10 மத் 18:10 லூக் 1:19 லூக் 1:23 லூக் 2:9 லூக் 2:13 அப் 13:2 ரோம 13:6 ரோம 15:16 ரோம 15:27 2கொரி 9:12 பிலிப் 2:17 பிலிப் 2:25 1இரா 22:19 யோபு 1:6 சங் 103:20 சங் 103:21 சங் 104:4 ஏசா 6:2 ஏசா 6:3 தானி 7:10 மத் 13:41 மத் 13:49 மத் 13:50 லூக் 1:19 2தெச 1:7 யூதா 1:14 |