1 | சகோதர சகோதரிகளே! நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாகவில்லை என்பது உங்களுக்கே தெரியும். | 1தெச 2:13 1தெச 1:3-10 2தெச 3:1 |
2 | உங்களிடம் வருமுன்பே பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம். இழிவாக நடத்தப்பட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் பெரும் எதிர்ப்புக்கிடையில் கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம். | அப் 5:41 அப் 16:12 அப் 16:22-24 அப் 16:37-24 2தீமோ 1:12 எபிரெ 11:36 எபிரெ 11:37 எபிரெ 12:2 எபிரெ 12:3 1பேது 2:14-16 |
3 | எங்கள் அறிவுரைகள் தவற்றையோ, கெட்ட எண்ணத்தையோ, வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவையல்ல. | 1தெச 2:5 1தெச 2:6 1தெச 2:11 1தெச 4:1 1தெச 4:2 எண் 16:15 1சாமு 12:3 அப் 20:33 அப் 20:34 2கொரி 2:17 2கொரி 4:2 2கொரி 4:5 2கொரி 7:2 2கொரி 11:13 2கொரி 12:16-18 2பேது 1:16 |
4 | நாங்கள் தகுதி உடையவர்களெனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப, நாங்கள் பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல, எங்கள் இதயங்களைச் சோதித்தறிவும் கடவுளுக்கே உகந்தவர்களாயிருக்கப் பார்க்கிறோம். | 1கொரி 7:25 எபே 3:8 1தீமோ 1:11-13 |
5 | நாங்கள் என்றும் போலியாக உங்களைப் புகழ்ந்ததேயில்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே. போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை. இதற்குக் கடவுளே சாட்சி. | யோபு 17:5 யோபு 32:21 யோபு 32:22 சங் 12:2 சங் 12:3 நீதி 20:19 நீதி 26:28 நீதி 28:23 ஏசா 30:10 மத் 22:16 2பேது 2:18 |
6 | கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. | எஸ்தர் 1:4 எஸ்தர் 5:11 நீதி 25:27 தானி 4:30 யோவா 5:41 யோவா 5:44 யோவா 7:18 யோவா 12:43 கலா 1:10 கலா 5:26 கலா 6:13 1தீமோ 5:17 |
7 | மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம். | ஆதி 33:13 ஆதி 33:14 ஏசா 40:11 எசே 34:14-16 மத் 11:29 மத் 11:30 யோவா 21:15-17 1கொரி 2:3 1கொரி 9:22 2கொரி 10:1 2கொரி 13:4 கலா 5:22 கலா 5:23 2தீமோ 2:24 2தீமோ 2:25 யாக் 3:17 |
8 | இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்: ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். | எரே 13:15-17 ரோம 1:11 ரோம 1:12 ரோம 9:1-3 ரோம 10:1 ரோம 15:29 2கொரி 6:1 2கொரி 6:11-13 கலா 4:19 பிலிப் 1:8 பிலிப் 2:25 பிலிப் 2:26 கொலோ 1:28 கொலோ 4:12 எபிரெ 13:17 |
9 | அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம். | 1தெச 1:3 அப் 18:3 அப் 20:34 அப் 20:35 1கொரி 4:12 1கொரி 9:6 1கொரி 9:15 2கொரி 6:5 2தெச 3:7-9 1தீமோ 4:10 |
10 | நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும் நேர்மையோடும் குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி! | 1தெச 1:5 1சாமு 12:3-5 அப் 20:18 அப் 20:26 அப் 20:33 அப் 20:34 2கொரி 4:2 2கொரி 5:11 2கொரி 11:11 2கொரி 11:31 |
11 | ஒரு தந்தை தம் பிள்ளைகளை நடத்துவதுபோல உங்களை நடத்தினோம். | 1தெச 4:1 1தெச 5:11 அப் 20:2 2தெச 3:12 1தீமோ 6:2 2தீமோ 4:2 தீத் 2:6 தீத் 2:9 தீத் 2:15 எபிரெ 13:22 |
12 | தம்முடைய ஆட்சியிலும் மாட்சியிலும் பங்குபெற உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்ப நடக்குமாறு உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கினோம்: உங்களை ஊக்குவித்தோம்: வற்புறுத்தினோம். இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்தவையே. | 1தெச 4:1 1தெச 4:12 கலா 5:16 எபே 4:1 எபே 5:2 எபே 5:8 பிலிப் 1:27 கொலோ 1:10 கொலோ 2:6 1பேது 1:15 1பேது 1:16 1யோவா 1:6 1யோவா 1:7 1யோவா 2:6 |
13 | கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்: அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. | 1தெச 1:2 1தெச 1:3 ரோம 1:8 ரோம 1:9 |
14 | சகோதர சகோதரிகளே! இயேசு கிறிஸ்துவின் உறவில் யூதேயாவில் வாழும் கடவுளின் சபைகளுக்கு நேர்ந்ததுபோலவே உங்களுக்கும் நேர்ந்தது. யூதர்களால் அவர்கள் துன்புறுத்தப்பட்டதுபோலவே நீங்களும் உங்கள் சொந்த இனத்தாரால் துன்புறுத்தப்பட்டீர்கள். | 1தெச 1:6 |
15 | அந்த யூதரே ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினரையும் கொன்றார்கள். எங்களையும் துரத்திவிட்டார்கள். அவர்கள் கடவுளுக்கு உகந்தவர்கள் அல்ல: மனித இனத்திற்கே எதிரிகள். | மத் 5:12 மத் 21:35-39 மத் 23:31-35 மத் 23:37-35 மத் 27:25 லூக் 11:48-51 லூக் 13:33 லூக் 13:34 அப் 2:23 அப் 3:15 அப் 4:10 அப் 5:30 அப் 7:52 |
16 | ஏனெனில், பிற இனத்தார் மீட்புப் பெறுமாறு நாங்கள் அவர்களிடம் பேசுவதைத் தடுக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களை என்றும் பெருக்கிக் கொண்டே போகிறார்கள். இறுதியில் கடவுளின் சினம் அவர்கள் மேல் வந்துவிட்டது. | அப் 11:2 அப் 11:3 அப் 11:17 அப் 11:18 அப் 13:50 அப் 14:5 அப் 14:19 அப் 17:5 அப் 17:6 அப் 17:13 அப் 18:12 அப் 18:13 அப் 19:9 அப் 21:27-31 அப் 22:21 அப் 22:22 கலா 5:11 எபே 3:8 எபே 3:13 |
17 | அன்பர்களே! நாங்கள் உள்ளத்தால் அல்ல, உடலால் மட்டுமே உங்களை விட்டுச் சிறிதுகாலம் பிரிந்து தவித்தோம். உங்கள் முகத்தைக் காண பேராவலோடு ஏங்கியிருந்தோம். | 2இரா 5:26 அப் 17:10 1கொரி 5:3 கொலோ 2:5 |
18 | ஆகையால் நாங்கள் உங்களிடம் வர விரும்பினோம். அதிலும் பவுலாகிய நான் ஒருமுறை அல்ல, இருமறை உங்களிடம் வரத் திட்டமிட்டேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்து விட்டான். | 1கொரி 16:21 கொலோ 4:18 2தெச 3:17 பிலேமோ 1:9 |
19 | நம் ஆண்டவர் இயேசுவின் வருகையின்போது, அவர்முன், உங்களைத்தானே நாங்கள் எதிர்நோக்கி இருக்கப் போகிறோம்? நீங்கள்தானே எங்களுக்கு மகிழ்ச்சியும், பெருமையோடு சூடப்போகும் வெற்றிவாகையுமாய் இருக்கப் போகிறீர்கள்? உங்களைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? | 2கொரி 1:14 பிலிப் 2:16 பிலிப் 4:1 |
20 | ஆம், உங்களால்தான் எங்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கிடைக்கும். | நீதி 17:6 1கொரி 11:7 |