35
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்: ஒருவரைக் கொலை செய்தார்கள்: ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.
36
மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.
37
தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.
38
அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், “இவன்தான் சொத்துக்கு உரியவன்: வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்: அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் “ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
39
பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.