1 | கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டவர்களாகிய வாழும் நகர இறை மக்களுக்குக் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரர் திமொத்தேயுவும் எழுதுவது: | ரோம 1:1 1கொரி 1:1 2கொரி 1:1 எபே 1:1 |
2 | நம் தந்தையாம் கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! | சங் 16:3 1கொரி 1:2 கலா 3:9 எபே 1:1 |
3 | உங்களுக்காக நாங்கள் வேண்டும் பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். | ரோம 1:8 ரோம 1:9 1கொரி 1:4 எபே 1:15 பிலிப் 1:3-5 பிலிப் 4:6 1தெச 1:2 |
4 | கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம். | கொலோ 1:9 2கொரி 7:7 எபே 1:15 1தெச 3:6 3யோவா 1:3 3யோவா 1:4 |
5 | இவை இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர்நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக அந்த எதிர்நோக்கு பற்றி அறிந்து கொண்டீர்கள். | கொலோ 1:23 கொலோ 1:27 அப் 23:6 அப் 24:15 அப் 26:6 அப் 26:7 1கொரி 13:13 1கொரி 15:19 கலா 5:5 எபே 1:18 எபே 1:19 2தெச 2:16 எபிரெ 7:19 1பேது 3:15 1யோவா 3:3 |
6 | உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் அந்நற்செய்தி உங்களை வந்தடைந்தது. கடவுளின் அருளைப்பற்றிக் கேட்டறிந்து அதன் உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். அந்நாள் முதல் உங்களிடையே அது பெருகிப் பயனளித்து வருகிறது. | கொலோ 1:23 சங் 98:3 மத் 24:14 மத் 28:19 மாற் 16:15 ரோம 10:18 ரோம 15:19 ரோம 16:26 2கொரி 10:14 |
7 | எம் அன்பார்ந்த உடன் ஊழியர் எப்பப்பிராவிடமிருந்து அதை நீங்கள் கற்றுக் கொண்டீர்கள். உங்களுக்காக உழைக்கும் அவர் கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர். | கொலோ 4:12 பிலேமோ 1:23 |
8 | தூய ஆவி உங்களுக்கு அருளிய அன்பைக் குறித்து அவர் தாம் எங்களிடம் எடுத்துரைத்தார். | கொலோ 1:4 ரோம 5:5 ரோம 15:30 கலா 5:22 2தீமோ 1:7 1பேது 1:22 |
9 | எனவே நாங்கள் இச்செய்தியைக் கேள்விப்பட்ட நாள்முதல் உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப்பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும். | கொலோ 1:3 கொலோ 1:4 கொலோ 1:6 ரோம 1:8-10 எபே 1:15 எபே 1:16 |
10 | நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையர்வளாய் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளரவேண்டும். | கொலோ 2:6 கொலோ 4:5 மீகா 4:5 ரோம 4:12 ரோம 6:4 எபே 4:1 எபே 5:2 எபே 5:15 பிலிப் 1:27 1தெச 2:12 |
11 | நீங்கள் முழு மனஉறுதியோடும் பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் உங்களுக்கு வலுவூட்ட வேண்டும். மகிழ்ச்சியோடு, | ஏசா 45:24 2கொரி 12:9 எபே 3:16 எபே 6:10 பிலிப் 4:13 |
12 | தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார். | கொலோ 3:15 கொலோ 3:17 1நாளா 29:20 சங் 79:13 சங் 107:21 சங் 107:22 சங் 116:7 தானி 2:23 எபே 5:4 எபே 5:20 |
13 | அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். | ஏசா 49:24 ஏசா 49:25 ஏசா 53:12 மத் 12:29 மத் 12:30 அப் 26:18 எபிரெ 2:14 |
14 | அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம். | மத் 20:28 அப் 20:28 ரோம 3:24 ரோம 3:25 கலா 3:13 எபே 1:7 எபே 5:2 1தீமோ 2:6 தீத் 2:14 எபிரெ 9:12 எபிரெ 9:22 எபிரெ 10:12-14 1பேது 1:19 1பேது 1:20 1பேது 3:18 1யோவா 2:2 வெளிப் 1:5 வெளிப் 5:9 வெளிப் 14:4 |
15 | அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்: படைப்பனைத்திலும் தலைப்பேறு. | யாத் 24:10 எண் 12:8 எசே 1:26-28 யோவா 1:18 யோவா 14:9 யோவா 15:24 2கொரி 4:4 2கொரி 4:6 பிலிப் 2:6 எபிரெ 1:3 |
16 | ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. | கொலோ 1:15 சங் 102:25-27 ஏசா 40:9-12 ஏசா 44:24 யோவா 1:3 1கொரி 8:6 எபே 3:9 எபிரெ 1:2 எபிரெ 1:10-12 எபிரெ 3:3 எபிரெ 3:4 |
17 | அனைத்துக்கும் முந்தியர் அவரே: அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. | கொலோ 1:15 நீதி 8:22 நீதி 8:23 ஏசா 43:11-13 ஏசா 44:6 மீகா 5:2 யோவா 1:1-3 யோவா 8:58 யோவா 17:5 1கொரி 8:6 எபிரெ 13:8 வெளிப் 1:8 வெளிப் 1:11 வெளிப் 1:17 வெளிப் 2:8 |
18 | திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். | கொலோ 1:24 கொலோ 2:10-14 1கொரி 11:3 எபே 1:10 எபே 1:22 எபே 1:23 எபே 4:15 எபே 4:16 எபே 5:23 |
19 | தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். | கொலோ 2:3 கொலோ 2:9 கொலோ 3:11 மத் 11:25-27 லூக் 10:21 யோவா 1:16 யோவா 3:34 எபே 1:3 எபே 1:23 எபே 4:10 |
20 | சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். | கொலோ 1:21 கொலோ 1:22 லேவி 6:30 சங் 85:10 சங் 85:11 ஏசா 9:6 ஏசா 9:7 எசே 45:17-20 தானி 9:24-26 மீகா 5:2 மீகா 5:5 சகரி 9:9 சகரி 9:10 லூக் 2:14 அப் 10:30 ரோம 5:1 2கொரி 5:19-21 எபே 2:13-17 எபிரெ 13:20 எபிரெ 13:21 1யோவா 4:9 1யோவா 4:10 |
21 | முன்பு நீங்கள் இறைவனோடு உறவற்றவர்களாய் இருந்தீர்கள்: அவரைப் பகைக்கும் உள்ளம் உடையோராய்ச் தீச்செயல்கள் புரிந்து வந்தீர்கள். | ரோம 1:30 ரோம 5:9 ரோம 5:10 ரோம 8:7 ரோம 8:8 1கொரி 6:9-11 எபே 2:1 எபே 2:2 எபே 2:12 எபே 2:19 எபே 4:18 தீத் 3:3-7 யாக் 4:4 |
22 | இப்பொழுது, நீங்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதோராகவும் தம்முன் விளங்குமாறு ஊனுடல் எடுத்த தம் மகனது சாவின் வழியாகக் கடவுள் உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். | ரோம 7:4 எபே 2:15 எபே 2:16 எபிரெ 10:10 எபிரெ 10:20 |
23 | நீங்கள் நற்செய்தியைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள். உலகெங்கும் படைப்பனைத்துக்கும் நற்செய்தி பறைசாற்றப்பட்டுள்ளது. பவுலாகிய நான் இந்நற்செய்தியை அறிவிக்கும் திருத்தொண்டன் ஆனேன். | சங் 92:13 சங் 92:14 சங் 125:5 எசே 18:26 ஓசி 6:3 ஓசி 6:4 செப் 1:6 மத் 24:13 லூக் 8:13-15 லூக் 22:32 யோவா 8:30-32 யோவா 15:9 யோவா 15:10 அப் 11:23 அப் 14:22 ரோம 2:7 கலா 4:11 கலா 5:7 கலா 6:9 1தெச 3:5 எபிரெ 3:6 எபிரெ 3:14 எபிரெ 4:14 எபிரெ 10:38 1பேது 1:5 2பேது 2:18-22 1யோவா 2:27 வெளிப் 2:10 |
24 | இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். | மத் 5:11 மத் 5:12 அப் 5:41 ரோம 5:3 2கொரி 7:4 எபே 3:1 எபே 3:13 பிலிப் 2:17 பிலிப் 2:18 யாக் 1:2 |
25 | என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன். | கொலோ 1:23 1தெச 3:2 1தீமோ 4:6 |
26 | நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. | ரோம 16:25 ரோம 16:26 1கொரி 2:7 எபே 3:3-10 |
27 | மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். | 1கொரி 2:12-14 2கொரி 2:14 2கொரி 4:6 கலா 1:15 கலா 1:16 |
28 | கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம். | அப் 3:20 அப் 5:42 அப் 8:5 அப் 8:35 அப் 9:20 அப் 10:36 அப் 11:20 அப் 13:38 அப் 17:3 அப் 17:18 ரோம 16:25 1கொரி 1:23 1கொரி 15:12 2கொரி 4:5 2கொரி 10:14 எபே 3:8 பிலிப் 1:15-18 1தீமோ 3:16 |
29 | இதற்காகவே வல்லமையோடு என்னுள் செயல்படும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப வருந்தி பாடுபட்டு உழைக்கிறேன். | கொலோ 4:12 1கொரி 15:10 2கொரி 5:9 2கொரி 6:5 2கொரி 11:23 பிலிப் 2:16 1தெச 2:9 2தெச 3:8 2தீமோ 2:10 வெளிப் 2:3 |