எரேமியா 13:15-17 - WCV
15
செவிகொடுத்துக் கேளுங்கள்! செருக்குறாதீர்கள்: ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.
16
உங்கள் கடவுளாகிய ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இருள்படரச் செய்யுமுன்பும், உங்கள் பாதங்கள் இருளடைந்த மலைகளில் இடறுமுன்பும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள். நீங்கள் ஒளியை எதிர்பார்த்து நிற்கும் போதே இருளின் நிழல்கள் சூழச்செய்வார்: இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.
17
ஆனால் நீங்கள் இதற்குச் செவி கொடுக்காவிட்டால், உங்கள் செருக்கை முன்னிட்டு என் உள்ளம் மறைவில் அழும்: அழுகை மிகுதியால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்: எனெனில், ஆண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது.