இணை வசன வேதாகமம்

பிலிப்பியர் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1இறுதியாக, என் சகோதர சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடையுங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையாயில்லை: உங்கள் நன்மைக்காகவே எழுதுகிறேன்.பிலிப் 4:8 2கொரி 13:11 எபே 6:10 1தெச 4:1 1பேது 3:8
2அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்: அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். “உறுப்பு சிதைப்போரைக்” குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.நீதி 26:11 ஏசா 56:10 ஏசா 56:11 மத் 7:6 மத் 7:15 மத் 24:10 கலா 5:15 2தீமோ 4:14 2தீமோ 4:15 2பேது 2:22 வெளிப் 22:15
3ஏனெனில், உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்.ஆதி 17:5-11 உபா 10:16 உபா 30:6 எரே 4:4 எரே 9:26 ரோம 2:25-29 ரோம 4:11 ரோம 4:12 கொலோ 2:11
4உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரைவிட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும்.2கொரி 11:18-22
5நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்: இஸ்ரயேல் இனத்தவன்: பென்யமின் குலத்தவன்: எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்: திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்.ஆதி 17:12 லூக் 2:21 யோவா 7:21-24
6திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன்.2சாமு 21:2 2இரா 10:16 அப் 21:20 ரோம 10:2 கலா 1:13 கலா 1:14
7ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.பிலிப் 3:4-6 பிலிப் 3:8-10 ஆதி 19:17 ஆதி 19:26 யோபு 2:4 நீதி 13:8 நீதி 23:23 மத் 13:44-46 மத் 16:26 லூக் 14:26 லூக் 14:33 லூக் 16:8 லூக் 17:31-33 அப் 27:18 அப் 27:19 அப் 27:38 கலா 2:15 கலா 2:16 கலா 5:2-5
8உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருகிறேன்.எண் 14:30 சங் 126:6 லூக் 11:20 1கொரி 9:10 1யோவா 2:19
9கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது: நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.ஆதி 7:23 உபா 19:3 உபா 19:4 எபிரெ 6:18 1பேது 3:19 1பேது 3:20
10கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.பிலிப் 3:8 1யோவா 2:3 1யோவா 2:5
11அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.சங் 49:7 அப் 27:12 ரோம 11:14 1கொரி 9:22 1கொரி 9:27 2கொரி 11:3 1தெச 3:5 2தெச 2:3
12நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.பிலிப் 3:13 பிலிப் 3:16 சங் 119:5 சங் 119:173-176 ரோம 7:19-24 கலா 5:17 1தீமோ 6:12 யாக் 3:2
13அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு,பிலிப் 3:8 பிலிப் 3:12 பிலிப் 1:18-21 பிலிப் 4:11-13
14பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.லூக் 16:16 2கொரி 4:17 2கொரி 4:18 2கொரி 5:1 2தீமோ 4:7 2தீமோ 4:8 வெளிப் 3:21
15எனவே நம்மில் நிறைவு அடைந்தோர் யாவருக்கும் இத்தகைய மனநிலையே இருத்தல் வேண்டும். எதைப்பற்றியாவது நீங்கள் மாறுபட்டக் கருத்துக் கொண்டிருந்தால் அதைப்பற்றிய உண்மையைக் கடவுளே உங்களுக்கு வெளிப்படுத்துவார்.ரோம 15:1 1கொரி 2:6 1கொரி 14:20 கொலோ 1:28 கொலோ 4:12 2தீமோ 3:17 எபிரெ 5:14 யாக் 1:4 1யோவா 2:5
16நாம் எந்த நிலையை அடைந்திருந்தாலும், அதற்கேற்பத் தொடர்ந்து நடப்போம்.கலா 5:7 எபிரெ 10:38 எபிரெ 10:39 2பேது 2:10-20 வெளிப் 2:4 வெளிப் 2:5 வெளிப் 3:3
17சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள்.பிலிப் 4:9 1கொரி 4:16 1கொரி 10:32 1கொரி 10:33 1கொரி 11:1 1தெச 1:6 1தெச 2:10-14 2தெச 3:7 2தெச 3:9 1தீமோ 4:12 எபிரெ 13:7 1பேது 5:3
18கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன்.ஏசா 8:11 தானி 4:37 கலா 2:14 எபே 4:17 2தெச 3:11 2பேது 2:10 யூதா 1:13
19அழிவே அவர்கள் முடிவு: வயிறே அவர்கள் தெய்வம்: மானக்கேடே அவர்கள் பெருமை: அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.மத் 25:41 லூக் 12:45 லூக் 12:46 2கொரி 11:15 2தெச 2:8 2தெச 2:12 எபிரெ 6:6-8 2பேது 2:1 2பேது 2:3 2பேது 2:17 யூதா 1:4 யூதா 1:13 வெளிப் 19:20 வெளிப் 20:9 வெளிப் 20:10 வெளிப் 21:8 வெளிப் 22:15
20நமக்கோ விண்ணகமே தாய்நாடு: அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்.பிலிப் 1:18-21 சங் 16:11 சங் 17:15 சங் 73:24-26 நீதி 15:24 மத் 6:19-21 மத் 19:21 லூக் 12:21 லூக் 12:32-34 லூக் 14:14 2கொரி 4:18 2கொரி 5:1 2கொரி 5:8 எபே 2:6 எபே 2:19 கொலோ 1:5 கொலோ 3:1-3 எபிரெ 10:34 எபிரெ 10:35 1பேது 1:3 1பேது 1:4
21அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.1கொரி 15:42-44 1கொரி 15:48-54

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.