1 | ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி: நீங்களே, என் வெற்றி வாகை: அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள். | பிலிப் 3:20 பிலிப் 3:21 2பேது 3:11-14 |
2 | ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி எயோதியாவைக் கேட்டுக்கொள்கிறேன்: சிந்திக்காவை கெஞ்சிக் கேட்கிறேன். | பிலிப் 2:2 பிலிப் 2:3 பிலிப் 3:16 ஆதி 45:24 சங் 133:1-3 மாற் 9:50 ரோம 12:16-18 1கொரி 1:10 எபே 4:1-8 1தெச 5:13 எபிரெ 12:14 யாக் 3:17 யாக் 3:18 1பேது 3:8-11 |
3 | என் உண்மையான தோழரே, அவர்களுக்கு உதவி செய்யுமாறு உம்மிடம் வேண்டுகிறேன். ஏனெனில் அவர்கள் கிளமந்தோடும், மற்ற உடன் உழைப்பாளரோடும் என்னோடும் சேர்ந்து நற்செய்திக்காகப் போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வோரின் நூலில் எழுதப்பட்டுள்ளன. | பிலிப் 4:2 ரோம 12:1 பிலேமோ 1:8 பிலேமோ 1:9 |
4 | ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். | பிலிப் 3:1 ரோம 12:12 |
5 | கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். | மத் 5:39-42 மத் 6:25 மத் 6:34 லூக் 6:29-35 லூக் 12:22-30 லூக் 21:34 1கொரி 6:7 1கொரி 7:29-31 1கொரி 8:13 1கொரி 9:25 தீத் 3:2 எபிரெ 13:5 எபிரெ 13:6 1பேது 1:11 |
6 | எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். | தானி 3:16 மத் 6:25-33 மத் 10:19 மத் 13:22 லூக் 10:41 லூக் 12:29 1கொரி 7:21 1கொரி 7:32 1பேது 5:7 |
7 | அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். | பிலிப் 1:2 எண் 6:26 யோபு 22:21 யோபு 34:29 சங் 29:11 சங் 85:8 ஏசா 26:3 ஏசா 26:12 ஏசா 45:7 ஏசா 48:18 ஏசா 48:22 ஏசா 55:11 ஏசா 55:12 ஏசா 57:19-21 எரே 33:6 லூக் 1:79 லூக் 2:14 யோவா 14:27 யோவா 16:33 ரோம 1:7 ரோம 5:1 ரோம 8:6 ரோம 14:17 ரோம 15:13 2கொரி 13:11 கலா 5:22 கொலோ 3:15 2தெச 3:16 எபிரெ 13:20 வெளிப் 1:4 |
8 | இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். | பிலிப் 3:1 |
9 | நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார். | பிலிப் 3:17 1கொரி 10:31-33 1கொரி 11:1 1தெச 1:6 1தெச 2:2-12 1தெச 2:14-12 1தெச 4:1-8 2தெச 3:6-10 |
10 | என்னைப்பற்றிய அக்கறை இப்பொழுதாவது மீண்டும் உங்களிடையே எழுந்தது கண்டு ஆண்டவர் அருளால் நான் பெரிதும் மகிழ்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை. | பிலிப் 1:1 பிலிப் 1:3 2கொரி 7:6 2கொரி 7:7 |
11 | எனக்கு ஏதோ குறைவாய் இருப்பதால் இவ்வாறு சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். ஏனெனில் எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக் கொண்டுள்ளேன். | 1கொரி 4:11 1கொரி 4:12 2கொரி 6:10 2கொரி 8:9 2கொரி 11:27 |
12 | எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்: வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். | 1கொரி 4:9-13 2கொரி 6:4-10 2கொரி 10:1 2கொரி 10:10 2கொரி 11:7 2கொரி 11:27 2கொரி 12:7-10 |
13 | எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. | யோவா 15:4 யோவா 15:5 யோவா 15:7 2கொரி 3:4 2கொரி 3:5 |
14 | ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்குகொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது. | 1இரா 8:18 2நாளா 6:8 மத் 25:21 3யோவா 1:5-8 |
15 | பிலிப்பியர்களே, நான் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கின காலத்தில், மாசிதோனியாவை விட்டுச் சென்றபிறகு, உங்களைத்தவிர வேறெந்தத் திருச்சபையும் என் வரவு செலவில் பங்கேற்கவில்லை. இதை நீங்களும் அறிவீர்கள். | 2இரா 5:16 2இரா 5:20 2கொரி 11:8-12 2கொரி 12:11-15 |
16 | ஏனெனில் நான் தெசலோனிக்காவில் இருந்தபோதுகூட என் தேவையை நிறைவுசெய்ய ஒரு முறை மட்டுமல்ல, இரு முறை உதவி அனுப்பினீர்கள். | 1தெச 2:9 |
17 | நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை: மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன். | பிலிப் 4:11 மல்கி 1:10 அப் 20:33 அப் 20:34 1கொரி 9:12-15 2கொரி 11:16 1தெச 2:5 1தீமோ 3:3 1தீமோ 6:10 தீத் 1:7 1பேது 5:2 2பேது 2:3 2பேது 2:15 யூதா 1:11 |
18 | நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்பொழுது என்னிடம் நிறையவே இருக்கிறது. நீங்கள் அனுப்பியவற்றை எப்பப்பிராதித்துவிடமிருந்து பெற்றுக்கொண்டு நிறைவுற்றிருக்கிறேன். அவை நறுமணம் வீசும் காணிக்கையும் கடவுளுக்கு ஏற்புடைய, உகந்த பலியுமாகும். | பிலிப் 4:12 2தெச 1:3 |
19 | என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். | 2சாமு 22:7 2நாளா 18:13 நெகே 5:19 தானி 6:22 மீகா 7:7 யோவா 20:17 யோவா 20:27 ரோம 1:8 2கொரி 12:21 பிலேமோ 1:4 |
20 | நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். | பிலிப் 1:11 சங் 72:19 சங் 115:1 மத் 6:9 மத் 6:13 ரோம 11:36 ரோம 16:27 கலா 1:5 எபே 3:21 1தீமோ 1:17 யூதா 1:25 வெளிப் 1:6 வெளிப் 4:9-11 வெளிப் 5:12 வெளிப் 7:12 வெளிப் 11:13 வெளிப் 14:7 |
21 | கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் இறைமக்கள் யாவருக்கும் வாழ்த்து கூறுங்கள். என்னோடிருக்கிற சகோதரர் சகோதரிகள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். | ரோம 16:3-16 |
22 | இறைமக்கள் எல்லாரும், சிறப்பாகச் சீசரின் அரண்மனைப் பணியாளர்களும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். | ரோம 16:16 2கொரி 13:13 எபிரெ 13:24 1பேது 5:13 3யோவா 1:14 |
23 | ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! | ரோம 16:20 ரோம 16:24 2கொரி 13:14 |