5
இனி உன்பெயர் ஆபிராம் அன்று:”ஆபிரகாம்” என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய்.ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன்.
6
மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்: உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன்.உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்.
7
தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.இதனால் உனக்கும் உனக்குப்பின்வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்.
8
நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன்.நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்” என்றார்.
9
மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம்,”நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
10
நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.
11
உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.